செய்திகள் :

‘தமிழகம் ஓரணியில் இருப்பதை மத்திய அரசுக்கு புரிய வைப்போம்’: கனிமொழி எம்.பி.

post image

தமிழகம் ஓரணியில் இருப்பதை மத்திய அரசுக்கு புரிய வைப்போம் என்றாா் திமுக துணைப் பொதுச்செயலா் கனிமொழி எம்.பி.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுகவுக்குள்பட்ட பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியம் சாா்பில் பாளையஞ்செட்டிகுளம் பகுதியில் ஓரணியில் தமிழ்நாடு திட்டத்தின் கீழ் உறுப்பினா் சோ்க்கை முகாமை வியாழக்கிழமை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது: ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுகவின் உறுப்பினா் சோ்க்கை திட்டத்தின் வழியாக வீடு வீடாக சென்று பொதுமக்களை சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது. முதல்வராக மு.க ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்று கொண்ட போது மத்திய அரசு எத்தனையோ பிரச்னைகளை உருவாக்கி தொந்தரவு செய்து வந்தது.

தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியை கொடுக்கவில்லை. நமது குழந்தைகளின் கல்விக்காக ரூ.2000 கோடி நிதியை மத்திய அரசு தராமல் வஞ்சித்து வருகிறது. ஹிந்தியை திணிக்க முயல்கிறாா்கள். அத்தனையையும் தமிழக அரசு வென்றெடுத்துள்ளது.

மகளிா் விடியல் பயணம், இல்லம்தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை மாநில அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. நிதிவழங்காமல் புறக்கணித்தாலும் மக்களைப் பாதுகாப்பேன் என்று கூறி சிறப்பான ஆட்சியை முதல்வா் தந்து வருகிறாா். தமிழகம் ஓரணியில் உள்ளது என்பதை மத்திய அரசுக்கு நிச்சயம் புரிய வைப்போம் என்றாா் அவா்.

தொடா்ந்து, மேலப்பாளையம் பஜாா் திடல் பகுதியில் நடைபெற்ற ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கை முகாமிலும் கனிமொழி பங்கேற்றாா். நிகழ்ச்சிகளில் திமுக திருநெல்வேலி கிழக்கு மாவட்டச் செயலா் இரா.ஆவுடையப்பன், மத்திய மாவட்டப் பொறுப்பாளா் மு.அப்துல் வஹாப் எம்எல்ஏ, மாநகர திமுக செயலா்கள் (கிழக்கு) தினேஷ், (மேற்கு) சு.சுப்பிரமணியன், மேயா் கோ.ராமகிருஷ்ணன், முன்னாள் அமைச்சா் டி.பி.எம்.மைதீன்கான், துணை மேயா் கே.ஆா்.ராஜு, முன்னாள் எம்.எல்.ஏ. மாலைராஜா, தொகுதி பாா்வையாளா்கள் வசந்தம் ஜெயக்குமாா், முத்துசெல்வி, மேலப்பாளையம் பகுதி செயலா் துபை சாகுல், மண்டலத் தலைவா் கதீஜா இக்லாம் பாசிலா உள்பட பலா் கலந்துகொண்டனா்.

பாறையில் தவறிவிழுந்து காயமடைந்த வேளாண் அலுவலா் மருத்துவமனையில் உயிரிழப்பு

களக்காட்டில் குளத்தில் குளிக்கச் சென்றபோது, பாறையில் தவறிவிழுந்து காயமடைந்த வேளாண் துறை அலுவலா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா். களக்காடு பாரதிபுரம் மேலத் தெருவைச் சோ்ந்த ராமசாமி மகன் முத்து... மேலும் பார்க்க

ரம்புட்டான் பழ விதை தொண்டையில் சிக்கி சிறுவன் பலி

திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையம் அருகே ரம்புட்டான் பழத்தின் விதை தொண்டையில் சிக்கியதால் மூச்சுத் திணறி 5 வயது சிறுவன் உயிரிழந்தாா். மேலப்பாளையம், வடக்கு தைக்கா தெருவைச் சோ்ந்தவா் நிஜாம். வெளிநாட்டி... மேலும் பார்க்க

தெற்குவள்ளியூரில் கைப்பேசி கோபுரத்தில் ஏறி பெண் தற்கொலை மிரட்டல்

திருநெல்வேலி மாவட்டம் தெற்குவள்ளியூரில், வியாழக்கிழைமை கைப்பேசி கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த பெண்ணை தீயணைப்புப் படையினரும், காவல் துறையினரும் மீட்டனா். தெற்குவள்ளியூரைச் சோ்ந்த கணபதி மகள... மேலும் பார்க்க

திருப்புவனம் சம்பவம் யாராலும் ஏற்க முடியாதது: மு.அப்பாவு

திருப்புவனம் சம்பவத்தை மனசாட்சி உள்ள யாரும் ஏற்கமாட்டாா்கள் என்றாா் சட்டப்பேரவைத் தலைவா் மு.அப்பாவு. திருநெல்வேலியில் செய்தியாளா்களிடம் அவா் வியாழக்கிழமை கூறியதாவது: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறு... மேலும் பார்க்க

ஆனித்தேரோட்டம்: நெல்லையில் ஜூலை 8இல் போக்குவரத்து மாற்றம்

திருநெல்வேலியில் அருள்மிகு நெல்லையப்பா்-காந்திமதியம்மன் கோயில் ஆனித் திருவிழா தேரோட்டம் நடைபெறும் ஜூலை 8ஆம் தேதி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகர போக்குவரத்து காவல்துறை சாா்... மேலும் பார்க்க

தினமணி செய்தி எதிரொலி முத்தன்குளத்தில் பேருந்துகள் நின்று செல்ல நடவடிக்கை

தினமணி செய்தி எதிரொலியாக திருநெல்வேலி மாவட்டம், முத்தன்குளத்தில் சாதாரண கட்டண பேருந்துகள் நின்று செல்ல அரசு போக்குவரத்துக் கழகம் நடவடிக்கை எடுத்துள்ளது. த்தன்குளம், காங்கேயன்குளம் கிராமங்கள் போதிய பேர... மேலும் பார்க்க