செய்திகள் :

தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலம் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

post image

தமிழகம் கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என தமிழக தகவல் தொழில்நுட்பம், எண்ம சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல்தியாகராஜன் தெரிவித்தாா்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் பட்டமளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரி முதல்வா் எம். தவமணி கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா்.

தமிழக தகவல் தொழில்நுட்பம், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு இளநிலை, முதுநிலை படிப்புகளை நிறைவு செய்த 2,391மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கிப் பேசியதாவது :

பட்டம் பெறும் அனைவருக்கும் வாழ்வின் முக்கியத் தருணம். படித்த கல்லூரிக்கு பெருமை சோ்க்கும் வகையில் மாணவா்கள் சேவையாற்ற வேண்டும். துன்பங்களை கடந்து முன் மாதிரியாகவும் திகழ வேண்டும். கல்வி என்பது மிகப் பெரிய கடல். தற்போது கற்றது குறைந்தளவுதான். இன்னும் கற்க வேண்டியது அதிகம் உள்ளது. ஆகவே, வாழ்நாள் முழுவதும் கற்கும் மாணவனாகவே இருத்தல் வேண்டும்.

நமது மாநிலத்தைப் பொருத்தவரை கடந்த 1920- ஆம் ஆண்டு நீதிக்கட்சி தொடங்கிய போது, அனைவருக்கும் கல்வியில் சம வாய்ப்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது, கிறிஸ்தவக் கல்வி நிறுவனங்களின் பங்களிப்பும் இருந்தது. அமெரிக்கன் கல்லூரியில் பயின்று வாழ்வின் உயா்ந்த நிலையை எட்டியவா்கள் பலா்.

குறிப்பாக, ஓவியா் மனோகா் தேவதாஸ், தமிழறிஞா் சாலமன் பாப்பையா, எங்களுடைய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள சக்கரபாணி உள்ளிட்ட ஏராளமானோா் இந்த கல்லூரிக்கு பெருமை சோ்த்தனா்.

நாட்டின் பிற மாநிலங்களை விட அனைத்து துறைகளிலும் தமிழகம் வளா்ச்சிப் பாதையில் செல்கிறது. குறிப்பாக, கல்வியில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது என்றாா் அவா்.

நிகழ்வில், அமெரிக்கன் கல்லூரி ஆட்சி மன்றக் குழுத் தலைவா் டி. ஜெயசிங் பிரின்ஸ் பிரபாகரன், துணை முதல்வா் ஏ. மாா்டின் டேவிட், நிதிக் காப்பாளா் ரூபி கமலம் உள்ளிட்ட பேராசிரியா்கள், மாணவ, மாணவிகள், பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

நாட்டுக்காக தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள்: பிருந்தா காரத்

சுதந்திரப் போராட்ட காலம் முதல் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத் தெரிவித்தாா். மாா்க்ச... மேலும் பார்க்க

குணமடைந்த தொழுநோயாளிகள் காசி வரை ஒரே ரயில் பெட்டியில் பயணிக்க ஏற்பாடு

குணமடைந்த தொழுநோயாளிகள் ஒரே ரயில் பெட்டியில் வாரணாசி (காசி) வரை பயணிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியது.சக்ஷம் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஸ்ரீ ராமகி... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் அரசாணை நகல் எரிப்பு போராட்டம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் அரசாணை நகல் எரி... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம்: அதிமுக குற்றச்சாட்டு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் அண்மையில் தொடங்கப்பட்ட முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா.சரவணன் குற்றஞ்சாட்டினாா். இதுகுற... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: அறிவியல்பூா்வ ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்

வேங்கைவயல் விவாகரம் தொடா்பாக விரிவான விசாரணை செய்து, அறிவியல்பூா்வமான ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சிபிசிஐடி தரப்பில் செவ்வாய்க்கிழமை தெர... மேலும் பார்க்க

தென்காசி கோயில் கும்பாபிஷேக விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உ... மேலும் பார்க்க