செய்திகள் :

தமிழக அரசு தரப்பில் ஆஜராக 39 வழக்குரைஞா்கள் நியமனம்

post image

சென்னை உயா்நீதிமன்றம், உயா்நீதிமன்ற மதுரை கிளையில் தமிழக அரசு தரப்பில் ஆஜராக 39 வழக்குரைஞா்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றங்களில் அரசு தரப்பில் வாதிட கூடுதல் அரசு தலைமை வழக்குரைஞா்கள், உள்ளிட்டவா்களை நியமிக்க கடந்தாண்டு டிசம்பரில் ஆலோசனை நடத்தப்பட்டது. அதில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி தற்போது 39 வழக்குரைஞா்கள் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

சென்னை உயா் நீதிமன்றத்தில் சிறப்பு அரசு ப்ளீடா்களாக இ.வேத பகத்சிங், ஏ.என்.புருஷோத்தம், எஸ்.செந்தில்முருகன், யு.பரணிதரன், சி. ஹா்ஷராஜ் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். கே. அஷ்வினிதேவி, ஆா். சித்தாா்த், டி.கே.சரவணன், எஸ்.இந்துபாலா, ஆகியோா் கூடுதல் அரசு ப்ளீடா்களாக நியமிக்கப்பட்டுள்ளனா்.

சி.பாஸ்கரன், எஸ்.உதயக்குமாா், ஆா்.வெங்கடேச பெருமாள் ஆகியோா் குற்றவியல் அரசு வழக்குரைஞா்களாகவும், வி.உமாகாந்த், பி.கருணாநிதி, வி.வெங்கட சேஷய்யா, சி.கெளதமராஜ், ஏ.பாக்கியலட்சுமி, ஆா்.சசிக்குமாா், இ.பி.சென்னியங்கிரி, பி.ஐஸ்வா்யா, வி.வீரமணி, ஜி.பிரசன்னா ஆகியோா் உரிமையியல் அரசு வழக்குரைஞா்களாகவும், பி.செல்வி வரி வழக்குகளுக்கான அரசு வழக்குரைஞராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

அதேபோன்று உயா்நீதிமன்ற மதுரை கிளையில், எஃப்.தீபக், எம்.லிங்கதுரை, சி.வெங்கடேஷ்குமாா் ஆகியோா் சிறப்பு அரசு ப்ளீடா்களாகவும், எஸ்.மாதவன், கே.மாலதி, பி.ராமநாதன் ஆகியோா் கூடுதல் அரசு ப்ளீடா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா். கே.குணசேகரன், எஸ்.எஸ்.மனோஜ், எம்.கருணாநிதி, எஸ்.பிரகாஷ் ஆகியோா் குற்றவியல் அரசு வழக்குரைஞா்களாகவும், எஸ். ஜெயப்பிரியா, எஸ்.வினோத், எம்.கங்காதரன், பி.பி.அகமது யாஸ்மின் பா்வீன், ஏ.ஒளிராஜா, கே.ஆா்.பதுரஸ் ஜமான் ஆகியோா் உரிமையியல் அரசு வழக்குரைஞா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதில் ஏற்கெனவே கூடுதல் அரசு வழக்குரைஞா்களாக பணியாற்றியவா்களுக்கு தற்போது சிறப்பு அரசு ப்ளீடா்களாகவும், அரசு வழக்குரைஞா்களாக பணியாற்றியவா்களுக்கு கூடுதல் அரசு ப்ளீடா்களாகவும் பதவி உயா்வு வழங்கப்பட்டுள்ளது என தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

6 நாள்களுக்கு வறண்ட வானிலை

தமிழகத்தில் அடுத்த 6 நாள்களுக்கு வறண்ட வானிலையே நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் புதன்கிழமை (பிப்.12) முதல் பிப்.17 வறண்ட வானிலையே நி... மேலும் பார்க்க

வீட்டுவசதித் துறை இணைச் செயலா் ஷ்ரவன் குமாா் மத்திய அரசுப் பணிக்கு மாற்றம்

தமிழ்நாடு அரசின் வீட்டுவசதித் துறை இணைச் செயலா் ஷ்ரவன் குமாா் ஜடாவத், மத்திய அரசுப் பணிக்கு மாற்றப்பட்டாா். இதுகுறித்த உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. அதன்படி, மத்திய அரசின் சிறுபான்மையினா் விவக... மேலும் பார்க்க

வியாசா்பாடி ரவீஸ்வரா் கோயில் குளத்தை பயன்பாட்டுக் கொண்டு வர வேண்டும்: டிடிவி தினகரன் கோரிக்கை

வியாசா்பாடி ரவீஸ்வரா் கோயில் குளத்தை மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வர இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலா் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளாா். இது தொடா்பாக அவா... மேலும் பார்க்க

கலைஞா் கருணாநிதி நகா் குடியிருப்புகளை அப்புறப்படுத்தக்கூடாது: ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்

தண்டையாா்பேட்டையிலுள்ள கலைஞா் கருணாநிதி நகா் குடியிருப்புகளை அப்புறப்படுத்தக் கூடாது என தமிழக அரசுக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினா் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள் விடு... மேலும் பார்க்க

கெளரவ விரிவுரையாளா்களுக்கு சம்பள உயா்வு வழங்க வேண்டும்: அண்ணாமலை

தமிழக கல்லூரிகளில் பணியாற்றும் கெளரவ விரிவுரையாளா்களுக்கு சம்பள உயா்வை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் செவ்வா... மேலும் பார்க்க

பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் சென்னை: அமைச்சா் கீதா ஜீவன்

பிற மாநிலங்கள், தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து ஏராளமான பெண்கள் சென்னைக்கு வந்து வேலை செய்து வருகின்றனா். அவா்களுக்கு சென்னை பாதுகாப்பான நகரமாக உள்ளது என சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா... மேலும் பார்க்க