செய்திகள் :

தமிழக காவலர்கள் மீது கல்வீச்சு: வடமாநில தொழிலாளர்களுக்கு சிறை!

post image

பொன்னேரி அருகே காட்டுப்பள்ளியில் காவலர்கள் மீது கற்களை வீசி வன்முறை தாக்குதலில் ஈடுபட்ட வடமாநிலத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டு 29 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொன்னேரி அருகே காட்டுப்பள்ளி பகுதியில் வடமாநிலத்தவர் குடியிருப்பில் வட மாநில தொழிலாளர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது இறப்புக்கு நீதி கேட்டும், இழப்பீடு கேட்டும் 1000-க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், இழப்பீடு கேட்டு சகத் தொழிலாளர்கள் காவல்துறை மீது நேற்று கல்வீச்சு தாக்குதலில் ஈடுபட்டனர்.

இதனால், காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டு வீசியும், தடியடி நடத்தியும் தொழிலாளர்களை விரட்டி அடித்தனர். இதில், துணை ஆணையர் உள்பட 10-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் காயமடைந்தனர்.

இந்தச் சம்பவத்தில், சக தொழிலாளி உயிரிழப்புக்கு இழப்பீடு கேட்டு நேற்று போராட்டம் நடத்தியபோது காவலர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தியவர்களில் 100-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டு 29 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் சிறையில் அடைத்தனர்.

முன்னதாக, திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் இயங்கி வரும் எல் அண்ட் டி கப்பல் கட்டும் நிறுவனத்தில் ஒப்பந்த தொழிலாளராக வேலைபார்த்து வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த அமர் பிரசாத், திங்கள்கிழமை நள்ளிரவு அங்குள்ள வடமாநில தொழிலாளர் குடியிருப்பில் வீட்டின் மாடியில் ஏறும்போது தவறி விழுந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், வட மாநில தொழிலாளி உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும், அவருக்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனக் கூறி 1000-க்கும் மேற்பட்ட வட மாநில தொழிலாளர்கள் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்குவதாகவும் உடலை சொந்த ஊர் கொண்டு செல்லும் செலவையும் ஏற்றுக்கொள்வதாக ஒப்பந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Stones thrown at Tamil Nadu police: Northern State workers jailed!

இதையும் படிக்க :மேட்டூர் அணை நீர்மட்டம் 2-வது நாளாக 120 அடியாக நீடிக்கிறது!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு: உபரி நீர் மதகுகள் மூடல்!

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு எதிரொலியால் உபரி நீர் போக்கி மதகுகள் மூடப்பட்டன.கர்நாடக மாநில அணைகளின் உபரி நீர்வரத்து காரணமாக நேற்று முன்தினம் நடப்பு ஆண்டில் 6-வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. ... மேலும் பார்க்க

பிரிட்டன் அமைச்சரைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்!

அரசு முறை பயணமாகப் பிரிட்டன் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின் பிரிட்டன் அமைச்சர் கேத்தரின் வெஸ்ட்டை சந்தித்து ஆலோசனை நடத்தினார். மேலும் பார்க்க

தமிழகத்தில் வெப்பநிலை இன்று இயல்பைவிட சற்று அதிகரிக்கும்

தமிழகத்தில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வியாழக்கிழமை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அந்த மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்தி... மேலும் பார்க்க

பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு சிறப்பு தகுதித் தோ்வு: பள்ளிக் கல்வித் துறை ஆலோசனை

ஆசிரியா் பணியில் தொடருவதற்கும், பதவி உயா்வு பெறுவதற்கும் ஆசிரியா் தகுதித் தோ்வில் (டெட்) தோ்ச்சி பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் தீா்ப்பளித்த நிலையில், தமிழக அரசுப் பள்ளிகளில் 2011-ஆம் ஆண்டுக்கு முன்... மேலும் பார்க்க

பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள்: பரிந்துரைகளைச் சமா்ப்பிக்க உத்தரவு

பிளஸ் 2 பொதுத் தோ்வுக்கு புதிய மையங்கள் அமைக்கப்படவுள்ள பள்ளிகளின் விவரங்களை செப்.15-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என தோ்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் க.சசிக... மேலும் பார்க்க

மழைநீா் வடிகாலில் விழுந்து பெண் உயிரிழப்பு - இபிஎஸ் கண்டனம்

சென்னை சூளைமேடு பகுதியில் மூடப்படாமல் இருந்த மழைநீா் வடிகால் பள்ளத்தில் விழுந்து பெண் இறந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ் தள... மேலும் பார்க்க