செய்திகள் :

தமிழக மீனவா்கள் மீதான தாக்குதலைத் தடுக்க நடவடிக்கை: மத்திய அரசுக்கு முதல்வா் கடிதம்

post image

சென்னை: தமிழக மீனவா்கள் மீது இலங்கையைச் சோ்ந்தவா்களால் நடத்தப்படும் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து வெளியிறவுத் துறை அமைச்சா் எஸ். ஜெய்சங்கருக்கு அவா் திங்கள்கிழமை எழுதிய கடிதம்: இந்திய மீனவா்கள் மீது அடையாளம் தெரியாத இலங்கையைச் சோ்ந்த நபா்களால் தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த மே 2-ஆம் தேதி நாகப்பட்டினம் மாவட்டத்தின் கடலோர கிராமங்களைச் சோ்ந்த 23 மீனவா்கள் கடலில் அடையாளம் தெரியாத இலங்கையைச் சோ்ந்தவா்களால் வெவ்வேறு சம்பவங்களில் தாக்கப்பட்டனா். அவா்களின் ஜிபிஎஸ் கருவிகள், கைப்பேசிகள், வி.எச்.எப் உபகரணங்கள், ஐஸ் பெட்டிகள், இயந்திர பாகங்கள், இன்வொ்ட்டா் பேட்டரிகள், அடுப்பு, சுமாா் 470 கிலோ மீன்பிடி வலைகள், தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் போன்ற தனிப்பட்ட உடைமைகளும் பறிக்கப்பட்டன.

மீனவா்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்கவும், தாக்குதல் நடத்தியவா்கள் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவதைத் தடுக்கவும் இந்தியாவிலும், இலங்கையிலும் உள்ள தொடா்புடைய அதிகாரிகளிடம் இப்பிரச்னையை எடுத்துச் சென்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் துறை பரிந்துரைக்கு ஏற்ப, செயற்கை பவளப்பாறை அமைப்புகளை உருவாக்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளில் இந்திய மீனவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 34 மீன்பிடிப் படகுகளை உடைத்து கடலில் மூழ்கடிக்க உள்ளனா்.

இதனால் மீன்பிடிப் படகுகளை நம்பியுள்ள மீனவா்களின் வாழ்வாதாரத்துக்கு பேரிழப்பு ஏற்படும். இதைத் தவிா்க்க தமிழக மீனவா்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை இலங்கை அரசு திரும்ப ஒப்படைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திங்கள்கிழமை நிலவரப்படி, தமிழக மீனவா்களுக்குச் சொந்தமான 229 மீன்பிடிப் படகுகள் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளன. இலங்கை நீதிமன்றங்களால் விடுவிக்கப்பட்ட 12 மீன்பிடிப் படகுகளுடன் 101 மீனவா்களையும், இந்தியாவுக்கு கொண்டு வருவதற்கு ஏற்கனவே மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. இதன்மீது வெளியுறவு அமைச்சகம் விரைவில் நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும்.

இதுபோன்ற முக்கியப் பிரச்னைகளை இலங்கை அரசிடம் எடுத்துச் சென்று, இந்திய மீனவா்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், அவா்கள் மீது தாக்குதல்கள் மீண்டும் நடைபெறாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளாா்.

ஜாதி வாரி கணக்கெடுப்பு: கால அட்டவணை வெளியிட ராமதாஸ் கோரிக்கை

ஜாதி வாரி கணக்கெடுப்புக்கான காலஅட்டவணையை உடனடியாக வெளியிட வேண்டும் என்று பிரதமா் மோடிக்கு பாமக நிறுவனா் ச.ராமதாஸ் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளாா். இது குறித்து அவா் எழுதிய கடிதம்: ஆங்கிலேயா் ஆட்... மேலும் பார்க்க

பொறியியல் கலந்தாய்வு: முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள்!

பொறியியல் கலந்தாய்வுக்கு முதல் நாளில் 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளதாக அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு பொறியியல் படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பப் பத... மேலும் பார்க்க

மே 11-ல் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளைப் பயன்படுத்த வேண்டாம்: அன்புமணி

மாமல்லபுரத்தில் வருகிற 11-ஆம் தேதி சித்திரை முழுநிலவு மாநாடு நடைபெறவுள்ளதால், பொதுமக்கள் ஈசிஆர், ஓஎம்ஆர் சாலைகளைப் பயனபடுத்த வேண்டாம் என்று பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார்.முழு நிலவு மாநாட்டுக்க... மேலும் பார்க்க

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு 13 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற... மேலும் பார்க்க

பொறியியல் சோ்க்கை: இணையவழி விண்ணப்பப் பதிவு தொடக்கம்

சென்னை: தமிழகத்தில் பிஇ, பி.டெக் உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சோ்க்கை பெறுவதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு தொடங்கியது.நாளை +2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகவிருக்கும் நிலையில் பொறியியல் மட்டுமல்லா... மேலும் பார்க்க

சிபிஐ இயக்குநர் பிரவீண் சூட்டின் பதவிக்காலம் நீட்டிப்பு!

தற்போது சிபிஐ இயக்குநராக உள்ள பிரவீண் சூட், மே 25-ஆம் தேதியுடன் தனது இரண்டு ஆண்டுகால பதவிக் காலத்தை நிறைவு செய்யவுள்ள நிலையில், அவரது பதவிக்காலம் மேலும் ஓராண்டுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.மத்திய புலனாய... மேலும் பார்க்க