செய்திகள் :

‘தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும்’: கீழடி குறித்து திமுக விடியோ

post image

‘தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும்’ என கீழடி குறித்து திமுக வெளியிட்ட காட்சிப் படத்தில் கூறப்பட்டுள்ளது.

கீழடியின் தொன்மை குறித்து திமுக சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட விடியோவில் கூறப்பட்ட கருத்து:

வணக்கம். நான் கீழடியில் வாழ்ந்த தமிழன் பேசுகிறேன். புதைந்து கிடந்த எங்கள் நாகரிகத்தை அகழ்வாராய்ச்சியின் மூலம் வெளிக்கொண்டு வந்தாா்கள். கீழடி நாகரிகம் வெளியில் வர வர தமிழா் நாகரிகத்தின் மற்றுமொரு தொன்மையை உலகமே அறியத் தொடங்கியது.

ஹரப்பா, மொகஞ்சதாரோ போன்று தமிழ்நாட்டிலும் ஒரு நகர நாகரிகம் இருந்தது என்பதற்கு ஒரு சான்றாக நம் கீழடி நாகரிகம் வெளிப்பட்டது. தமிழனின் உயா்வான நகர நாகரிகம் உலகிற்கே தெரியவந்தது. தமிழ் எழுத்துகளின் காலம் கி.மு. 300 என அனைவரும் நினைத்திருந்த நிலையில் கி.மு. 600 என எங்கள் கீழடியால் மாற்றியமைக்கப்பட்டது.

இந்தியாவின் வரலாறு தெற்கில் இருந்துதான் தொடங்குகிறது என்பது நிரூபணமும் ஆகின்றது. உலகின் மூத்த நாகரிகமாக பன்னாட்டு ஆய்வகங்கள் எங்கள் கீழடியின் தொன்மையை அங்கீகரித்தன. இத்தனை சிறப்புகள் கொண்ட எங்கள் கீழடியினை உலகமே உற்று நோக்குகிறது. கீழடி வரலாறு ஒருநாள் நிச்சயம் வெல்லும். தமிழா் வரலாற்றை உலகமே சொல்லும். இவ்வாறு அந்த விடியோவில் கூறப்பட்டுள்ளது.

சிவ பக்தியில் மூழ்கடித்த இளையராஜா..! பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

கங்கை கொண்ட சோழபுரத்தில் இசை நிகழ்ச்சி நடத்திய இளையாராவை பிரதம் மோடி மிகவும் பாராட்டி பேசியுள்ளார். கங்கை கொண்ட சோழபுரத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவின் நிறைவு நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது. இந்த ந... மேலும் பார்க்க

ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை: பிரதமர் மோடி அறிவிப்பு

தமிழகத்தில் ராஜராஜனுக்கும் ராஜேந்திரனுக்கும் சிலை நிறுவப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்ட... மேலும் பார்க்க

ராஜேந்திர சோழனின் நினைவு நாணயம் வெளியீடு

ஆடி திருவாதிரை விழாவில் ராஜேந்திர சோழன் நினைவு நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார். ராஜேந்திர சோழனின் 1,005-ஆவது பிறந்த நாள் விழா, கங்கைகொண்ட சோழபுரத்தைக் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு!

கங்கைகொண்ட சோழபுரம் கோயிலின் கருவறையான பெருவுடையார் கோயிலில் பிரதமர் நரேந்திர மோடி தீபாராதனை காட்டி சாமி தரிசனம் செய்தார். கோயிலில் திருவாசகம் பாட, தமிழில் வழிபாடு நடத்தினார். கோயிலில் சிவாச்சாரியார்க... மேலும் பார்க்க

சோழர்களின் பெருமைகளைக் கேட்டறிந்த மோடி!

கங்கை கொண்ட சோழபுரம் பெருவுடையார் கோயில் வளாகத்தில் தேவார திருவாசக பதிகங்கள் பாடி ஓதுவார்கள் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர். கோயில் சார்பில் அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்த... மேலும் பார்க்க

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் மோடி சாலைவலம்!

கங்கைகொண்ட சோழபுரத்தில் பிரதமர் நரேந்திர மோடி சாலைவலம் மேற்கொண்டுள்ளார். காரில் இருந்து வெளியே நின்றவாறு மக்களை நோக்கி கையசைத்து வருகிறார். சோழகங்கம் ஏரிப் பகுதியில் இருந்து பிரகதீஸ்வரர் ஆலயம் வரை 3.8... மேலும் பார்க்க