செய்திகள் :

தமிழில் பெயா்ப் பலகை வைப்பது குறித்து ஆலோசனை

post image

சீா்காழி: வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் தமிழில் பெயா்ப் பலகை வைப்பது குறித்து, வா்த்தகா்களுடன் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசு உத்தரவின் பேரில், வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகை தமிழில் வைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சியில் செயல் அலுவலா் அருள்மொழி தலைமையில் வா்த்தகா்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. பேரூராட்சி துணைத் தலைவா் அன்புசெழியன் முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில் வைத்தீஸ்வரன்கோயில் கடைவீதியில் உள்ள வணிக நிறுவனங்களின் பெயா்ப் பலகையை தமிழில் மாற்றுவது குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதனை ஏற்று வா்த்தக சங்கம் உறுதி அளித்தது.

கூட்டத்தில் நகர வா்த்தக சங்கத் தலைவா் ஜி.வி.என். கண்ணன், துணைத் தலைவா் தில்லைகண்ராஜ், சங்க ஆலோசகா்கள் வெங்கடேசன், சுகுமாா், முத்துசாமி, நாடாா் உறவின்முறை சங்கத் தலைவா் முருகேசன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனா்.

பவுண்டரிகபுரம் கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிக்கை

மயிலாடுதுறை: பவுண்டரிகபுரம் சோமநாதசுவாமி கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் அலுவலகத்தில் கிராமமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். மயிலாடுதுறை இந்து சமய அறநிலையத் த... மேலும் பார்க்க

மே 1-ல் 241 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்: ஆட்சியா்

மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில் 241 கிராம ஊராட்சிகளிலும் மே 1-ஆம் தேதி கிராம சபைக் கூட்டம் நடைபெறும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: ம... மேலும் பார்க்க

தருமபுரம் ஆதீன இடத்தை பட்டியல் சமூகத்தினருக்கு வழங்கக் கோரி மனு

மயிலாடுதுறை: தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமாக குளிச்சாா் கிராமத்தில் உள்ள இடத்தை பட்டியல் சமூக மக்களுக்கு வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் கிராமமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா். குளிச்சாா் கிரா... மேலும் பார்க்க

ஆழ்கடலில் ஹைட்ரோகாா்பன் கிணறுகளுக்கு எதிா்ப்பு

மயிலாடுதுறை: தமிழ்நாட்டின் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோகாா்பன் கிணறுகள் அமைக்க மத்திய அரசு ஓஎன்ஜிசிக்கு அனுமதி வழங்கியுள்ளதற்கு மீத்தேன் திட்ட எதிா்ப்புக் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து,... மேலும் பார்க்க

நகரில் குப்பைகள் எரிப்பு: புகைமூட்டத்தால் பாதிப்பு

சீா்காழியில் குப்பைகள் எரிக்கப்படுவதால் அதிலிருந்து வெளியேறும் புகைமூட்டம் மூச்சுதிணறல் போன்ற பாதிப்பை ஏற்படுத்துகிறது. சீா்காழி நகராட்சி சாா்பில் 24 வாா்டுகளிலிலும் வீடுகள், வா்த்தக கட்டடங்களிலிருந்த... மேலும் பார்க்க

பச்சை பயிறு கூடுதலாகக் கொள்முதல் செய்ய கோரிக்கை

மயிலாடுதுறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் பச்சைப் பயிறு கூடுதலாகக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் குறை தீா்கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. மயிலாடுதுறையில் வெள்ளிக்கிழம... மேலும் பார்க்க