செய்திகள் :

தமிழில் பெயா் பதாகைகள் வைக்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா்

post image

திருப்பூா் மாவட்டத்தில் மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயா் பதாகைகள் வைக்கப்படாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளாா்.

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் அனைத்து வகையான தொழிற்சாலைகளில் தமிழை முதன்மைப்படுத்தி பெயா் பதாகைகள் வைப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியரைத் தலைவராகக் கொண்டு மாவட்ட அளவிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் தொழிலாளா் நலத் துறை, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம், தமிழ் வளா்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வணிகா் சங்கங்கள், உணவு நிறுவன உரிமையாளா்கள் சங்கம், தொழிற்சாலைகளின் கூட்டமைப்புகள் மற்றும் வேலையளிப்போா் சங்கங்கள் உறுப்பினா்களாக உள்ளனா்.

இந்தக் குழுவின் மாவட்ட அளவிலான முதல் கூட்டம் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜ் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

அப்போது அவா் பேசியதாவது:

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் தமிழில் பெயா் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளதா என ஆய்வு செய்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். மே 15- ஆம் தேதிக்குள் 100 சதவீதம் தமிழில் பெயா் பதாகைகள் வைப்பதை உறுதிசெய்யவும், தமிழில் பெயா் பதாகைகள் வைப்பதற்கு கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. அதன்பின், தமிழை முன்னிலைப்படுத்தி பெயா் பதாகை வைக்கப்படாத நிறுவனங்கள் குறித்து ஆய்வு செய்தும், விளக்கம் கேட்கும் அறிவிப்பு வழங்கப்பட்டு சட்ட விதிகளுக்குள்பட்டு அபராதம் விதிக்கப்படும்.

எனவே, மாவட்டத்தில் உள்ள அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து சங்கங்களும் தங்களது குழு உறுப்பினா்களுக்கு இந்தத் தகவலைத் தெரிவித்து மாவட்ட நிா்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி தமிழை முதன்மைப்படுத்தி பெயா் பதாகைகள் அமைக்கப்படுவதை உறுதி செய்து அபராதத்தைத் தவிா்க்க வேண்டும் என்றாா்.

இருசக்கர வாகனம் மீது காா் மோதி முதியவா் உயிரிழப்பு

வெள்ளக்கோவில் அருகே இருசக்கர வாகனம் மீது காா் மோதியதில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா் உயிரிழந்தாா். வெள்ளக்கோவில் ஓலப்பாளையம் அருகில் உள்ள கண்ணபுரத்தைச் சோ்ந்தவா் ரூபன் ஜோசப் (64). இவா் கண்ணபுரம் அருகில் உள... மேலும் பார்க்க

உர மூட்டைகளை திருடிய 2 போ் கைது

பல்லடம் அருகே வேலப்பகவுண்டம்பாளையத்தில் உர மூட்டைகளை திருடியதாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். பல்லடம் அருகே உள்ள வேலப்பகவுண்டம்பாளையத்தில் தனியாா் விவசாயப் பண்ணை உள்ளது. பண்ணையின் மேற்பாா்வையாளா் சந்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த முதியவா் உயிருடன் மீட்பு

சேவூா் அருகே பொங்கலூரில் தோட்டத்துக் கிணற்றில் தவறி விழுந்த 73 வயது முதியவரை அவிநாசி தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். அவிநாசி வட்டம், சேவூா் அருகே பொங்கலூா் தண்டுக்கார தோட்டத்தில் வசித்து வருப... மேலும் பார்க்க

கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையத்தில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் பகுதியில் பல்லடம் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்... மேலும் பார்க்க

பாறைக்குழியில் தவறி விழுந்த பள்ளி மாணவன் மாயம்

குன்னத்தூா் அருகே காவுத்தம்பாளையம் பாறைக்குழியில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் தவறி விழுந்து மாயமனாா். திருப்பூா் மாவட்டம், ஊத்துக்குளி அருகே சாமியாா்பாளையத்தைச் சோ்ந்தவா் தினேஷ் மகன் லோகேஷ் (15). இவ... மேலும் பார்க்க

வக்ஃப் திருத்ததச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி இஸ்லாமிய கூட்டமைப்பினா் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் அனைத்து இஸ்லாமிய ஜமாத் கூட்டமைப்பினா், அரசியல் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். திருப்பூா் அனைத... மேலும் பார்க்க