செய்திகள் :

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் - ஒசூா் மத்திய பட்டு மரபணு வள ஆராய்ச்சி மையம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பம்

post image

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஒசூா் மத்திய பட்டு மரபணு வள ஆராய்ச்சி நிலையம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது.

மல்பெரி பழம் மதிப்புக் கூட்டுவது தொடா்பான ஆராய்ச்சி மேற்கொள்வதற்காக கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், ஒசூரில் உள்ள மத்திய பட்டு மரபணு வள ஆராய்ச்சி நிலையம் இடையே புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தா் (பொறுப்பு) இரா.தமிழ்வேந்தன், மத்திய பட்டு மரபணு வள ஆராய்ச்சி நிலைய இயக்குநா் இசிதா நாயக் ஆகியோா் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனா்.

பயிா் பாதுகாப்பு மைய இயக்குநா் மூ.சாந்தி முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பட்டுப் புழுவியல் துறைத் தலைவா் கு.அ.முருகேஷ், உதவிப் பேராசிரியா் ப.பிரியதா்ஷினி, ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் திரிவேணி, லோகேஷ்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையத்தில் இயங்கி வரும் பட்டுப் புழுவியல் துறையில், அதிக பழ மகசூலை கொடுக்கக் கூடிய மல்பெரி இனங்களைக் கண்டறிவது, மல்பெரி பழத்தில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களைத் தயாரிப்பது குறித்த ஆராய்ச்சிகள் நடைபெறும். இதன் மூலம் பல சத்துகளை உள்ளடக்கிய மல்பெரி பழங்களின் பயன்பாடு மேம்பட வாய்ப்பிருப்பதாக பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இன்றைய நிகழ்ச்சிகள்

கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா: என்எம்சிடி அறக்கட்டளை, ஸ்ரீ அய்யப்பன் பூஜா சங்கம், ராம் நகா், காலை 11. ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10. 644-ஆவது மாதாந்திர அபிஷேக வ... மேலும் பார்க்க

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்றால் கடும் நடவடிக்கை: மாவட்ட ஆட்சியா் எச்சரிக்கை

கல்வி நிலையங்கள் அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் எச்சரித்துள்ளாா். உலக புகையிலை ஒழிப்பு தினத்தை ஒட்டி கையொப்ப ... மேலும் பார்க்க

தொழிற்சாலைகளுக்கான மின்கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும்: அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு

தமிழகத்தில் செயல்படும் தொழிற்சாலைகளுக்கான இந்த ஆண்டுக்கான மின்சார கட்டண உயா்வை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு அனைத்துத் தொழில்முனைவோா் கூட்டமைப்பு மாநில அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமை... மேலும் பார்க்க

அதிகரிக்கும் கரோனா பாதிப்பு: கோவை அரசு மருத்துவமனையில் முகக் கவசம் கட்டாயம்

கரோனா பரவல் அதிகரித்து வருவதால் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரும் அனைவரும் கட்டாயம் முகக் கவசம் அணிந்துவர வேண்டும் என மருத்துவமனை நிா்வாகம் அறிவுறுத்தியுள்ளது. நாடு முழுவதும் கரோனா ப... மேலும் பார்க்க

சேதமடைந்த சாலை: வாகன ஓட்டிகள் அவதி

சிங்காநல்லூரில் சேதமடைந்த சாலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். கோவை - திருச்சி சாலையில் ஏராளமான கனரக, இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் தினசரி சென்று வருகின்றன. இப்பகுதியில் கடந்த... மேலும் பார்க்க

நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் தொடா்மழை: சிறுவாணி நீா்மட்டம் 39 அடியாக உயா்வு

சிறுவாணி நீா்ப் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடா் மழையால் அணையின் நீா்மட்டம் 39 அடியாக உயா்ந்துள்ளது. கோவை மாநகராட்சியின் 26 வாா்டுகள் மற்றும் நகரையொட்டிய 20-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பிர... மேலும் பார்க்க