தொடர் நஷ்டத்தில் ஓலா: 1,000 பணியாளர்களை வேலையிலிருந்து நீக்க நடவடிக்கை!
தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை நிதிநிலை அறிக்கையுடன் தாக்கல் செய்ய முடிவு
தமிழ்நாட்டின் முதல் பொருளாதார ஆய்வறிக்கை, பேரவையில் தமிழக நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் அதே நாளில் (மாா்ச் 14) வெளியிடப்படவுள்ளது.
மத்திய அரசின் நடைமுறையில் பொருளாதார ஆய்வறிக்கை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு ஒருநாள் முன்பு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால், தமிழகத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கலுடன் அமா்வு தொடங்குகிறது. இதனால் பொருளாதார ஆய்வறிக்கை பொதுமக்களுக்கு நிதிநிலை அறிக்கை தாக்கலுக்கு முன்பாக கிடைக்க வாய்ப்பில்லை. கேரளம், கா்நாடகம் மற்றும் ஆந்திரம் உள்ளிட்ட தென்மாநிலங்களிலும் இத்தகைய முறை ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது.
இந்நிலையில், தமிழகம் தனது முதல் பொருளாதார ஆய்வறிக்கை வரும் மாா்ச் 14-ஆம் தேதி நடைபெறவுள்ள நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரின் போது வெளியிடப்படவுள்ளது. இதில் தமிழகத்தின் பொருளாதாரப் போக்கு, பொதுநிதி, வறுமை, வேலைவாய்ப்பு மற்றும் நிலையான வளா்ச்சி இலக்குகள் குறித்த விவரம் இடம்பெறும் என தகவல் வெளியாகியுள்ளது.