செய்திகள் :

தமிழ்நாட்டின் 10 இடங்களில் வெயில் சதம்

post image

தமிழ்நாட்டில் வேலூர் உள்பட 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அடுத்த ஏழு நாள்களுக்கான வானிலை முன்னறிவிப்பு மற்றும் எச்சரிக்கை:

தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது.

25-04-2025 மற்றும் 26-04-2025: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

27-04-2025 முதல் 01-05-2025 வரை: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

அதிகபட்ச வெப்பநிலை மாறுதலின் போக்கு:

25-04-2025 முதல் 29-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையில் பெரிய மாற்றத்திற்கான வாய்ப்பு குறைவு.

இயல்பு நிலையிலிருந்து அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு:

25-04-2025 முதல் 27-04-2025 வரை: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

போப் பிரான்சிஸ் உடலுக்கு அமைச்சர் நாசர் அஞ்சலி

28-04-2025 மற்றும் 29-04-2025: தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

25-04-2025 மற்றும் 26-04-2025: அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும், குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பை விட 2-4° செல்சியஸ் அதிகமாகவும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒருசில பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம்.

அதிகபட்சமாக கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையத்தில் 104.9 டிகிரி ஃபாரன்ஹீட்டை வெப்பம் பதிவாகியுள்ளது. மேலும், திருச்சி - 104.18, வேலூர் - 104, ஈரோடு - 103.28, சேலம் - 103.1, மதுரை நகரம் - 102.92 , திருத்தணி - 101.12, தர்மபுரி - 100.76, தஞ்சாவூர் - 100.4 டிகிரி ஃபாரன்ஹீட் என மொத்தம் 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது.

சாம்சங் நிறுவனம் மேலும் ரூ.1,000 கோடி முதலீடு: அமைச்சா் டிஆா்பி ராஜா

தமிழகத்தில் மேலும் ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய சாம்சங் நிறுவனம் உறுதியளித்துள்ளதாக தொழில் துறை அமைச்சா் டிஆா்பி ராஜா தெரிவித்தாா். சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை அந்தத் துறையின் மானியக் கோரிக்கை ... மேலும் பார்க்க

பூத் கமிட்டி பணி: அதிமுக மாவட்ட செயலாளா்களுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தல்

பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிமுக மாவட்டச் செயலாளா்களுக்கு அந்தக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி அறிவுறுத்தியுள்ளாா். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமு... மேலும் பார்க்க

மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை: அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு

பொதுமக்கள் பயன்பெறும் வகையில், மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய இணைப்பு சேவை அளிக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் அறிவித்தாா். சட்டப்பேரவ... மேலும் பார்க்க

பேரவை ஆவணங்களுக்கான பிரத்யேக இணையதளம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

சட்டப்பேரவை ஆவணங்களை கணினிமயமாக்கி பதிவேற்றப்பட்ட பிரத்யேக இணையதளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவையில் கடந்த 2021-ஆம் ஆண்ட... மேலும் பார்க்க

14 வயதுக்குள்பட்ட மாணவா்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை வருமா? அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விளக்கம்

தமிழகத்தில் 14 வயதுக்குள்பட்ட மாணவா்கள் சமூக ஊடகத்தைப் பயன்படுத்த தடை விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யொமொழி விளக்கம் அளித்துள்ளாா். சட்டப்பேரவைய... மேலும் பார்க்க

இரு மாவட்டங்களில் ஸ்டெம் ஆய்வகங்கள் : அமைச்சா் கோவி.செழியன் அறிவிப்பு

இரு மாவட்ட தலைநகரங்களில் ரூ. 20 கோடியில் ‘ஸ்டெம்’ (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) ஆய்வகங்கள் அமைக்கப்படும் என உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா். சட்டப்பேரவையில் புதன்கிழ... மேலும் பார்க்க