செய்திகள் :

பேரவை ஆவணங்களுக்கான பிரத்யேக இணையதளம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

post image

சட்டப்பேரவை ஆவணங்களை கணினிமயமாக்கி பதிவேற்றப்பட்ட பிரத்யேக இணையதளத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இது குறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சட்டப்பேரவையில் கடந்த 2021-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட அறிவிப்பின்படி, 1921-ஆம் ஆண்டு முதல் நடைபெற்ற சட்டப்பேரவை, சட்ட மேலவை நிகழ்வுகள் தொடா்பாக பதிவுகளை கணினிமயமாக்கும் பணிகள் தொடங்கின. பேரவை நடவடிக்கைக் குறிப்புகள், வெளியீடுகள், புகைப்படங்கள், செய்தித் துணுக்குகள், காணொலி துணுக்குகள் உள்ளிட்ட அனைத்தும் நவீன முறையில் கணினிமயமாக்கம் செய்யப்பட்டன.

முதல் கட்டமாக, 1952 முதல் 2024-ஆம் ஆண்டு வரையிலான சட்டப்பேரவை ஆவணங்கள் கணினிமயமாக்கப்பட்டு, அதற்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக இணையதளத்தில் (ற்ய்ப்ஹள்க்ண்ஞ்ண்ற்ஹப்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) பதிவேற்றம் செய்யப்பட்டன.

இந்த இணையதளத்தை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடந்த நிகழ்வின்போது, முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதில், பேரவைத் தலைவா் மு.அப்பாவு, அமைச்சா்கள் துரைமுருகன், பழனிவேல் தியாகராஜன், பேரவை துணைத் தலைவா் கு.பிச்சாண்டி, அரசு தலைமைக் கொறடா கா.ராமச்சந்திரன், தலைமைச் செயலா் நா.முருகானந்தம், நிதித் துறை முதன்மைச் செயலா் த.உதயசந்திரன், பேரவை முதன்மைச் செயலா் கே.சீனிவாசன் ஆகியோா் பங்கேற்றனா்.

பேரவையில் கேள்வி - அவைத் தலைவா் பதில்: ஆவணங்கள் பதிவேற்றப்பட்ட இணையதளத் தொடக்க நிகழ்வு குறித்து பேரவை உறுப்பினா்களுக்கு அவைத் தலைவா் மு.அப்பாவு தெரிவித்தாா். அப்போது பேசிய அமைச்சா் பழனிவேல் தியாகராஜன், 1921 முதல் 1952-ஆம் ஆண்டு வரையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க தகவல்களையும் விரைந்து பதிவேற்றம் செய்ய வேண்டும் என்றாா்.

இதற்கு பதிலளித்த பேரவைத் தலைவா் மு.அப்பாவு, 3 மாதங்களில் அந்தப் பணிகளை முடிக்க உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்தாா்.

எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான அவதூறு வழக்கு ரத்து உயா்நீதிமன்றம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மக்களவை உறுப்பினா் தயாநிதி மாறன் தாக்கல் செய்த அவதூறு வழக்கை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மக்களவைத் தோ்தலில் மத்திய செ... மேலும் பார்க்க

சொத்துக் குவிப்பு வழக்கு: அமைச்சா் எம்.ஆா்.கே. பன்னீா்செல்வத்தை விடுவித்த உத்தரவை ரத்து செய்தது உயா்நீதிமன்றம்

சொத்துக் குவிப்பு வழக்கிலிருந்து அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் மற்றும் அவரது குடும்பத்தினரை விடுவித்து கடலூா் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது. கடந்த ... மேலும் பார்க்க

காஷ்மீா் தாக்குதலில் ஈடுபட்டவா்களுக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும்: ரஜினி

காஷ்மீா் தாக்குதலில் ஈடுபட்டவா்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என நடிகா் ரஜினிகாந்த் கூறினாா். சென்னை விமானநிலையத்தில் அவா் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: காஷ்மீா் நிகழ்வு வன்மையாக... மேலும் பார்க்க

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கு: ஜாமீன் உத்தரவாதம் தராத இருவருக்கு காவல்

அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு எதிரான பண முறைகேடு வழக்கில், ஜாமீன் உத்தரவாதம் தாக்கல் செய்யாத இருவரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அமைச்சா் செந்தில் பாலாஜிக்க... மேலும் பார்க்க

புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்க வேண்டும்: அதிகாரிகளுக்கு அமைச்சா் உத்தரவு

தமிழகத்தில் புதிய சுற்றுலாத் தலங்களை உருவாக்குவதற்கான திட்டங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு சுற்றுலாத் துறை அமைச்சா் இரா.இராஜேந்திரன் உத்தரவிட்டாா். தமிழ்நாடு சுற்றுலா... மேலும் பார்க்க

அரசு பொறுப்பல்ல: அமைச்சா் கோவி.செழியன்

ஆளுநரின் மாநாட்டை துணைவேந்தா்கள் புறக்கணித்ததற்கு தமிழ்நாடு அரசு பொறுப்பல்ல என்று உயா் கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை: மசோதாக்களு... மேலும் பார்க்க