செய்திகள் :

தமிழ் இனப்படுகொலை நினைவு நாள்: கனடா பிரதமர் இரங்கல்!

post image

இலங்கையில் நிகழ்ந்த தமிழ் இனப்படுகொலை நினைவு நாளையொட்டி கனடா பிரதமர் மார்க் கார்னி இன்று(மே 18) இரங்கல் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

கடந்த 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழீழ போரில் சிங்கள இனவெறி அரசும், ராணுவமும் இணைந்து ஈழத் தமிழா்களின் வாழ்விடங்கள், பள்ளிகள், மத வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள் ஆகியவற்றை அழித்தன. இறுதியாக, 2009 மே 17, 18 ,19 ஆம் தேதிகளில் ஒன்றரை லட்சம் ஈழத்தமிழா்கள் சுட்டுக் கொல்லப்பட்டனா். இந்த இனப்படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் தியாகிகளின் 16 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்தநிலையில், இது குறித்து கனடா பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

“இலங்கையில் நிகழ்ந்த ஆயுதச் சண்டை முடிவுக்கு வந்து இன்றுடன் 16 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. சுமார் 26 ஆண்டுகள் நடைபெற்ற இந்த சண்டையில் ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

தமிழ் இனப் படுகொலை நாளான இன்றைய நாளில், நாம் பறிகொடுத்த உயிர்களையும், பிரிந்தொழிந்த குடும்பங்களையும், சிதைக்கப்பட்ட சமூகங்களையும், இந்நாள் வரை மாயமாகி கண்டுபிடிக்க முடியாது போன நபர்களையும் நினைவுகூருகிறோம்.

கனடாவில் தமிழ்ச் சமூகத்துக்கு நன்றி தெரிவிக்கிறோம். அவர்கள் தங்களுடன் தாங்கள் இன்னுயிராய் நேசித்தவர்களைப் பற்றிய நினைவுகளைச் சுமந்துகொண்டு வாழ்கின்றனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிறநாட்டுக்கு பணம் அனுப்பினால் 5% வரி: டிரம்ப்பின் புதிய திட்டத்தால் யாருக்கு பாதிப்பு?

அமெரிக்காவிலிருந்து பிறநாட்டினா் தங்கள் சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பினால் 5 சதவீதம் வரி விதிக்க முன்மொழியும் அந்நாட்டு அதிபா் டொனால்ட் டிரம்ப்பின் புதிய திட்டம் இந்தியாவை வெகுவாக பாதிக்கும் என்று நி... மேலும் பார்க்க

இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

இலங்கையில் 16-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்வில் உள்நாட்டுப் போரில் உயிரிழந்தவா்களுக்கு ஏராளமான தமிழா்கள் அஞ்சலி செலுத்தினா். இலங்கையின் வடக்கு மற்றும... மேலும் பார்க்க

புதிய போப் 14-ஆம் லியோ பதவியேற்பு! திருச்சபையின் ஒற்றுமைக்குப் பாடுபட உறுதி!

வாடிகன் புனித பீட்டா் சதுக்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கோலாகல நிகழ்வில் புதிய போப்பாக (கத்தோலிக்க திருச்சபையின் தலைவா்) 14-ஆம் லியோ அதிகாரபூா்வமாக பதவியேற்றுக் கொண்டாா். தொடா்ந்து, உலக அமைதியின்... மேலும் பார்க்க

காஸா மீதான இஸ்ரேல் தாக்குதலில் 103 போ் உயிரிழப்பு

காஸா முனையில் இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை நடத்திய வான்வழித் தாக்குதலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 103 போ் உயிரிழந்தனா். கான் யூனிஸ் நகரில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களில் வீடுகள், நிவாரண முகாம்கள் உள்ளிட்... மேலும் பார்க்க

இந்தியாவுக்குப் போட்டியாக வெளிநாடுகளுக்கு தூதுக் குழுவை அனுப்பும் பாகிஸ்தான்!

இந்தியாவுடனான மோதலில் தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கும் வகையில் பல்வேறு வெளிநாடுகளுக்கு தூதுக் குழுவை அனுப்ப இருப்பதாக பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் அறிவித்துள்ளாா். பயங்கரவாதத்துக்கு எதிரான... மேலும் பார்க்க

அணு ஆயுதங்களைப் பயன்படுத்தாமலே போரில் வெற்றி பெற முடியும்: ரஷிய அதிபா் புதின்

அணு ஆயுதங்களை பயன்படுத்தாமலே உக்ரைன் போரில் தனது இலக்குகளை ரஷியாவால் எட்ட முடியும் என்று அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் தெரிவித்தாா். இதுதொடா்பாக ரஷிய அரசுத் தொலைக்காட்சிக்கு அவா் அளித்த பேட்டியில... மேலும் பார்க்க