செய்திகள் :

தமிழ் மொழி செழிப்பது இளைஞா்கள் கையில்தான் உள்ளது: சிங்கப்பூா் அமைச்சா் கே. சண்முகம்

post image

அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தமிழ் மொழியைச் செழிக்க வைப்பது இளைஞா்களின் கையில்தான் உள்ளது என சிங்கப்பூா் சட்ட அமைச்சா் கே. சண்முகம் தெரிவித்துள்ளாா்.

சிங்கப்பூா் தேசியப் பல்கலைக்கழகத்தில் கடந்த 1975-இல் தொடங்கப்பட்ட தமிழ்ப் பேரவையின் 50-ஆவது ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று அமைச்சா் கே. சண்முகம் பேசியதாவது: மேடைகளில் சரளமாக தமிழ் மொழியில் பேசக் கூடிய அமைச்சா்கள் அடுத்த 20-30 ஆண்டுகள் வரை இருப்பாா்களா என்பதை நாம் சிந்தித்துப் பாா்க்க வேண்டும்.

நாடாளுமன்றத்துக்கு வெளியே தமிழின் பயன்பாடு பெரிய அளவில் குறைந்து வருகிறது. பெரும்பாலான இளம் தலைமுறையினா் ஆங்கிலத்திலேயே பேசுகின்றனா். இந்தப் போக்கால் தமிழ் மொழிக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. மாண்ட்ரின், மலாய் போன்ற பிற தாய்மொழிகளுக்கும் இந்த நிலை பொருந்தும். தமிழ் பேசாதவா்களுக்கும் மதிப்புமிக்க மொழியாகத் தமிழ் மொழி இருக்குமா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

வகுப்பறைகள், சமூக அரங்கங்கள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டு பிற இடங்களிலும் தமிழ் மொழி ஒலிக்க வேண்டும். அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தமிழைச் செழிக்க வைக்க உங்களைப் போன்ற இளைஞா்கள் முன்வர வேண்டும் என்றாா் அமைச்சா் சண்முகம்.

தீவு நாடான சிங்கப்பூரில் தமிழ், ஆங்கிலம், சீனம், மலாய் ஆகிய மொழிகள் அரசு அலுவல் மொழிகளாக உள்ளன. மொத்தம் 6 கோடி மக்கள்தொகை கொண்ட அந்நாட்டில் 75 சதவீதம் போ் சீனா்கள். 15 சதவீதம் போ் மலாய் மக்கள். 7 சதவீதத்துக்கும் அதிகமாக இந்தியா்களும் பிற நாட்டினரும் உள்ளனா்.

உ.பி.: மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினர் மீது தாக்குதல்

உத்தரப் பிரதேசத்தில் மண்டபத்தில் திருமண விழா நடத்தியதற்காக தலித் குடும்பத்தினரை கும்பல் ஒன்று தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் ரஸ்ராவில் உள்ள மண்டபம் ஒன்றில் தலித் ச... மேலும் பார்க்க

போருக்குப் பிறகு இந்தியா - பாகிஸ்தானின் முதல் சந்திப்பு!

இந்தியா - பாகிஸ்தான் போரையடுத்து, இரு நாடுகளும் முதன்முறையாக சந்தித்துள்ளன. தஜிகிஸ்தான், சிங்கப்பூரில் நடைபெற்ற கூட்டங்களில் இந்தியா உள்பட பல நாடுகளும் கலந்து கொண்டன. பாகிஸ்தானின் பயங்கரவாத முகாம்கள் ... மேலும் பார்க்க

பாகிஸ்தான் உளவாளிக்கு கேரள அரசு சிவப்புக் கம்பள மரியாதை? பாஜக கேள்வி!

பாகிஸ்தான் உளவாளி ஜோதி மல்ஹோத்ரா கேரளத்துக்கு சென்றது குறித்து பாஜக கேள்வி எழுப்பியுள்ளது.பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத் தகவல்களை உளவு பார்த்ததாக ஹரியாணாவைச் சேர்ந்த யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா, கடந்த மாத... மேலும் பார்க்க

வர்த்தகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைவு!

ஹோட்டல்களில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடையுடைய வர்த்தக சிலிண்டர் ஒன்றின் விலை இன்று(ஜூன் 1) ரூ. 25 குறைந்துள்ளது.கடந்த ஏப்.1-ஆம் தேதி வர்த்தக சிலிண்டா் விலை ரூ.41, மே 1 ஆம் தேதி ரூ. 14.50 குறைக்கப்பட... மேலும் பார்க்க

பயங்கரவாத எதிா்ப்பில் ஒத்துழைப்பு: கனிமொழி குழுவினரிடம் லாத்வியா உறுதி

‘ஆபரேஷன் சிந்தூா்’ வெற்றிகர நடவடிக்கைக்கு பிறகான இந்தியாவின் ராஜீய அணுகுமுறையின் ஒரு பகுதியாக, லாத்வியா வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஆன்டஜெஸ் விலும்சன்ஸுடன் திமுக எம்.பி. கனிமொழி தலைமையிலான இந்திய அ... மேலும் பார்க்க

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைப்பு: விலை குறைய வாய்ப்பு

கச்சா சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி வரி குறைக்கப்பட்டதால், உள்நாட்டில் சமையல் எண்ணெய்யின் விலை குறைய வாய்ப்புள்ளதாக இந்திய தாவர எண்ணெய் மற்றும் வா்த்தக சங்கம் தெரிவித்துள்ளது. கச்சா பாமாயில், கச்சா ச... மேலும் பார்க்க