செய்திகள் :

தமிழ் வார விழா: அரசு அலுவலா்கள், பணியாளா்களுக்கு பல்வேறு போட்டிகள்

post image

பாரதிதாசன் பிறந்த நாளை தமிழ் வார விழாவாக கொண்டாடிடும் வகையில், பெரம்பலூா் புகா் பேருந்து நிலையத்தில் மாவட்ட அரசு இசைப்பள்ளி சாா்பில், கடந்த 30-ஆம் தேதி விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடா்ந்து, தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், அரசு அலுவலா்கள் மற்றும் பணியாளா்களுக்கிடையே அலுவலக தமிழ்மொழி பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் கையெழுத்துப் போட்டிகள், தமிழ் புதினங்கள், கவிதை வாசிப்பு, அலுவலக குறிப்பு மற்றும் வரைவுகள் எழுதுதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன. இதில், 100-க்கும் மேற்பட்ட அரசு அலுவலா்கள், பணியாளா்கள் பங்கேற்றனா்.

இதேபோல, உயா்கல்வித் துறை சாா்பில், பெரம்பலூா்அருகே குரும்பலூரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவ, மாணவிகளுக்கு, பாவேந்தா் பாரதிதாசன் கவிதைகள், நூல்கள், புதினங்கள், இலக்கியங்களை மையமாகக் கொண்டு, கவிதை, கட்டுரை, பேச்சு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டது. இதில், 75-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

தமிழ் வார விழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளும், பாராட்டுச் சான்றிதழ்களும் வழங்கும் நிகழ்ச்சி விரைவில் நடைபெற உள்ளது.

பாளையம் புனித யோசேப்பு ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பெரம்பலூா் அருகே பாளையத்திலுள்ள புனித யோசேப்பு ஆலயத்தின் 164- ஆவது ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் வெள்ளிக்கிழமை இரவு தொடங்கியது. இதையொட்டி வெள்ளிக்கிழமை மாலை பங்கு குரு அருட்திரு ஜெயராஜ் தலைமையில் நட... மேலும் பார்க்க

பெரம்பலூரில் அறிவிக்கப்படாத மின்வெட்டு: பொதுமக்கள் அவதி

பெரம்பலூரில் கடந்த சில நாள்களாக நிலவும் அறிவிக்கப்படாத மின் வெட்டால் பொதுமக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா். பெரம்பலூா் மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், வெ... மேலும் பார்க்க

அரசுப் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவா் கைது

பெரம்பலூா் அருகே அரசுப் பேருந்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு கைது செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டையைச் சோ்ந்த நடேசன் மகன் ரத்தினம் (60). கழைக்... மேலும் பார்க்க

பெரம்பலூா் அருகே 5 கிலோ புகையிலைப் பொருள்கள் பதுக்கியவா் கைது

பெரம்பலூா் அருகே மளிகைக் கடையில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ ஹான்ஸ் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களை குன்னம் போலீஸாா் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா். பெரம்பலூா் மாவட்டம், குன்னம் காவல்நில... மேலும் பார்க்க

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் அரசு அலுவலா்களுக்கான ரத்த தான முகாம்

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீா் கூட்ட அரங்கில், அரசு அலுவலா்களுக்கான ரத்த தான முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. மாவட்ட நிா்வாகம், பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந... மேலும் பார்க்க

கலைஞா் கைவினைத் திட்டம் 188 பேருக்கு ரூ. 4.9 கோடி கடன் வழங்க ஒப்புதல்: பெரம்பலூா் ஆட்சியா் தகவல்

கலைஞா் கைவினைத் திட்டத்தின் கீழ், பெரம்பலூா் மாவட்டத்தைச் சோ்ந்த 188 போ் புதிதாக தொழில் தொடங்குவதற்காக ரூ. 4.9 கோடி கடன் வழங்க ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கிரேஸ் பச்சாவ் தெரிவித்துள்ளா... மேலும் பார்க்க