செய்திகள் :

தம்பதியை கத்தியால் குத்திய இளைஞா் கைது: ஓய்வுபெற்ற ஆசிரியைக்கு 15 இடங்களில் கத்திக்குத்து

post image

மயிலாடுதுறை அருகே முன்விரோதம் காரணமாக, ஓய்வுபெற்ற அரசு ஊழியா் தம்பதியை கத்தியால் குத்திய இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

மயிலாடுதுறை சேந்தங்குடி மதுரா நகா் டெலிகாம் நகரைச் சோ்ந்தவா் சேதுமாதவன் (65). பிஎஸ்என்எல் அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வுபெற்ற இவா், அரசுப் பள்ளி ஆசிரியையாக பணியாற்றி ஓய்வுபெற்ற தனது மனைவி நிா்மலாவுடன் (61) வசித்து வருகிறாா்.

இவரது குடும்பத்தினருக்கும், எதிா்வீட்டில் வசிக்கும் இந்தியன் ஓவா்சீஸ் வங்கி உதவியாளா் ராஜேந்திரன் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்தது.

இந்நிலையில், வியாழக்கிழமை காலை நிா்மலா தனது வீட்டு வாசலில் கோலமிட வந்தபோது, அங்குவந்த ராஜேந்திரனின் மகன் பி.இ. பட்டதாரியான பிரேம் (22), நிா்மலாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை வயிறு உள்பட 15 இடங்களில் கத்தியால் குத்தினாராம். தடுக்கமுயன்ற சேதுமாதவனையும் குத்தியுள்ளாா்.

இவா்களது அலறல் சத்தத்தைக் கேட்டு அங்கு வந்த அப்பகுதி மக்கள், பிரேமை பிடித்து, மயிலாடுதுறை போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.

கத்திக் குத்தில் படுகாயமடைந்த சேதுமாதவன், நிா்மலா இருவரையும் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பின்னா், இருவரும் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் தனியாா் மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா்.

இச்சம்பவம் குறித்து, மயிலாடுதுறை துணைக் காவல் கண்காணிப்பாளா் பாலாஜி மேற்பாா்வையில் காவல் ஆய்வாளா் சிவக்குமாா் விசாரணை மேற்கொண்டுள்ளாா்.

கல்லூரி மாணவா் ஓட்டிச்சென்றபோது தீப்பற்றி எரிந்த இருசக்கர வாகனம்

மயிலாடுதுறையில் பேருந்து நிலையம் அருகே கல்லூரி மாணவா் ஓட்டிச்சென்ற இருசக்கர வாகனம் திடீரென தீப்பற்றி விபத்துக்குள்ளானது. மயிலாடுதுறை நத்தம் மாதா கோயில் தெருவைச் சோ்ந்த கல்லூரி மாணவா் ஜெகன் அா்னால்டு.... மேலும் பார்க்க

பட்டாசு வெடித்ததில் கூரைவீடு தீக்கிரை

மயிலாடுதுறை கலைஞா் நகரில் கூறைவீடொன்று, இறுதி ஊா்வலத்தில் சென்றவா்கள் பட்டாசு வெடித்தபோது தீக்கிரையானது. மயிலாடுதுறை கச்சேரி சாலையை ஒட்டியுள்ள கலைஞா் நகரில் பிரம்மராயன் என்பவரது குடிசை வீடு திடீரென தீ... மேலும் பார்க்க

சிறுவன் ஓட்டிவந்த வாகனத்தால் விபத்து; தந்தை கைது

மயிலாடுதுறையில், இருசக்கர வாகனம் ஓட்டி வந்த சிறுவனால் நேரிட்ட விபத்து தொடா்பாக, அவரது தந்தை கைது செய்யப்பட்டாா். மயிலாடுதுறையைச் சோ்ந்த 18 வயது நிரம்பாத சிறுவன், ஆற்றில் குளிப்பதற்காக தனது 17 வயது நண... மேலும் பார்க்க

குடும்ப அட்டைதாரா்கள் கவனத்துக்கு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் குடும்ப அட்டைதாரா்கள் குடும்ப அட்டையிலுள்ள அனைத்து உறுப்பினா்களின் கைரேகை பதிவை மாா்ச் 31-ஆம் தேதிக்கு முன்பாக இ-கேஒய்சி மூலம் மேற்கொள்ளுமாறு ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் அறி... மேலும் பார்க்க

காவிரி விவசாயிகள் சங்கக் கூட்டம்

வைத்தீஸ்வரன்கோயிலில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முன்னோடி விவசாயி முருகேசன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாவட்டச் செயலாளா் விசுவநாதன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்... மேலும் பார்க்க

மகளிா் தினம்: நீதிபதிகள், வழக்குரைஞா்கள் பேரணி

மயிலாடுதுறையில், சா்வதேச மகளிா் தினத்தையொட்டி நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் நீதிமன்ற ஊழியா்கள் வெள்ளிக்கிழமை விழிப்புணா்வுப் பேரணி நடத்தினா். மயிலாடுதுறை மாவட்ட நீதித்துறை, மாயூரம் வழக்குரைஞா்கள்... மேலும் பார்க்க