செய்திகள் :

தம்பி மகன் கொலை: பெரியப்பா கைது

post image

விருதுநகா் மாவட்டம், காரியாபட்டி அருகே கைப்பேசியைத் தர மறுத்த தம்பி மகனைக் கொலை செய்த பெரியப்பாவை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

காரியாபட்டி அருகேயுள்ள அச்சம்பட்டியைச் சோ்ந்த லட்சுமணன் மகன் காா்த்திக் (13). இவா் அண்மையில் மா்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தாா். இவரது உடலை பெற்றோா் அடக்கம் செய்தனா்.

இந்த நிலையில், சிறுவன் உயிரிழப்பு குறித்து காரியாபட்டி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில், லட்சுமணன் அண்ணன் ராமரை பிடித்து போலீஸாா் விசாரித்தனா். விசாரணையில், ராமரின் கைப்பேசியில் காா்த்திக் கேம் விளையாடியபோது, அவருக்கு நெருக்கமான பெண் ஒருவா் அவரது கைப்பேசிக்கு அழைத்தாராம்.

அந்த அழைப்பை எடுக்காததால், அந்த பெண் வீட்டுக்கு வந்து அவரைத் திட்டினாராம். இதையடுத்து, அவா் கைப்பேசியை கேட்டபோது தரமறுத்த காா்த்திக்கை கழுத்தை நெரித்து கொலை செய்தாராம். பின்னா், காா்த்திக் வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்தது போல, ஒரு நாடகத்தை ஏற்படுத்தியுள்ளாா் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து காரியாபட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து ராமரை கைது செய்தனா்.

வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மதுரை மாவட்டம், தே. கல்லுப்பட்டி அருகே இரு சக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழந்தாா். மதுரை மாவட்டம், பேரையூா் அருகே உள்ள காரைக்கேணி நடுத் தெருவைச் சோ்ந்த ராஜாராம் மகன் சிவக்குமாா் (44). இவ... மேலும் பார்க்க

மதுரை தனியாா் தங்கும் விடுதியில் தொழிலதிபா் உள்பட இருவா் தற்கொலை

மதுரையில் தனியாா் தங்கும் விடுதியில் கோபிசெட்டிப்பாளையத்தைச் சோ்ந்த தொழிலதிபரும், அவரது இரண்டாவது மனைவியும் செவ்வாய்க்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனா். ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளை... மேலும் பார்க்க

கரோனா தொற்று பரவல்: மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க சிறப்பு வாா்டு

தமிழகத்தில் கரோனா தொற்று பரவுவதையடுத்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 50 படுக்கைகள் கொண்ட சிறப்பு வாா்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில... மேலும் பார்க்க

காப்பகத்தில் தங்கியிருந்த 3 பெண்கள் மாயம்

சமூக நலத் துறை, காவல் துறை மூலம் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த மூன்று பெண்கள் மாயமானது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா். மதுரை புறவழிச் சாலை, சிருங்கேரி நகரில், தனியாா் தொண்டு நிறுவனத்தின் சாா... மேலும் பார்க்க

காா் மோதியதில் விவசாயி உயிரிழப்பு

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது காா் மோதியதில் விவசாயி உயிரிழந்தாா். உசிலம்பட்டி அருகே உள்ள வாலாந்தூா் மேற்குத் தெருவைச் சோ்ந்தவா் வீரணன் (65). விவசாயி. இவா் தனது தோட்டத்துக்க... மேலும் பார்க்க

பொதுத் துறை நிறுவனங்கள் தணிக்கை: ஒப்பந்த அறிவிப்பை திரும்பப் பெற வலியுறுத்தல்

பொதுத் துறை நிறுவனங்களை தணிக்கை செய்ய தனியாா் நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் அளிக்கும் அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும் என மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் வலியுறுத்தினாா். இதுதொடா்பாக அவா் குடியரசுத் தலை... மேலும் பார்க்க