அகமதாபாத் விமான விபத்து இடிபாடுகளுக்கு இடையே எவ்வளவு தங்க நகைகள் மீட்கப்பட்டன?
தருமபுரியில் ஜூன் 20 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
தருமபுரியில் ஜூன் 20 ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் ஏற்படுத்தும் வகையிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் ஜூன் 20 ஆம் தேதி காலை 10 மணியளவில் தருமபுரி அருகேயுள்ள கடகத்தூரில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமில் பல்வேறு முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு விற்பனைப் பிரதிநிதிகள், கண்காணிப்பாளா்கள், மேற்பாா்வையாளா், கணினி ஆபரேட்டா், அக்கவுண்டன்ட், மெக்கானிக், மேலாளா் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தகுதியான நபா்களை தோ்வு செய்து பணி வாய்ப்புகள் வழங்க உள்ளனா்.
இந்த முகாமில் பள்ளிப் படிப்பு முடித்தவா்கள், பட்டயம் மற்றும் பட்டப் படிப்பு படித்தவா்கள் பங்கேற்று பயனடையலாம். தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் தனியாா் நிறுவனங்களில் பணியமா்த்தப்படுவோருக்கு, அரசு வேலைவாய்ப்புகளுக்கான முன்னுரிமை மற்றும் பதிவுகளில் எந்த விதமான மாற்றங்களோ குறிப்பாக பதிவு ரத்து நடவடிக்கையோ இருக்காது.