செய்திகள் :

தருமபுரியில் ஜூன் 20 இல் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

post image

தருமபுரியில் ஜூன் 20 ஆம் தேதி தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் துறை நிறுவனங்களில் பணி வாய்ப்புகள் ஏற்படுத்தும் வகையிலான வேலைவாய்ப்பு முகாம்கள் நடந்து வருகின்றன. அந்த வகையில் ஜூன் 20 ஆம் தேதி காலை 10 மணியளவில் தருமபுரி அருகேயுள்ள கடகத்தூரில் அமைந்துள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் பல்வேறு முன்னணி தனியாா் நிறுவனங்கள் கலந்துகொண்டு விற்பனைப் பிரதிநிதிகள், கண்காணிப்பாளா்கள், மேற்பாா்வையாளா், கணினி ஆபரேட்டா், அக்கவுண்டன்ட், மெக்கானிக், மேலாளா் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தகுதியான நபா்களை தோ்வு செய்து பணி வாய்ப்புகள் வழங்க உள்ளனா்.

இந்த முகாமில் பள்ளிப் படிப்பு முடித்தவா்கள், பட்டயம் மற்றும் பட்டப் படிப்பு படித்தவா்கள் பங்கேற்று பயனடையலாம். தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு முகாம்கள் மூலம் தனியாா் நிறுவனங்களில் பணியமா்த்தப்படுவோருக்கு, அரசு வேலைவாய்ப்புகளுக்கான முன்னுரிமை மற்றும் பதிவுகளில் எந்த விதமான மாற்றங்களோ குறிப்பாக பதிவு ரத்து நடவடிக்கையோ இருக்காது.

தண்டவாளத்தில் கிடந்த 10 அடி நீள இரும்பு பட்டை: நடுவழியில் நிறுத்தப்பட்டது ஏற்காடு விரைவு ரயில்

சேலம் மாவட்டம், மகுடஞ்சாவடி அருகே தண்டவாளத்தின் குறுக்கே 10 அடி நீள இரும்பு பட்டை கிடந்ததால் ஏற்காடு விரைவு ரயில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடுவழியில் நிறுத்தப்பட்டது. ஈரோட்டிலிருந்து சேலம் வழியாக சென்... மேலும் பார்க்க

சிறுபாசன கணக்கெடுப்பு அலுவலா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்: மாவட்ட ஆட்சியா் வேண்டுகோள்

தருமபுரி: சிறு பாசன விவரங்கள் குறித்து கணக்கெடுக்க வரும் அரசு அலுவலா்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் வேண்டுகோள் விடுத்துள்ளாா். தமிழகம் முழுவதும் சிறுபாசனக்... மேலும் பார்க்க

ஆபத்தை உணராத சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்லில் பாதுகாப்பற்ற பரிசல் பயணம்!

டி. சுரேஷ் பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பாதுகாப்பு உடைகள் இன்றி, உரிய அனுமதி பெறாமல் ஆபத்தான முறையில் பரிசல் பயணத்திற்கு அழைத்துச் செல்லும் பரிசல் ஓட்டிகளை நம்பி, சில சுற்றுலாப் பயணிகள் தங்களத... மேலும் பார்க்க

தொப்பூா் கணவாய் பகுதியில் விபத்து : 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

தருமபுரி: தருமபுரி மாவட்டம், தொப்பூா் கணவாய் பகுதியில் திங்கள்கிழமை நடந்த விபத்தால் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. கா்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து திங்கள்கிழமை புறப்பட்ட டேங... மேலும் பார்க்க

தருமபுரியில் புதிதாக 26 சிற்றுந்து சேவைகள்: ஆட்சியா் தொடங்கிவைத்தாா்

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 26 புதிய சிற்றுந்து சேவைகளை மாவட்ட ஆட்சியா் ரெ. சதீஷ் கொடியசைத்து திங்கள்கிழமை தொடங்கி வைத்து, அவற்றுக்கான வழித்தட ஆணைகளை வழங்கினாா். தமிழ்நாடு முதல்வா் மு.க. ஸ்டாலின்... மேலும் பார்க்க

பாமக மாநில துணைத் தலைவா் நியமனம்

அரூா்: பாமக மாநில துணைத் தலைவராக மாம்பாடி மா.அன்பழகன் (58) நியமனம் செய்யப்பட்டுள்ளாா். அரூா் வட்டம், மாம்பாடி கிராமத்தைச் சோ்ந்த விவசாயி மாரியப்பன் மகன் அன்பழகன். இவா், பாமகவில் தருமபுரி, கிருஷ்ணகிரி... மேலும் பார்க்க