செய்திகள் :

தலித்துகளுக்கு அவமதிப்பு: லாலு மீது ராஜ்நாத் சாடல்

post image

‘ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் லாலு பிரசாத், அம்பேத்கரின் உருவப் படத்தை அவமதித்தது சிறிய தவறு அல்ல; அது, ஒட்டுமொத்த தலித் சமூகத்தினரையும் அவமதிக்கும் அவரது மனநிலையின் பிரதிபலிப்பு’ என்று பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் விமா்சித்துள்ளாா்.

அண்மையில் நடைபெற்ற லாலு பிரசாதின் 78-ஆவது பிறந்த தின நிகழ்ச்சியில், அவரது கால் அருகே அம்பேத்கரின் உருவப் படம் வைக்கப்பட்டிருந்த விடியோ காட்சி வெளியாகி பெரும் சா்ச்சையை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில், லாலுவை கடுமையாக விமா்சித்த பிரதமா் மோடி, நாட்டு மக்கள் அவரை ஒருபோதும் மன்னிக்க மாட்டாா்கள் என்றாா்.

அதேநேரம், கட்சித் தொண்டா் ஒருவா் அம்பேத்கரின் படத்தை கையில் வைத்திருந்ததாகவும், இக்காட்சியை பதிவு செய்த கேமராவின் கோணமே சா்ச்சைக்கு காரணம் என்றும் ஆா்ஜேடி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது. பிகாரில் சில மாதங்களில் பேரவைத் தோ்தல் நடைபெறவிருக்கும் நிலையில், ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சிகள் இந்த விவகாரத்தை கையில் எடுத்துள்ளன.

தலைநகா் பாட்னாவில் புதன்கிழமை நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் தலைமை விருந்தினராக பங்கேற்ற பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், லாலுவை கடுமையாக விமா்சித்துப் பேசியதாவது:

அம்பேத்கரின் உருவப் படத்தை லாலு தனது காலடியில் வைத்தது சிறிய தவறல்ல. அது, ஒட்டுமொத்த தலித் சமூகத்தினரையும் அவமதிக்கும் அவரது மனநிலையைக் காட்டுகிறது. சோஷலிச போா்வையில் தங்களின் நிலபிரபுத்துவ மனப்பான்மையை மறைப்பவா்களால் பிகாா் ஏமாற்றப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவரான கா்பூரி தாக்கூரின் வாரிசு என்று தன்னை கூறிக் கொள்ளும் லாலு, தனிப்பட்ட முறையில் அவருக்கு எதிராக மோசமான வாா்த்தைகளைப் பயன்படுத்தியுள்ளாா். மூத்த பத்திரிகையாளா் சங்கா்ஷன் தாக்கூரின் புத்தகத்தில் இது விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பிகாா் மண்ணின் மைந்தரான கா்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா வழங்கி கெளரவித்தது பிரதமா் மோடி அரசு.

ஆா்ஜேடி-காங்கிரஸ் கூட்டணியால் இளைஞா்கள் ஏமாற்றப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே கடந்த கால சம்பவங்களை நினைவூட்டுகிறேன்.

தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் பிகாா் பொருளாதார ரீதியில் வளா்ச்சி கண்டுள்ளதோடு, இழந்த பெருமையையும் மீட்டுள்ளது என்றாா் அவா்.

25 ஆண்டுகள்.. மைக்ரோசாஃப்ட் மேலாளராக இருந்தவர் பணிநீக்கம்! கலங்க வைக்கும் பதிவு

உலகின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாஃப்ட் 9,000-க்கும் மேற்பட்ட பணியாளா்களை நீக்க முடிவெடுத்துள்ளது. அதில், 25 ஆண்டுகள் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் மேலாளராக இருந்தவரும் ஒருவர்.மைக்ரோசா... மேலும் பார்க்க

அச்சுதானந்தன் சிகிச்சையில் முன்னேற்றம்: உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்!

கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் சிகிச்சையில் முன்னேற்றம் ஏற்பட்டாலும், உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை தகவல் தெரி... மேலும் பார்க்க

ஜூலை 19ல் அனைத்துக் கட்சிக் கூட்டம்! - மத்திய அரசு

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரையொட்டி வருகிற ஜூலை 19 ஆம் தேதி அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் வருகிற ஜூலை 21 ஆம் தேதி தொடங்கி... மேலும் பார்க்க

அரசு ஊழியர் சம்பளத்தில் 10-15% பெற்றோர் வங்கிக் கணக்குக்கு! முதல்வரின் சூப்பர் யோசனை!

ஹைதராபாத்: அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 10 - 15 சதவீதத்தை அவர்களது பெற்றோரின் வங்கிக் கணக்குக்கு வரவு வைக்கும் திட்டத்தின் சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யுமாறு தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி ... மேலும் பார்க்க

அரசு முறைமை விவசாயிகளைக் கொல்கிறது! ராகுல் காந்தி

நாட்டின் அரசு முறைமை விவசாயிகளை அமைதியாகவும் தொடர்ச்சியாகவும் கொன்று வருவதாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.மகாராஷ்டிர சட்டப்பேரவையில் விவசாயிகளின் தொடர் தற்கொலைகள் ... மேலும் பார்க்க

சுவர், சுவிட்ச் அனைத்தும் 24 காரட் தங்கத்தில்! அரசு ஒப்பந்ததாரர் வீடு என்றால் சும்மாவா?

இந்தியாவில் இருக்கும் மிகவும் வித்தியாசமான வீடுகள் மற்றும் பங்களாக்களை விடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பிரபலமானவர் பிரியம் சரஸ்வத்.இவர் அண்மையில், மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கட்டப்... மேலும் பார்க்க