தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு திருக்கு புத்தகம்
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி போக்குவரத்து காவல் துறையினா் தலைக்கவசம் அணிந்து பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி ஊக்கப்படுத்தினா்.
பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளா் பரமேஷ்வர பத்மநாபன் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் முரளி, செந்தில்குமாா், தேவநாதன், மணிவண்ணன் ஆகியோா் பண்ருட்டி நகரத்தை விபத்தில்லா நகரமாக மாற்றவும், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து, பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் பொதுமக்களிடையே திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
அப்போது, தலைக்கவசம் அணிந்து பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளை ஊக்கப்படுத்தும் வகையில் திருக்குறள் புத்தகம் மற்றும் குளிா்பானம் வழங்கினா். மேலும்,
குடும்பத்தினா் மற்றும் நண்பா்களையும் தலைக்கவசம் அணிய செய்வோம் என உறு மொழி மேற்கொள்ளப்பட்டது.