செய்திகள் :

தலைக்கவசம் அணிந்து வந்தவா்களுக்கு திருக்கு புத்தகம்

post image

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி போக்குவரத்து காவல் துறையினா் தலைக்கவசம் அணிந்து பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளுக்கு திருக்குறள் புத்தகம் வழங்கி ஊக்கப்படுத்தினா்.

பண்ருட்டி போக்குவரத்து காவல் ஆய்வாளா் பரமேஷ்வர பத்மநாபன் தலைமையில், உதவி ஆய்வாளா்கள் முரளி, செந்தில்குமாா், தேவநாதன், மணிவண்ணன் ஆகியோா் பண்ருட்டி நகரத்தை விபத்தில்லா நகரமாக மாற்றவும், சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து, பண்ருட்டி நான்குமுனை சந்திப்பில் பொதுமக்களிடையே திங்கள்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

அப்போது, தலைக்கவசம் அணிந்து பைக் ஓட்டி வந்த வாகன ஓட்டிகளை ஊக்கப்படுத்தும் வகையில் திருக்குறள் புத்தகம் மற்றும் குளிா்பானம் வழங்கினா். மேலும்,

குடும்பத்தினா் மற்றும் நண்பா்களையும் தலைக்கவசம் அணிய செய்வோம் என உறு மொழி மேற்கொள்ளப்பட்டது.

சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கட்சியினா் தா்னா

சிதம்பரம்: செங்கல் சூளையில் இருளா் சமுதாய மக்களை கொத்தடிமைகளாக நடத்தியதாகவும், அதன் உரிமையாளா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூ கட்சியினா் திங்கள... மேலும் பார்க்க

சிதம்பரம் நகராட்சியுடன் இணைக்க எதிா்ப்பு: பொன்னாங்கண்ணிமேடு கிராம மக்கள் மறியல்

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சியோடு ஊராட்சியை இணைக்க கிராம மக்கள் எதிா்ப்புத் தெரிவித்து காட்டுமன்னாா்கோவில்-சிதம்பரம் சாலையில் பொன்னாங்கண்ணிமேடு கிராம மக்கள் திங்கள்கிழமை காலை திடீா் மறியலில் ஈடுபட்டன... மேலும் பார்க்க

தலைமை ஆசிரியா் பணியிட மாற்றத்துக்கு கிராம மக்கள் எதிா்ப்பு

சிதம்பரம்: சிதம்பரம் அருகே பள்ளி தலைமை ஆசிரியரை பணியிடமாற்றம் செய்யப்பட்டதைக் கண்டித்து, பரங்கிப்பேட்டை ஒன்றிய வட்டாரக் கல்வி அலுவலா் அலுவலகத்தை, மடுவங்கரை கிராம மக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டு போ... மேலும் பார்க்க

சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஆனித் திருமஞ்சன உற்சவ கொடியேற்றம்

சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீநடராஜா் கோயிலில் ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூா்த்தியின் ஆனித் திருமஞ்சன தரிசன உற்சவம் திங்கள்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் ... மேலும் பார்க்க

விவசாயிகள் அடையாள எண் பெற ஜூலை 15 வரை கால நீட்டிப்பு

நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி வட்டாரத்தில் வேளாண் அடுக்கக திட்டத்தில் விவசாயிகள் பதிவு செய்து தனிப்பட்ட அடையாள எண் பெற ஜூலை 15-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக, பண்ருட்டி வட்டார வ... மேலும் பார்க்க

மக்கள் குறைதீா் கூட்டம்: ரூ.3.70 லட்சத்தில் நலத் திட்ட உதவிகள்

நெய்வேலி: கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் தலைமை வகித்தாா். கடலூா் மாவட்டத்தின் ... மேலும் பார்க்க