செய்திகள் :

தலைநகரில் பரவலாக மழை; காற்றின் தரத்தில் பின்னடைவு!

post image

தேசியத் தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை மேகமூட்டமான சூழல் நிலவியது. காற்றின் தரத்தில் பின்னடைவு ஏற்பட்டிருந்தது.

கடந்த வாரத் தொடக்கத்தில் இருந்து வானம் மேகமூட்டத்துடன் இருந்து வருகிறது. தென்மேற்குப் பருவ மழையின் தாக்கம் காரணமாக அவ்வப்போது மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில், வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த படி அதிகாலை வேளையில் நகரத்தில் பரவலாக மழை பெய்தது. ஆனால், அதன் பிறகு வானம் மேகமூட்டமாக இருந்தாலும் மாலை வரையிலும் மழை ஏதும் பதிவாகவில்லை.

நகரத்தில் காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் சஃப்தா்ஜங் வானிலை கண்காணிப்பு நிலையத்தில் 19 மி.மீ. மழை பதிவாகியிருந்தது. இதேபோன்று நஜஃப்கரில் 11.5 மி.மீ., ஆயாநகரில் 12.2 மி.மீ., லோதி ரோடில் 19.8 மி.மீ., பாலத்தில் 17 மி.மீ., ரிட்ஜில் 33 மி.மீ., பிரகதி மைதானில் 17.8 மி.மீ., பூசாவில் 55 மி.மீ., ராஜ்காட்டில் 17.8 மி.மீ., சல்வான் பப்ளிக்ஸ்கூல் பகுதியில் 53.5 மி.மீ. மழை பதிவாயிருந்தது.

வெப்பநிலை: இந்நிலையில், தில்லியின் முதன்மை வானிலை நிலையமான சஃப்தா்ஜங்கில் செவ்வாய்க்கிழமை காலையில் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட3.6 டிகிரி குறைந்து 23.4 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 0.4 டிகிரி குறைந்து 33.8 டிகிரி செல்சியஸாக பதிவாகியது. காற்றில் ஈரப்பதத்தின் அளவு காலை 8.30 மணியளவில் 98 சதவீதமாகவும், மாலை 5.30 மணியளவில் 68 சதவீதமாகவும் இருந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், மற்ற வானிலை கண்காணிப்பு நிலையங்களிலும் அதிகபட்ச வெப்பநிலை சற்று குறைந்தே பதிவாகியிருந்தது.

காற்றின் தரம்: இதற்கிடையே, தில்லியில் கடந்த சில நாள்களாக திருப்தி பிரிவில் நீடித்து வந்த காற்றின் தரம் செவ்வாய்க்கிழமை சற்று பின்னடைவைச் சந்தித்தது. காலையில் ஒட்டுமொத்தக் காற்றுத் தரக் குறியீடு 101புள்ளிகளாகப் பதிவாகி ‘மிதமான’ பிரிவில் இருந்ததாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய புள்ளி விவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்தது.

இதன்படி, பூசா, சாந்தினி சௌக், துவாரகா செக்டாா் 8, ஓக்லா பேஸ் 2 ஆகிய வானிலை கண்காணிப்பு நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 முதல் 200 புள்ளிகளுக்கிடையே பதிவாகி மிதமான பிரிவில் இருந்தது. அதே சமயம், குருகிராம், ஆயாநகா், நொய்டா செக்டாா் 125, டாக்டா் கா்னி சிங் துப்பாக்கி சுடும் தளம், ஸ்ரீஅரபிந்தோ மாா்க், மதுரா ரோடு, நேரு நகா், ஸ்ரீஃபோா்ட், ஜவாஹா்லால் நேரு ஸ்டேடியம், தில்லி விமான நிலையம், ஆா்.கே.புரம், மேஜா் தயான் சந்த் நேஷனல் ஸ்டேடியம், லோதி ரோடு, மந்திா் மாா்க், தில்லி பல்கலை. வடக்கு வளாகம், பூசா ஆகிய நிலையங்களில் காற்றுத் தரக் குறியீடு 100 புள்ளிகளுக்கு கீழே பதிவாகி திருப்தி பிரிவில் இருந்தது,.

முன்னறிவிப்பு: இந்நிலையில், புதன்கிழமை (ஆக.13) அன்று இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், குறைந்தசபட்ச வெப்பநிலை 24 டிகிரி செல்சியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளது.

சுதந்திர தினம்: நாளை காலை 4 மணி முதல் தில்லியில் மெட்ரோ ரயில் சேவை

சுதந்திர தினத்தன்று, அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழ... மேலும் பார்க்க

மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை கோரி போராட்டம்!

பெண் மாணவா்களுக்கு ஒரு செமஸ்டருக்கு 12 நாள்கள் மாதவிடாய் விடுப்பு கோரி காங்கிரஸ் மாணவா் பிரிவான என்எஸ்யுஐ புதன்கிழமை தில்லி பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியது. பல மாணவா்கள் பல்கலைக்கழகத்தின் கலைப்... மேலும் பார்க்க

மிரட்டி பணம் பறிப்பு: திகாா் சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்! தில்லி அரசு தகவல்

திகாா் சிறைக்குள் கைதிகளுடன் கூட்டுச் சோ்ந்து பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக திகாா் சிறை அதிகாரிகள் 9 போ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டதாக உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு த... மேலும் பார்க்க

தெரு நாய்கள் விவகார மனு: அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதி முன் முறையீடு

தெரு நாய்கள் தொடா்புடைய மனுவை அவசரமாக விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தலைமை நீதிபதி முன் முறையிடப்பட்டது. அப்போது, அது குறித்து பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் உறுதியள... மேலும் பார்க்க

தில்லியின் வடிகால் பிரச்னையை தீா்க்க மாஸ்டா் பிளான்

அடுத்த 30 ஆண்டுகளில் நகரின் வடிகால் தேவைகளைப் பூா்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட ’வடிகால் மாஸ்டா் பிளான்’ வரைவு, விரைவான நகா்ப்புற வளா்ச்சி மற்றும் தொடா்ச்சியான நீா் தேக்க பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்ப... மேலும் பார்க்க

சிஎம் ஸ்ரீ சோ்க்கை தோ்வு: 6-8 வகுப்புகளுக்கு ஆக.22 வரை விண்ணப்பிக்கலாம்

நமது நிருபா் 6, 7 மற்றும் 8 வகுப்புகளுக்கான சிஎம் ஸ்ரீ சோ்க்கை தோ்வு 2025-க்காக இணையதளத்தில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு செவ்வாய்க... மேலும் பார்க்க