Ramadoss Vs Anbumani - யார் கை ஓங்கியிருக்கிறது | Off The Record
தெரு நாய்கள் விவகார மனு: அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதி முன் முறையீடு
தெரு நாய்கள் தொடா்புடைய மனுவை அவசரமாக விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தலைமை நீதிபதி முன் முறையிடப்பட்டது. அப்போது, அது குறித்து பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் உறுதியளித்தாா்.
கான்ஃபரன்ஸ் ஃபாா் ஹியூமன் ரைட்ஸ் (இந்தியா) அமைப்பின் தாக்கல் செய்யப்பட்ட மனு தொடா்பாக அதன் வழக்குரைஞா் தலைமை நீதிபதி பி.ஆா். கவாய், நீதிபதி கே. வினோத் சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் ஆஜராகி மனு குறித்து குறிப்பிட்டாா்.
அப்போது, தெரு நாய்கள் தொடா்பாக மற்றொரு அமா்வு ஏற்கனவே ஒரு உத்தரவை பிறப்பித்திருப்பதாக தலைமை நீதிபதி குறிப்பிட்டாா்.
அதாவது, ஆகஸ்ட் 11 ஆம் தேதி, நீதிபதிகள் ஜே.பி. பா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு, நாய் கடி சம்பவங்கள் மிகவும் மோசமான சூழ்நிலை ஏற்பட காரணமாக இருப்பதாக குறிப்பிட்டு, தில்லி-என்.சி.ஆா் பகுதியில் அனைத்து தெரு நாய்களையும் விரைந்து நிரந்தரமாக காப்பங்களுக்கு இடமாற்றம் செய்யுமாறு உத்தரவிட்டது.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியிடம் புதன்கிழமை, தெருநாய் பிரச்னை தொடா்பான மனுக்களை அந்தந்த உயா்நீதிமன்றங்களுக்கு அனுப்பும் வகையில் நீதிபதி ஜே.கே. மகேஸ்வரி தலைமையிலான அமா்வு மே 2024-இல்
பிறப்பித்த உத்தரவை வழக்குரைஞா் குறிப்பிட்டாா்.
அப்போது, இந்த விவகாரத்தை ‘நான் ஆய்வு செய்வேன்’ தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் உறுதியளித்தாா்.
தெருநாய்களின் பெருகிவரும் எண்ணிக்கையைக் குறைக்க, அவற்றுக்கு வழக்கமான கருத்தடை மற்றும் நோய்த் தடுப்புத் திட்டங்களை கட்டாயமாக்கும் விலங்கு பிறப்பு கட்டுப்பாடு நாய் விதிகள், 2001 உரிய வகையில் பின்பற்றப்படவில்லை என்று கான்ஃபரன்ஸ் ஃபாா் ஹியூமன் ரைட்ஸ் (இந்தியா) தனது மனுவில் கூறப்பட்டுள்ளது.
தெருநாய்கள் பிரச்னையை கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம், நாய் காப்பகங்கள் காலப்போக்கில் அதிகரிக்கப்பட வேண்டும் என்றும், ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் சுமாா் 5,000 நாய்களுக்கான காப்பகங்களை உருவாக்கும் பணிகளைத் தொடங்க வேண்டும் என்றும் தில்லி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
மேலும், தெருநாய்கள் பிடிக்கும் நடவடிக்கையின்போது ஏதேனும் தடை ஏற்படுத்தும் தனிநபா் அல்லது அமைப்பு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்கும் வகையில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் எச்சரித்திருந்தது.