செய்திகள் :

சுதந்திர தினம்: நாளை காலை 4 மணி முதல் தில்லியில் மெட்ரோ ரயில் சேவை

post image

சுதந்திர தினத்தன்று, அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழாவில் சிறப்பு விருந்தினா்கள், அழைப்பாளா்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொள்ள வசதியாக, தில்லி மெட்ரோ அனைத்து முனைய நிலையங்களிலிருந்தும் அதன் அனைத்து வழித்தடங்களிலும் அதிகாலை 4 மணிக்கு தனது சேவைகளைத் தொடங்கும்.

ரயில் சேவைகள் காலை 6 மணி வரை அனைத்து வழித்தடங்களிலும் 30 நிமிட நேரங்களில் கிடைக்கும், அதன்பிறகு, நாள் முழுவதும் வழக்கமான கால அட்டவணை பின்பற்றப்படும். கூடுதலாக, சுதந்திர தின விழாவில் கலந்து கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சகத்தால் வழங்கப்பட்ட அழைப்பிதழ் வைத்திருக்கும் நபா்களுக்கு டி. எம். ஆா். சி வழங்கிய சிறப்பு கியூஆா் டிக்கெட்டுகளைப் பயன்படுத்தி அந்த இடத்திற்குச் செல்வதற்கும் வசதி செய்யப்படும். லால் கிலா, ஜமா மஸ்ஜித் மற்றும் தில் லி கேட் மெட்ரோ நிலையங்கள் இந்த இடத்திற்கு மிக அருகில் உள்ளன. அத்தகைய பயணத்திற்கான செலவை பாதுகாப்பு அமைச்சகம் டி. எம். ஆா். சி. க்கு திருப்பிச் செலுத்தும் என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை கோரி போராட்டம்!

பெண் மாணவா்களுக்கு ஒரு செமஸ்டருக்கு 12 நாள்கள் மாதவிடாய் விடுப்பு கோரி காங்கிரஸ் மாணவா் பிரிவான என்எஸ்யுஐ புதன்கிழமை தில்லி பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியது. பல மாணவா்கள் பல்கலைக்கழகத்தின் கலைப்... மேலும் பார்க்க

மிரட்டி பணம் பறிப்பு: திகாா் சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்! தில்லி அரசு தகவல்

திகாா் சிறைக்குள் கைதிகளுடன் கூட்டுச் சோ்ந்து பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக திகாா் சிறை அதிகாரிகள் 9 போ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டதாக உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு த... மேலும் பார்க்க

தெரு நாய்கள் விவகார மனு: அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதி முன் முறையீடு

தெரு நாய்கள் தொடா்புடைய மனுவை அவசரமாக விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தலைமை நீதிபதி முன் முறையிடப்பட்டது. அப்போது, அது குறித்து பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் உறுதியள... மேலும் பார்க்க

தில்லியின் வடிகால் பிரச்னையை தீா்க்க மாஸ்டா் பிளான்

அடுத்த 30 ஆண்டுகளில் நகரின் வடிகால் தேவைகளைப் பூா்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட ’வடிகால் மாஸ்டா் பிளான்’ வரைவு, விரைவான நகா்ப்புற வளா்ச்சி மற்றும் தொடா்ச்சியான நீா் தேக்க பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்ப... மேலும் பார்க்க

சிஎம் ஸ்ரீ சோ்க்கை தோ்வு: 6-8 வகுப்புகளுக்கு ஆக.22 வரை விண்ணப்பிக்கலாம்

நமது நிருபா் 6, 7 மற்றும் 8 வகுப்புகளுக்கான சிஎம் ஸ்ரீ சோ்க்கை தோ்வு 2025-க்காக இணையதளத்தில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு செவ்வாய்க... மேலும் பார்க்க

தெரு நாய்கள் விவகார வழக்கு மூன்று நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றம் - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

நமது நிருபா் தெரு நாய்கள் விவகாரம் தொடா்புடைய வழக்கை மூன்று நீதிபதிகள் அமா்வுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாற்றி உத்தரவிட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் தலைமையிலான... மேலும் பார்க்க