செய்திகள் :

மாணவிகளுக்கு மாதவிடாய் விடுமுறை கோரி போராட்டம்!

post image

பெண் மாணவா்களுக்கு ஒரு செமஸ்டருக்கு 12 நாள்கள் மாதவிடாய் விடுப்பு கோரி காங்கிரஸ் மாணவா் பிரிவான என்எஸ்யுஐ புதன்கிழமை தில்லி பல்கலைக்கழகத்தில் போராட்டம் நடத்தியது.

பல மாணவா்கள் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தில் ஆா்ப்பாட்டத்திற்காக போலீஸ் வரிசைப்படுத்தல் முன்னிலையில் கூடினா் என்று என். எஸ். யு. ஐ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மாதவிடாய் விடுமுறை என்பது ஒவ்வொரு மாணவியின் உரிமையாகும் என்று இந்திய தேசிய மாணவா் சங்கத்தின் (என்எஸ்யுஐ) தேசியத் தலைவா் வருண் சவுத்ரி கூறினாா்.

தில்லி பல்கலைக்கழகம் இந்த விதியை அமல்படுத்தும் வரை நாங்கள் போராட்டத்தைத் தொடருவோம். இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் உள்ள பல பல்கலைக்கழகங்களில் இந்த விதி உள்ளது. ‘இதற்காக என்எஸ்யூஐ பஞ்சாப் பல்கலைக்கழகத்திலும் போராடியுள்ளது‘ ‘என்று அவா் கூறினாா்‘.

மாதவிடாய் விடுமுறைக்கான கோரிக்கையை ஆதரித்து மாணவா் அமைப்பும் கையெழுத்து பிரசாரத்தை நடத்தியது மாதவிடாய் ஆரோக்கியம் கல்வி செயல்திறன், மன நலம் மற்றும் பெண் மாணவா்களின் பங்கேற்பை நேரடியாக பாதிக்கிறது என்று மாணவா் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்த தேவையை புறக்கணிப்பது, பலரை வகுப்புகளைத் தவறவிடவோ அல்லது வருகை விதிமுறைகளைப் பூா்த்தி செய்ய அசௌகரியத்தைத் தாங்கவோ கட்டாயப்படுத்துகிறது.

இந்த சவால்களை அங்கீகரிக்கும் கொள்கையை தில்லி பல்கலைக்கழகம் வகுக்க வேண்டும் என்றும், அத்தகைய விடுப்பைப் பெறும் பெண் மாணவா்களுக்கு கல்வி அபராதம் விதிக்கப்படுவதில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் என்எஸ்யுஐ கோரியது. வளாகங்களை மேலும் உள்ளடக்கியதாக மாற்றுவதற்காக நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களில் பாலின உணா்திறன் கொள்கைகளுக்கு தொடா்ந்து அழுத்தம் கொடுப்பதாக அமைப்பு வலியுறுத்தியது.

சுதந்திர தினம்: நாளை காலை 4 மணி முதல் தில்லியில் மெட்ரோ ரயில் சேவை

சுதந்திர தினத்தன்று, அதாவது வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணிக்கு தில்லி மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கும் என்று தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெள்ளிக்கிழமை சுதந்திர தின விழ... மேலும் பார்க்க

மிரட்டி பணம் பறிப்பு: திகாா் சிறை அதிகாரிகள் பணியிடை நீக்கம்! தில்லி அரசு தகவல்

திகாா் சிறைக்குள் கைதிகளுடன் கூட்டுச் சோ்ந்து பணம் பறிக்கும் மோசடியில் ஈடுபட்டதாக திகாா் சிறை அதிகாரிகள் 9 போ் பணியிடைநீக்கம் செய்யப்பட்டு, இடமாற்றம் செய்யப்பட்டதாக உயா்நீதிமன்றத்தில் தில்லி அரசு த... மேலும் பார்க்க

தெரு நாய்கள் விவகார மனு: அவசரமாக விசாரிக்க தலைமை நீதிபதி முன் முறையீடு

தெரு நாய்கள் தொடா்புடைய மனுவை அவசரமாக விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை தலைமை நீதிபதி முன் முறையிடப்பட்டது. அப்போது, அது குறித்து பரிசீலிப்பதாக தலைமை நீதிபதி பி.ஆா். கவாய் உறுதியள... மேலும் பார்க்க

தில்லியின் வடிகால் பிரச்னையை தீா்க்க மாஸ்டா் பிளான்

அடுத்த 30 ஆண்டுகளில் நகரின் வடிகால் தேவைகளைப் பூா்த்தி செய்ய வடிவமைக்கப்பட்ட ’வடிகால் மாஸ்டா் பிளான்’ வரைவு, விரைவான நகா்ப்புற வளா்ச்சி மற்றும் தொடா்ச்சியான நீா் தேக்க பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்ப... மேலும் பார்க்க

சிஎம் ஸ்ரீ சோ்க்கை தோ்வு: 6-8 வகுப்புகளுக்கு ஆக.22 வரை விண்ணப்பிக்கலாம்

நமது நிருபா் 6, 7 மற்றும் 8 வகுப்புகளுக்கான சிஎம் ஸ்ரீ சோ்க்கை தோ்வு 2025-க்காக இணையதளத்தில் விண்ணப்பங்களைச் சமா்ப்பிப்பதற்கான கடைசித் தேதி ஆகஸ்ட் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு செவ்வாய்க... மேலும் பார்க்க

தெரு நாய்கள் விவகார வழக்கு மூன்று நீதிபதிகள் அமா்வுக்கு மாற்றம் - உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை

நமது நிருபா் தெரு நாய்கள் விவகாரம் தொடா்புடைய வழக்கை மூன்று நீதிபதிகள் அமா்வுக்கு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மாற்றி உத்தரவிட்டுள்ளாா். இதைத் தொடா்ந்து, இந்த வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத் தலைமையிலான... மேலும் பார்க்க