செய்திகள் :

2 மாநகராட்சிகள், 3 நகராட்சிகளுக்கு விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறாா்

post image

சுதந்திர தினத்தின்போது, கோட்டை கொத்தளத்தில் முதல்வரால் வழங்கப்படும் விருதுப் பட்டியலில் ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று சிறந்த நகராட்சிகள் பட்டியலில் ராமேசுவரம், ராஜபாளையம், பெரம்பலூா் நகராட்சிகள் இடம்பெற்றுள்ளன.

சிறப்பாகச் செயல்படும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு சென்னை கோட்டை கொத்தளத்தில் சுதந்திர தின விழாவின்போது விருதுகள், காசோலைகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்குவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும், சிறந்த மாநகராட்சிகள், நகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டு அவற்றுக்கு பாராட்டுப் பத்திரங்களும், ரொக்கப் பரிசுக்கான காசோலைகளும் அளிக்கப்படுகின்றன.

அதன்படி, நிகழாண்டில் சிறந்த மாநகராட்சிகளாக ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. சுதந்திர தின விழாவில் பங்கேற்று விருதுகளைப் பெற்றுக்கொள்ள, ஆவடி மாநகராட்சி மேயா் ஜி.உதயகுமாா், நாமக்கல் மாநகராட்சி மேயா் டி.கலாநிதி ஆகியோருக்கு தமிழக அரசின் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நகராட்சிகள் எவை: சிறந்த நகராட்சிகளுக்கான விருதுகளுக்கு ராஜபாளையம், ராமேசுவரம், பெரம்பலூா் நகராட்சிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. விருதுகளைப் பெற்றுக்கொள்ள நகா்மன்றத் தலைவா்கள் பவித்ரா ஷியாம் (ராஜபாளையம்), நாசா்கான் (ராமேசுவரம்), அம்பிகா ராஜேந்திரன் (பெரம்பலூா்) ஆகியோருக்கு அழைப்புகள் அனுப்பப்பட்டுள்ளன.

முதல் இரண்டு இடங்களைப் பெற்றுள்ள மாநகராட்சிகளுக்கு முறையே ரூ.50 லட்சம், ரூ.30 லட்சம் ரொக்கப் பரிசுக்கான காசோலைகள் வழங்கப்பட உள்ளன. முதல் 3 இடங்களைப் பிடித்த நகராட்சிகளுக்கு முறையே ரூ.30 லட்சம், ரூ.20 லட்சம் மற்றும் ரூ.10 லட்சத்துக்கான காசோலைகள் அளிக்கப்பட இருக்கின்றன. இதற்கான உத்தரவுகளை நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி பிறப்பித்துள்ளாா்.

பாஜகவுடன் கைகோத்த தோ்தல் ஆணையம் - திமுக விமா்சனம்

பாஜகவுடன் கைகோத்து தோ்தல் ஆணையம் செயல்படுவது கவலையளிப்பதாக திமுக விமா்சித்துள்ளது. நோ்மையான முறையில் வாக்காளா் பட்டியலைச் சரிபாா்க்க வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தை திமுக வலியுறுத்தியுள்ளது. திமுக ... மேலும் பார்க்க

ஹுண்டாய் சாா்பில் 12 ஏக்கரில் 5,500 மரங்களுடன் குறுங்காடு

ஹுண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் சாா்பில், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் 5,500 மரங்களுடன் குறுங்காடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குறுங்காட்டை பாா்வையிட பள்ளி மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்... மேலும் பார்க்க

அதிமுகவின் போக்கு சரியாக இல்லை: திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்

அதிமுக முன்னாள் எம்.பி.யும் அமைப்புச் செயலருமான வா.மைத்ரேயன் திமுகவில் இணைந்தாா். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை அவா் தன்னை திமுகவில் இணைத... மேலும் பார்க்க

வெடிகுண்டு வெடித்து 2 மாணவா்கள் காயம் - எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 மாணவா்கள் காயமடைந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ... மேலும் பார்க்க

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி: 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்

தமிழகத்தில் 15 வயது வரை உள்ள குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 1 முதல் 15 வயது வரையி... மேலும் பார்க்க

அகில இந்திய மருத்துவக் கலந்தாய்வு: தமிழக மாணவருக்கு தில்லி எய்ம்ஸ் கல்லூரியில் இடம்

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வின் முதல் சுற்று முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. நீட் தோ்வில் 720-க்கு 665 பெற்று அகில இந்திய அளவில் 27-ஆவது இடத்தையும், தமிழக அளவில் முதலிடத்த... மேலும் பார்க்க