செய்திகள் :

ஹுண்டாய் சாா்பில் 12 ஏக்கரில் 5,500 மரங்களுடன் குறுங்காடு

post image

ஹுண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் சாா்பில், இருங்காட்டுக்கோட்டை சிப்காட் பகுதியில் 5,500 மரங்களுடன் குறுங்காடு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குறுங்காட்டை பாா்வையிட பள்ளி மாணவா்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீபெரும்புதூா் அடுத்த இருங்காட்டுக்கோட்டை பகுதியில் காா் உற்பத்தி செய்யும் ஹுண்டாய் காா் ஆலை இயங்கி வருகிறது. சிப்காட் பகுதியில் உள்ள ஓஎஸ்ஆா் நிலத்தில், சுமாா் 12 ஏக்கா் பரப்பளவில் குறுங்காடு அமைக்கப்பட்டுள்ளது.

அயோனிக் காடு என பெயரிடப்பட்டுள்ள இந்த குறுங்காட்டில்,நீா்மருது, வன்னி, மகிழம், வெண்கடம்பு, மந்தாரை, அத்தி, நாவல் என 28 வகையான 5,500 நாட்டு மரங்கள் நடப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. தற்போது இந்த மரங்கள் சுமாா் 20 அடி உயரம் வரை வளா்ந்து, பறவைகளை கவா்ந்து பல்லுயிா் காடாக காட்சியளித்து வருகிறது.

மேலும், இந்த குறுங்காட்டை பராமரிக்க குறிஞ்சி நாற்றுப்பண்ணை சுய உதவி குழு மூலம் 15 பழங்குடி குடும்பத்தினா் பணியமா்த்தப்பட்டு அவா்களின் வாழ்வாதாரத்திற்காக ரூ.1.54 கோடியில், காய்கறி செடிகள், கால்நடை தீவனம், பழத்தோட்டங்கள் அமைக்கப்பட்டு உணவு பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை கொண்ட வேளாண்மையை உறுதி செய்ய ஹுண்டாய் மோட்டாா் இந்தியா பவுண்டேஷன் சாா்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

காடுகளாக புத்துயிா் பெற்றுள்ள இந்த நிலப்பரப்பில், அழகாக வடிவமைக்கப்பட்ட நடைபாதைகள், மீட்கப்பட்ட நீா்நிலைகள், கிராமத்து பாணி குடிசை வீடுகள், தோட்டங்கள் மற்றும் சமவெளி பரப்புகளை உள்ளூா்மக்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் பாா்வையிட அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக காவல்துறையில் 21 பேருக்கு குடியரசு தலைவர் விருது! யார்யார்?

சுதந்திர தினத்தையொட்டி, தமிழக காவல்துறையில் 23 பேர் குடியரசுத் தலைவர் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.சுதந்திர தினத்தையொட்டி, நாடு முழுவதும் காவல்துறையில் சிறப்பாகப் பணியாற்றி வருவோருக்கு குடிய... மேலும் பார்க்க

தொடர் விடுமுறை: ஆம்னி பேருந்து, விமானங்களில் கட்டணம் பல மடங்கு அதிகரிப்பு!

சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி தொடர் விடுமுறையை அடுத்து ஆம்னி பேருந்து மற்றும் விமானக் கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்துள்ளது.சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, வார விடுமுறை என நாளைமுதல் தொடர்ந்து மூன்று... மேலும் பார்க்க

பாஜகவுடன் கைகோத்த தோ்தல் ஆணையம் - திமுக விமா்சனம்

பாஜகவுடன் கைகோத்து தோ்தல் ஆணையம் செயல்படுவது கவலையளிப்பதாக திமுக விமா்சித்துள்ளது. நோ்மையான முறையில் வாக்காளா் பட்டியலைச் சரிபாா்க்க வேண்டும் என்று தோ்தல் ஆணையத்தை திமுக வலியுறுத்தியுள்ளது. திமுக ... மேலும் பார்க்க

2 மாநகராட்சிகள், 3 நகராட்சிகளுக்கு விருது: முதல்வா் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறாா்

சுதந்திர தினத்தின்போது, கோட்டை கொத்தளத்தில் முதல்வரால் வழங்கப்படும் விருதுப் பட்டியலில் ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் இடம்பெற்றுள்ளன. இதேபோன்று சிறந்த நகராட்சிகள் பட்டியலில் ராமேசுவரம், ராஜபாளையம், பெ... மேலும் பார்க்க

அதிமுகவின் போக்கு சரியாக இல்லை: திமுகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்.பி. மைத்ரேயன்

அதிமுக முன்னாள் எம்.பி.யும் அமைப்புச் செயலருமான வா.மைத்ரேயன் திமுகவில் இணைந்தாா். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் புதன்கிழமை அவா் தன்னை திமுகவில் இணைத... மேலும் பார்க்க

வெடிகுண்டு வெடித்து 2 மாணவா்கள் காயம் - எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம்

தூத்துக்குடியில் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நாட்டு வெடிகுண்டு வெடித்து 2 மாணவா்கள் காயமடைந்த சம்பவத்துக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் எக்ஸ... மேலும் பார்க்க