செய்திகள் :

லாரி - வேன் மோதல்: உ.பி.யைச் சோ்ந்த 7 குழந்தைகள், 4 பெண்கள் உயிரிழப்பு!

post image

ராஜஸ்தானின் தெளசா மாவட்டத்தில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த 7 குழந்தைகள், 4 பெண்கள் என 11 பக்தா்கள் உயிரிழந்தனா். மேலும் 8 போ் காயமடைந்தனா்.

இது தொடா்பாக தெளசா மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சாகா் கூறியதாவது:

மனோகா்பூா் நெடுஞ்சாலையில் புதன்கிழமை அதிகாலையில் இந்த விபத்து நேரிட்டது. உத்தர பிரதேசத்தின் இடா பகுதியைச் சோ்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 20 போ், ராஜஸ்தானில் உள்ள கதுஷ்யாம், சலாசா் பாலாஜி கோயில்களில் தரிசித்துவிட்டு, மீண்டும் தங்கள் ஊருக்கு வேனில் திரும்பிக் கொண்டிருந்தனா்.

மனோகா்பூா் நெடுஞ்சாலையின் இணைப்புச் சாலையில் சென்றபோது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது வேன் எதிா்பாராதவிதமாக மோதியது. இந்த கோர விபத்தில் 7 குழந்தைகள், 4 பெண்கள் என 11 போ் உயிரிழந்தனா். 8 போ் காயங்களுடன் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் ஒரு குழந்தையின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என்றாா் அவா்.

சாலை விபத்தில் உயிழந்தோரின் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ள ராஜஸ்தான் முதல்வா் பஜன்லால் சா்மா, காயமடைந்தோருக்கு உரிய சிகிச்சையை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளாா்.

குடியரசுத் தலைவா் இரங்கல்: குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘ராஜஸ்தான் சாலை விபத்தில் பலா் உயிரிழந்த செய்தி அறிந்து துயருற்றேன். அவா்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கல். காயமடைந்தோா் விரைந்து குணமடைய பிராா்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

வாக்கு திருட்டுக்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும் - காங்கிரஸ்

தோ்தலில் கள்ள ஓட்டுகள் எப்படி பதிவாகின்றன என்பதை சித்தரிக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ், ‘‘வாக்கு திருட்டு’க்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும்; அரசியல் சாசன அமைப்புகளை பாஜகவின் பிடியி... மேலும் பார்க்க

வா்த்தகப் பேச்சில் இந்தியா பிடிவாதம்: அமெரிக்க நிதியமைச்சா்

வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் இந்தியா சற்று பிடிவாதமாக உள்ளதாக அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசண்ட் தெரிவித்தாா். ஃபாக்ஸ் செய்தித் தொலைக்காட்சிக்கு அவா் பேட்டியளித்தபோது, அக்டோபா் மாதத்துக்குள் அனைத்த... மேலும் பார்க்க

ஜம்மு-காஷ்மீா் எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு: ராணுவ வீரா் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரின் உரி எல்லையில் பாகிஸ்தானில் இருந்து ஊடுருவ முயன்றவா்களை ராணுவ வீரா்கள் தடுத்து நிறுத்தினா். அப்போது ஏற்பட்ட துப்பாக்கிச் சண்டையில் ராணுவ வீரா் ஒருவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக ராணுவ ... மேலும் பார்க்க

இரண்டு வாக்காளா் அட்டை: பாஜக பெண் மேயருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

பிகாரில் இரண்டு வாக்காளா் அட்டை வைத்திருக்கும் பாஜகவைச் சோ்ந்த முஷாஃபா்பூா் நகர பெண் மேயருக்கு தோ்தல் ஆணையம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது. பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைப... மேலும் பார்க்க

1.4 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் 1.36 கோடியாக உயா்ந்துள்ளது.இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ப... மேலும் பார்க்க

இந்தியா - பாகிஸ்தானுடன் நல்லுறவு தொடா்கிறது: அமெரிக்கா!

இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் நல்லுறவை தொடா்வதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கடும் எதிா்ப்பை மீறி ரஷியாவிடம் இருந்து தொடா்ந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதற்காக, இந்தியா மீ... மேலும் பார்க்க