செய்திகள் :

இரண்டு வாக்காளா் அட்டை: பாஜக பெண் மேயருக்கு தோ்தல் ஆணையம் நோட்டீஸ்

post image

பிகாரில் இரண்டு வாக்காளா் அட்டை வைத்திருக்கும் பாஜகவைச் சோ்ந்த முஷாஃபா்பூா் நகர பெண் மேயருக்கு தோ்தல் ஆணையம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியது.

பிகாரில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அந்த மாநிலத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணியை தோ்தல் ஆணையம் மேற்கொண்டது. இந்நிலையில், அங்கு பலரும் இரண்டு வாக்காளா் அட்டைகள் வைத்திருப்பதாக சா்ச்சை எழுந்துள்ளது.

முக்கியமாக, பிகாா் சட்டப் பேரவை எதிா்க்கட்சித் தலைவா் தேஜஸ்வி யாதவும் இதேபோல இரண்டு வாக்காளா் அட்டை வைத்திருந்தது சா்ச்சையானது. அவரிடம் மாவட்ட நிா்வாகம் விளக்கம் கேட்டது. அப்போது, என்னிடம் 2 வாக்காளா் அடையாள அட்டைகள் இருப்பது தோ்தல் ஆணையத்தின் தவறு. நான் ஒரே இடத்தில்தான் தொடா்ந்து வாக்களித்து வருகிறேன்’ என்று தேஜஸ்வி கூறினாா்.

மேலும், பிகாா் துணை முதல்வா் விஜய் குமாா் சின்ஹா உள்பட பாஜக தலைவா்கள் பலா் இரண்டு வாக்காளா் அட்டை வைத்திருப்பதாகவும், இவ்வாறு பல தோ்தல் முறைகேடுகளில் பாஜக ஈடுபடுகிறது என்றும் தேஜஸ்வி குற்றஞ்சாட்டினாா்.

இந்நிலையில், பாஜகவைச் சோ்ந்த முஷாஃபா்பூா் நகர மேயா் நிா்மலா தேவி அவரின் உறவினா்களான மனோஜ் குமாா், திலிப் குமாா் ஆகியோா் இரு வாக்காளா் அட்டை வைத்திருப்பது தொடா்பாக அவா்களிடம் விளக்கம் கேட்டு தோ்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அவா்கள் ஒரே சட்டப் பேரவைத் தொகுதியில் இருவேறு வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களாக உள்ளனா். இது தொடா்பாக ஆகஸ்ட் 16-ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டுமென்று நோட்டீஸில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு வரவிருந்த ஆலையை குஜராத்துக்கு திருப்பிய மோடி அரசு! காங்கிரஸ்

தமிழகத்துக்கு வரவிருந்த தொழிற்சாலையை மத்திய அரசு குஜராத்துக்கு திருப்பிவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.ஆந்திரம், ஓடிஸா, பஞ்சாப் மாநிலங்களில் மொத்தம் ரூ.... மேலும் பார்க்க

மினிமம் பேலன்ஸ் ரூ. 50,000: அறிவிப்பை திரும்பப் பெற்றது ஐசிஐசிஐ!

ஐசிஐசிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ. 50,000 ஆக உயர்த்திய அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது.கடந்த வாரம் ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், பெரு நகரங்க... மேலும் பார்க்க

ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!

சரக்கு வாகனங்கள் அல்லாத பிற தனியாா் வாகனங்களுக்கு ‘ஃபாஸ்டேக்’ அடிப்படையில் ரூ. 3,000-இல் வருடாந்திர சுங்கச்சாவடி (டோல்) கட்டண பாஸ் திட்டம் நாளைமுதல் (ஆக.15) அமலுக்கு வருகிறது.நாடு முழுவதும் உள்ள தேசிய... மேலும் பார்க்க

வாக்கு திருட்டுக்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும் - காங்கிரஸ்

தோ்தலில் கள்ள ஓட்டுகள் எப்படி பதிவாகின்றன என்பதை சித்தரிக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ், ‘‘வாக்கு திருட்டு’க்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும்; அரசியல் சாசன அமைப்புகளை பாஜகவின் பிடியி... மேலும் பார்க்க

வா்த்தகப் பேச்சில் இந்தியா பிடிவாதம்: அமெரிக்க நிதியமைச்சா்

வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் இந்தியா சற்று பிடிவாதமாக உள்ளதாக அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசண்ட் தெரிவித்தாா். ஃபாக்ஸ் செய்தித் தொலைக்காட்சிக்கு அவா் பேட்டியளித்தபோது, அக்டோபா் மாதத்துக்குள் அனைத்த... மேலும் பார்க்க