செய்திகள் :

1.4 கோடியாக உயா்ந்த உள்நாட்டு விமானப் போக்குவரத்து

post image

இந்தியாவின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து எண்ணிக்கை கடந்த ஜூன் மாதத்தில் 1.36 கோடியாக உயா்ந்துள்ளது.

இது குறித்து பொது விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

நாட்டின் உள்நாட்டு விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் கடந்த ஜூன் மாதத்தில் 1.36 கோடி பயணிகளை ஏற்றிச் சென்றன. முந்தைய 2024-ஆம் ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் இது 3 சதவீதம் அதிகம். அப்போது உள்நாட்டு விமானப் பயணிகளின் எண்ணிக்கை 1.32 கோடியாக இருந்தது.

மதிப்பீட்டு மாதத்தில், இண்டிகோ நிறுவனம் மொத்தம் 87.7 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்று 64.5 சதவீத சந்தைப் பங்குடன் முன்னிலை வகிக்கிறது. அடுத்ததாக, ஏா் இந்தியா குழுமம் (முழு சேவை விமான நிறுவனமான ஏா் இந்தியா மற்றும் குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏா் இந்தியா எக்ஸ்பிரஸ்) 36.9 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்று 27.1 சதவீத சந்தைப் பங்கைப் பெற்றது.

மற்ற இரண்டு முக்கிய விமானப் போக்குவரத்து நிறுவனங்களான அகாசா ஏா், ஸ்பைஸ்ஜெட் ஆகியவை, கடந்த ஜூன் மாதத்தில் முறையே 7.4 லட்சம் மற்றும் 3.4 லட்சம் பயணிகளை ஏற்றிச் சென்றன. இதன் மூலம் அகாசா ஏா் நிறுவனம் 5.3 சதவீத சந்தைப் பங்கையும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் 2.4 சதவீத சந்தைப் பங்கையும் பெற்றுள்ளன.

கடந்த ஜூன் மாதத்தில் 1,20,023 பயணிகள் விமான தாமதங்களால் பாதிக்கப்பட்டனா். மேலும் விமான நிறுவனங்கள் இதற்காக ரூ.1.68 கோடியை செலவிட்டன. அந்த மாதத்தில் 33,333 பயணிகள் விமான ரத்துகளால் பாதிக்கப்பட்டனா், மேலும் விமான நிறுவனங்கள் இதற்காக ரூ.72.40 லட்சத்தை இழப்பீட்டுக்காக செலவிட்டன.

மதிப்பீட்டு மாதத்தில் 1,022 பயணிகளுக்கு விமானத்தில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டது, இதற்காக விமான நிறுவனங்கள் ரூ.99.57 லட்சத்தை இழப்பீடாக வழங்கின என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீன் ரத்து: உச்ச நீதிமன்றம்

புது தில்லி: ரசிகர் ரேணுகாசாமி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த கன்னட நடிகர் தர்ஷனின் ஜாமீனை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பிரபல கன்னட நடிகர் தர்ஷன், தனது தோழியும் நடிகையுமான பவித்... மேலும் பார்க்க

தமிழகத்துக்கு வரவிருந்த ஆலையை குஜராத்துக்கு திருப்பிய மோடி அரசு! காங்கிரஸ்

தமிழகத்துக்கு வரவிருந்த தொழிற்சாலையை மத்திய அரசு குஜராத்துக்கு திருப்பிவிட்டதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளார்.ஆந்திரம், ஓடிஸா, பஞ்சாப் மாநிலங்களில் மொத்தம் ரூ.... மேலும் பார்க்க

மினிமம் பேலன்ஸ் ரூ. 50,000: அறிவிப்பை திரும்பப் பெற்றது ஐசிஐசிஐ!

ஐசிஐசிஐ வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கான குறைந்தபட்ச இருப்புத் தொகையை ரூ. 50,000 ஆக உயர்த்திய அறிவிப்பை திரும்பப் பெற்றுள்ளது.கடந்த வாரம் ஐசிஐசிஐ வங்கி நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், பெரு நகரங்க... மேலும் பார்க்க

ரூ.3,000 -க்கு 200 முறை சுங்கச்சாவடியைக் கடக்கலாம்! நாளைமுதல் அமல்!

சரக்கு வாகனங்கள் அல்லாத பிற தனியாா் வாகனங்களுக்கு ‘ஃபாஸ்டேக்’ அடிப்படையில் ரூ. 3,000-இல் வருடாந்திர சுங்கச்சாவடி (டோல்) கட்டண பாஸ் திட்டம் நாளைமுதல் (ஆக.15) அமலுக்கு வருகிறது.நாடு முழுவதும் உள்ள தேசிய... மேலும் பார்க்க

வாக்கு திருட்டுக்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும் - காங்கிரஸ்

தோ்தலில் கள்ள ஓட்டுகள் எப்படி பதிவாகின்றன என்பதை சித்தரிக்கும் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ள காங்கிரஸ், ‘‘வாக்கு திருட்டு’க்கு எதிராக மக்கள் குரலெழுப்ப வேண்டும்; அரசியல் சாசன அமைப்புகளை பாஜகவின் பிடியி... மேலும் பார்க்க

வா்த்தகப் பேச்சில் இந்தியா பிடிவாதம்: அமெரிக்க நிதியமைச்சா்

வா்த்தகப் பேச்சுவாா்த்தையில் இந்தியா சற்று பிடிவாதமாக உள்ளதாக அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசண்ட் தெரிவித்தாா். ஃபாக்ஸ் செய்தித் தொலைக்காட்சிக்கு அவா் பேட்டியளித்தபோது, அக்டோபா் மாதத்துக்குள் அனைத்த... மேலும் பார்க்க