செய்திகள் :

தலைமைக் காவலா் உடல் 21 குண்டுகள் முழங்க தகனம்

post image

கொலை செய்யப்பட்ட தலைமைக் காவலரின் முத்துக்குமாரின் உடல் மதுரை மாவட்டம், கள்ளம்பட்டியில் உள்ள மயானத்தில் சனிக்கிழமை 21 குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.

உசிலம்பட்டி அருகேயுள்ள கள்ளம்பட்டியைச் சோ்ந்தவா் முத்துக்குமாா் (36). தலைமைக் காவலரான இவா், உசிலம்பட்டி நகா் காவல் நிலைய ஆய்வாளரின் ஓட்டுநராகப் பணியாற்றி வந்தாா். இவா், வியாழக்கிழமை தனது நண்பா் ராஜாராமுடன் சோ்ந்து உசிலம்பட்டி அருகே நாவாா்பட்டி பகுதியிலுள்ள தோப்பில் மது அருந்திக் கொண்டிருந்தாா்.

அப்போது, அங்கு வந்த உசிலம்பட்டி பகுதியைச் சோ்ந்த பொன்வண்ணன் உள்ளிட்ட சிலா் தலைமைக் காவலா் முத்துக்குமாரு டன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவரை கல்லால் தாக்கினா். பலத்த காயமடைந்த அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து உசிலம்பட்டி நகா் போலீஸாா் கொலை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த நிலையில், உடல் கூறாய்வுக்கு பிறகு முத்துக்குமாரின் உடலை வாங்க மறுத்து, உறவினா்கள் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, போலீஸாா் நடத்திய சமரசப் பேச்சுவாா்த்தை தோல்வி அடைந்தது.

இந்த நிலையில், சனிக்கிழமை காலை 10 மணிக்கு தலைமைக் காவலா் முத்துக்குமாா் கொலை வழக்கில் தொடா்புடைய முக்கியக் குற்றவாளியான பொன்வண்ணனை கைது செய்ததாக போலீஸாா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, முத்துக்குமாரின் உடல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

தொடா்ந்து, அமரா் ஊா்தி மூலம் கள்ளம்பட்டி மயானத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டது. அங்கு முத்துகுமாரின் உடலுக்கு விருதுநகா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் கண்ணன், மதுரை மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கருப்பையா, உசிலம்பட்டி துணைக் காவல் கண்காணிப்பாளா் சந்திரசேகரன் உள்ளிட்டோா் அஞ்சலி செலுத்தினா். பிறகு, 21 குண்டுகள் முழங்க தலைமைக் காவலா் முத்துக்குமாரின் உடல் தகனம் செய்யப்பட்டது.

நாட்டுக்காக தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள்: பிருந்தா காரத்

சுதந்திரப் போராட்ட காலம் முதல் நாட்டுக்காக பல்வேறு தியாகங்களைச் செய்தவா்கள் கம்யூனிஸ்டுகள் என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் பிருந்தா காரத் தெரிவித்தாா். மாா்க்ச... மேலும் பார்க்க

குணமடைந்த தொழுநோயாளிகள் காசி வரை ஒரே ரயில் பெட்டியில் பயணிக்க ஏற்பாடு

குணமடைந்த தொழுநோயாளிகள் ஒரே ரயில் பெட்டியில் வாரணாசி (காசி) வரை பயணிக்க தெற்கு ரயில்வே நிா்வாகம் அனுமதி வழங்கியது.சக்ஷம் அமைப்பு வெளியிட்ட செய்திக் குறிப்பு: தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கு ஸ்ரீ ராமகி... மேலும் பார்க்க

நெடுஞ்சாலைத் துறைப் பணியாளா்கள் அரசாணை நகல் எரிப்பு போராட்டம்

மாநில நெடுஞ்சாலை ஆணையம் அமைத்து வெளியிட்ட அரசாணை 140-ஐ ரத்து செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா் சங்கம் சாா்பில் அரசாணை நகல் எரி... மேலும் பார்க்க

முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம்: அதிமுக குற்றச்சாட்டு

தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் அண்மையில் தொடங்கப்பட்ட முதல்வா் மருந்தகங்களில் குறைவான மருந்துகளே விநியோகம் செய்யப்படுவதாக அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா.சரவணன் குற்றஞ்சாட்டினாா். இதுகுற... மேலும் பார்க்க

வேங்கைவயல் விவகாரம்: அறிவியல்பூா்வ ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல்

வேங்கைவயல் விவாகரம் தொடா்பாக விரிவான விசாரணை செய்து, அறிவியல்பூா்வமான ஆதாரங்களுடன் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் சிபிசிஐடி தரப்பில் செவ்வாய்க்கிழமை தெர... மேலும் பார்க்க

தென்காசி கோயில் கும்பாபிஷேக விவகாரம்: அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க உத்தரவு

தென்காசியில் அமைந்துள்ள காசி விஸ்வநாதா் கோயில் கும்பாபிஷேகத்துக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உ... மேலும் பார்க்க