செய்திகள் :

தாக்குதல் சம்பவம்: முதல்முறையாக நிகழ்ச்சியில் பங்கேற்கும் ரேகா குப்தா!

post image

தில்லி முதல்வர் ரேகா குப்தா மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின் முதல்முறையாக காந்தி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவர் கலந்துகொண்டார்.

காந்தி நகர் மொத்த விற்பனை சந்தையின் ஆடை கண்காட்சியான வஸ்த்ரிகாவின் தொடக்க நிகழ்வில் முதல்வர் ரேகா குப்தா உரையாற்றினார்.

உள்ளூர் எம்எல்ஏ அரவிந்தர் சிங் லவ்லியை யமுனா பார் விகாஸ் வாரியத்தின் தலைவராக அவர் அறிவித்தார். அவர் தில்லி அரசில் உயர் பதவிகளை வகித்துள்ளார். அவர் காந்தி நகரின் முதல்வரைப் போன்றவர். தில்லியின் வளர்ச்சிக்காக அவர் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். யமுனா பார் விகாஸ் வாரியத்தின் தலைவராக லவ்லி இருப்பார் என்று அவர் கூறினார்.

லவ்லி, கிழக்கு தில்லி எம்.பி. மற்றும் மத்திய அமைச்சர் ஹர்ஷ் மல்ஹோத்ரா ஆகியோரை அந்தப் பகுதியின் வளர்ச்சிக்கான பட்ஜெட்டுக்கான முன்மொழிவைத் தயாரிக்குமாறு முதல்வர் கேட்டுக் கொண்டார்.

தில்லியின் சிவில் லைன்ஸில் உள்ள ரேகா குப்தாவின் வீட்டில், மக்களின் குறைகளைக் கேட்கும் ‘ஜன் சன்வாய்’ நிகழ்ச்சியின்போது அடையாளம் தெரியாத நபர் ஒருவர் முதல்வர் ரேகா குப்தாவை கடுமையாகத் தாக்கினார். இந்தச் சம்பவத்தில், தலை மற்றும் கன்னத்தில் காயத்துடன் முதல்வர் ரேகா குப்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அந்த நபர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Delhi Chief Minister Rekha Gupta on Friday attended an event in Gandhi Nagar, her first appearance since an attack on her at her house.

வரதட்சிணைக்காக இளம்பெண் எரித்துக் கொலை: மாமியாரும் கைது!

கிரேட்டர் நொய்டாவில் வரதட்சிணைக்காக இளம்பெண்ணை எரித்தே கொன்றதாக பதியப்பட்டுள்ள வழக்கில் அந்தப் பெண்ணின் மாமியாரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கிரேட்டர் நொய்டா காவல் துறை டிசிபி தெரிவித்தார்.வட இந்தியாவில... மேலும் பார்க்க

வரதட்சிணைக்காக மனைவி எரித்தே கொலை: “இதெல்லாம் சாதாரண விஷயம்” -கணவன் பதில்!

மனைவி எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அந்தப் பெண்ணின் கணவனை 14 நாள் நீதிமன்றக் காவலில் விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.வட இந்தியாவில் தில்லியை அ... மேலும் பார்க்க

பாஜக வெற்றி பெற்றால் மட்டும் தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பதா? -எதிர்க்கட்சிகளுக்கு பாஜக கேள்வி!

பாஜக வெற்றி பெற்றால் மட்டும் தேர்தல் ஆணையத்தை விமர்சிப்பதா? என்று ராகுல் காந்திக்கு பாஜக கேள்வியெழுப்பியது.கடந்தாண்டு மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் ‘வாக்குத் திருட்டு’ நடைபெற்றதாக குற்றஞ்... மேலும் பார்க்க

நாடாளுமன்ற சுவரில் ஏற முயன்றதாக கைது செய்யப்பட்ட நபர் விடுதலை

தில்லியில் உள்ள நாடாளுமன்ற வளாகத்தின் சுவரில் ஏற முயன்றதாக கைது செய்யப்பட்ட இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளார்.உத்தரப் பிரதேசத்தின் பதோஹி மாவட்டத்தைச் சேர்ந்த ராம்(20) வெள்ளிக்கிழமை காலை நாடாளுமன்ற சுவரில்... மேலும் பார்க்க

ஜம்மு மருத்துவமனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் ராஜ்நாத் சிங் உடல்நலம் விசாரிப்பு

கிஷ்த்வார் வெள்ளப்பெருக்கில் காயமடைந்தவர்களிடம் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஞாயிற்றுக்கிழமை உடல்நலம் விசாரித்தார். இதற்காக தில்லியில் இருந்து விமானம் மூலம் ஜம்மு வந்தடைந்த அவர், ஜம்மு அரசு... மேலும் பார்க்க

வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப் பிடித்த காவல் துறை!

உத்தரப் பிரதேசத்தில் ரூ. 36 லட்சம் வரதட்சிணைக் கேட்டு மனைவியை தீயிட்டு எரித்த கணவரை காவல் துறையினர் கைது செய்தனர். காவல் துறையிடமிருந்து தப்பித்து காட்டிற்குள் ஓடியவரை காவல் துறையினர் காலுக்கு கீழே சு... மேலும் பார்க்க