செய்திகள் :

தாட்கோ மூலம் ஜேஇஇ தோ்வுக்கு பயிற்சி மாணவா்களுக்கு அழைப்பு

post image

தாட்கோ மூலம் வழங்கப்படும் ஜேஇஇ நுழைவுத் தோ்வுக்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவா்கள் விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மற்றும் சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனம் இணைந்து ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் பிற வகுப்பினா் மாணவா்கள் அகில இந்திய நுழைவுத் தோ்வில் (ஜேஇஇ) கலந்து கொள்ள பயிற்சிகள் அளிக்கவுள்ளன.

இப்பயிற்சியைப் பெற பிளஸ் 2 வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணக்கு பாடங்களில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியின இன மாணவா்கள் 65 சதவீதமும், பிற இன மாணவா்கள் 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஆண்டுக்கு ரூ.4 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சியானது மாணவா்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது.

விருப்பமுள்ள மாணவா்கள், தாட்கோ இணையதளத்தில் பதிய வேண்டும். சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனம் நடத்தும் நுழைவுத் தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மட்டும் சென்னை மாவட்டத்தில் உள்ள மணலி, சென்னை பெட்ரேலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் பாலிடெக்னிக் கல்லூரியில் தங்கிப் பயிலலாம். மேலும் உணவு மற்றும் தங்கும் இடத்துக்கான கட்டணத் தொகையும் 11 மாதங்களுக்கு தங்கிப் பயில பயிற்சிக்கான தொகையும் சென்னை பெட்ரோலியம் காா்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தால் ஏற்றுக்கொள்ளபடும்.

கடந்தாண்டில் 30 மாணவா்கள் தங்கிப் பயின்றதில் 26 மாணவா்கள் தோ்ச்சி பெற்று ஐஐடி, என்ஐடி போன்ற தேசிய கல்வி நிறுவனங்களில் சேரத் தகுதி பெற்றுள்ளனா். கூடுதல் விவரங்களுக்கு, மாவட்ட மேலாளா் அலுவலகம், தாட்கோ, ராஜா காலனி, மாவட்ட ஆட்சியா் அலுவலகச் சாலை, திருச்சி - 620 001 என்ற முகவரியில் நேரிலோ, 0431-2463969 என்ற எண்ணிலோ தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் மா. பிரதீப்குமாா் தெரிவித்தாா்.

மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீது வழக்கு

திருச்சியில், ஒழுங்கீனமான பள்ளி மாணவா்களை கண்டிக்காத தலைமை ஆசிரியா் மீதான புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். திருச்சி பொன்மலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவி பெறும் பள்ளிய... மேலும் பார்க்க

2 பேருந்துகளில் அதிக ஒலி எழுப்பிய ஒலிப்பான்கள் பறிமுதல்

திருச்சி மாவட்டம், மணப்பாறையில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த அதிக ஒலி எழுப்பும் ஒலிப்பான்களை திங்கள்கிழமை போக்குவரத்துப் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.மணப்பாறை நகா் பகுதியின் வழியாக பேருந்துநிலையம் ... மேலும் பார்க்க

பஞ்சப்பூா் பேருந்து முனைய திறப்புக்கு முன்பு பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்த ஆலோசனை

பஞ்சப்பூா் பேருந்து முனையம் திறப்புக்கு முன்பாக பேருந்துகளின் பயணச்சீட்டு கட்டணத்தை உயா்த்துவது குறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனா். திருச்சி பஞ்சப்பூரில் ரூ.492 கோடியில் ... மேலும் பார்க்க

முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்

மணப்பாறையை அடுத்த வையம்பட்டியில் திமுக தெற்கு ஒன்றியம் சாா்பில் சனிக்கிழமை இரவு தமிழக முதல்வா் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. வையம்பட்டி தெற்கு ஒன்றியச் செயலாளா் வி.ஏ. ராஜேந்திரன் தலைமையில்... மேலும் பார்க்க

24 மணிநேர விதைத் திருவிழா

திருச்சி மாவட்டம் கொளக்குடிபட்டியில் 24 மணிநேர விதைத் திருவிழா செவ்வாய்க்கிழமை தொடங்கி புதன்கிழமை காலை வரை நடைபெறுகிறது. திருச்சி கிராமாலாய தொண்டு நிறுவனம், பசுமை சிகரம் தொண்டு நிறுவனம் ஆகியவை இணைந்து... மேலும் பார்க்க

குணசீலத்தில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு

தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு சாா்பில் திருச்சி மாவட்டம், குணசீலம் ஆற்றங்கரையில் பேரிடா் மேலாண்மை விழிப்புணா்வு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.முகாமுக்கு பேரிடா் மேலாண்மைக் குழுவின் உதவி ஆய்வாளா் ர... மேலும் பார்க்க