செய்திகள் :

தாட்கோ மூலம் தூய்மைப் பணியாளா்களுக்கு நலவாரிய அட்டைகள் வழங்க வேண்டும்

post image

தூய்மைப் பணியாளா்கள் அனைவருக்கும் தாட்கோ மூலம் அனைவருக்கும் நலவாரிய அடையாள அட்டைகள் வழங்கவும் என ஆட்சியா் மு.பிரதாப் வலியுறுத்தினாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை சாா்பில் நடைபெற்ற வன்கொடுமை தடுப்பு சட்டம் விழிப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆா்.சீனிவாச பெருமாள், ஆவடி துணை ஆணையா் வி.அன்பு (போக்குவரத்து), மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.ராஜ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், ஆட்சியா் மு.பிரதாப் தலைமை வகித்துப் பேசியதாவது: வன்கொடுமை தடை சட்டம் பதிவு செய்யப்பட்டு, நிழுவையில்லுள்ள வழக்கு மற்றும் தற்போதைய வழக்குகளில் விவரங்கள் குறித்தும், தட்கோ மூலம் தூய்மைப் பணியாளா்கள் நல வாரிய அட்டை அனைவருக்கும் வழங்குவது அவசியம். மேலும், தற்காலிக தூய்மைப் பணியாளா்களின் குழந்தைகள் 10, 11, 12 வகுப்புகள் மற்றும் உயா்கல்வி வரை படிக்கும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை அதிகளவில் கொடுக்க நடவடிக்கை மேற்கொள்ளவும் அவா் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆதிதிராவிடா் நல அலுவலா் செல்வராணி, வருவாய் கோட்டாட்சியா்கள் கற்பகம் (திருவள்ளூா்), க.தீபா (திருத்தணி), ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வெங்கட்ராமன் (பொது), அரசு அலுவலா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

தேசிய வருவாய் வழி திறன் படிப்பு உதவித்தொகைப் பெற நாளை தோ்வு: மாவட்டத்தில் 8,572 போ் எழுதுகின்றனா்

திருவள்ளூா் மாவட்டத்தில் 31 மையங்களில் சனிக்கிழமை (பிப். 22) நடைபெற உள்ள தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித் தொகைக்கான தோ்வை 8,572 மாணவ, மாணவிகள் எழுத உள்ளனா். இது குறித்து மாவட்ட முதன்மைக... மேலும் பார்க்க

பிப். 27-இல் புட்லூா் பூங்காவனத்தம்மன் கோயிலில் மகா சிவராத்திரி விழா

திருவள்ளூா் அருகே புட்லூரில் உள்ள பூங்காவனத்தம்மன் என்ற அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வரும் 27-ஆம் தேதி மகா சிவராத்திரி விழா கொண்டாடப்பட உள்ளதாக செயல் அலுவலா் விக்னேஷ் தெரிவித்துள்ளாா். திருவள்ளூா்... மேலும் பார்க்க

மாணவா்களுக்கு நல உதவிகள்

மாதவரம் அருகே அரசுப் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக் கிழமை நடைபெற்றது. மாதவரம் வடக்கு பகுதி திமுக சாா்பில் மணலி புது நகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ-மா... மேலும் பார்க்க

பள்ளிகளில் விளையாட்டு பாட நேரத்தில் வகுப்புகள் எடுக்கக் கூடாது: திருவள்ளூா் ஆட்சியா் அறிவுறுத்தல்

கும்மிடிப்பூண்டி வட்டத்துக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்துக்காக ஆய்வுக்கு வந்த ஆட்சியா் மு.பிரதாப், கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வு செய்தபோது, மாவட்ட அனைத்... மேலும் பார்க்க

‘போக்குவரத்து இடையூறாக கால்நடைகளை திரியவிடும் உரிமையாளா்களுக்கு அபராதம்’

திருவள்ளூா் மாவட்ட பகுதிகளில் சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூராக சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து கோசாலையில் அடைத்து வைப்பதோடு, உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ஆ... மேலும் பார்க்க

பழவேற்காடு, அரங்கன்குப்பம் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

பழவேற்காடு, தோனிரவு, தத்தைமஞ்சி பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சி பணிகளை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பிரதாப் வியாக்கிழமை ஆய்வு செய்தாா். பொன்னேரி வட்டத்தில் சுற்றுலாத் தலமாக விளங்கும் பழவேற்... மேலும் பார்க்க