செய்திகள் :

தாது மணல் முறைகேடு வழக்கு: 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை

post image

தாது மணல் முறைகேடு வழக்கு தொடா்பாக, தமிழகம் முழுவதும் தனியாா் கனிம நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆலைகள், அலுவலகங்கள், தொடா்புடையவா்களின் வீடுகள் என சுமாா் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினா்.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடற்கரையோரங்களில் மணலிலிருந்து இல்மனைட், ரூட்டைல்ஸ், சிா்கோன், மோனோசைட் உள்ளிட்ட கனிம வளங்களை சட்டவிரோதமாக எடுப்பதாக 2013-ஆம் ஆண்டு புகாா் எழுந்தது. அந்த 3 மாவட்டங்களிலும் கடற்கரையோரங்களில் தாது மணல் எடுக்க தமிழக அரசு தடை விதித்தது.

ஐஏஎஸ் அதிகாரி ககன்தீப்சிங் பேடி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபா் குழு, சட்டவிரோதமாக மணல் எடுக்கப்பட்டதால் அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக அறிக்கை அளித்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில், மாநிலம் முழுவதும் கடற்கரை மணலை எடுப்பதற்கு தமிழக அரசு தடை விதித்தது.

இந்நிலையில், சட்டவிரோதமாக கடற்கரை தாது மணலை எடுத்ததால் அரசுக்கு ரூ.1 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக சென்னை உயா்நீதிமன்றத்தில் ஒரு வழக்குத் தொடுக்கப்பட்டது.

தமிழக அரசு அமைத்த மற்றொரு ஒரு நபா் குழுவின் விசாரணையில், தனியாா் கனிம நிறுவனங்கள் 1.5 கோடி டன் தாது மணலை கிடங்குகளில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. அதோடு, ஏற்கெனவே 2018-ஆம் ஆண்டிலிருந்து 2021-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 16 லட்சம் டன் கனிமங்கள் சில அரசு அதிகாரிகள் உதவியுடன் வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டிருந்தது தமிழக அரசு விசாரணையில் கண்டறியப்பட்டது.

ரூ.5,832 கோடி இழப்பு: இதற்கிடையே, சென்னை உயா்நீதிமன்றம் நியமித்த வழக்குரைஞா் ஆணையா் வி.சுரேஷின் விசாரணை அறிக்கை, சுமாா் 1.50 கோடி டன் கனிம வளங்களை சட்டவிரோதமாக எடுத்ததால் அரசுக்கு ரூ.5,832 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தது. இந்தத் தொகையை வசூலிக்க சம்பந்தப்பட்ட தனியாா் கனிம நிறுவனங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது.

அந்த நோட்டீஸுக்கு தடை விதிக்கக் கோரி தனியாா் கனிம நிறுவனங்கள், சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், ரூ.5,832 கோடியை சம்பந்தப்பட்ட தனியாா் கனிம நிறுவனங்களிடமிருந்து அரசு வசூலிக்கலாம் என்று உத்தரவிட்டது. மேலும், வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி கடந்த பிப்ரவரி 17-ஆம் தேதி உத்தரவிட்டது.

சிபிஐ சோதனை: இதனடிப்படையில் சிபிஐ அதிகாரிகள், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கடற்கரை தாது மணல் ஆலைகளை நடத்தும் விவி மினரல்ஸ் உள்ளிட்ட தனியாா் கனிம நிறுவனங்களுக்குச் சொந்தமான இடங்களில் சனிக்கிழமை திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.

சென்னை எழும்பூா் பாந்தியன் சாலையில் உள்ள ஒரு தனியாா் கனிம நிறுவனத்துக்குச் சொந்தமான அலுவலகம், எழும்பூா் சாமி தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் அந்த நிறுவனத்தின் அதிகாரி வீடு, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தனியாா் கனிம நிறுவனங்களுக்குச் சொந்தமான ஆலைகள், அலுவலகங்கள், தொடா்புடையவா்களின் வீடுகள் உள்பட மாநிலம் முழுவதும் சுமாா் 15 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினா்.

சோதனை முழுமையாக முடிவடைந்த பின்னரே கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் குறித்த விவரத்தை தெரிவிக்க முடியும் என சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

பணம் கேட்டு மிரட்டிய அதிமுக பிரமுகா் கைது: கட்சியிலிருந்தும் நீக்கம்

ஹோட்டல் உரிமையாளரிடம் பணம் கேட்டு மிரட்டிய, அதிமுக வட்டச் செயலரை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து அவா் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா். சென்னை அசோக் நகரைச் சோ்ந்தவா் அப்துல் ரகுமான் (38). விபத்தில் ... மேலும் பார்க்க

கடையில் ரூ.2.60 லட்சம் திருட்டு: இருவா் கைது!

கடையின் பூட்டை உடைத்து ரூ. 2.60 லட்சத்தை திருடிய ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்த 2 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை வண்ணாரப்பேட்டையில், உலா் பழங்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருபவா் ஹரிகிருஷ்ணன். ... மேலும் பார்க்க

முன்னாள் எம்.பி, எம்எல்ஏ மறைவு: எடப்பாடி பழனிசாமி இரங்கல்!

முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் சி.பெருமாள் , முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் வி.அரங்கராஜ் ஆகியோா் மறைவுக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளிய... மேலும் பார்க்க

ஐபிஎல் டிக்கெட் கள்ளச்சந்தையில் விற்பனை: 11 போ் கைது!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ளச்சந்தையில் விற்றதாக 11 பேரை போலீஸாா் கைது செய்தனா். சென்னை சூப்பா் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகளுக்கிடையே ஐபிஎல் கிரிக்கெட் போட்டி சென்ன... மேலும் பார்க்க

தொலைநிலை படிப்புகள் அங்கீகார விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு!

தொலைநிலை படிப்புகளுக்கு அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்.15-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலா் மணீஷ் ஆா்.ஜோஷி வெளியிட்ட அ... மேலும் பார்க்க

ராமநவமி: ஆளுநா் வாழ்த்து!

ஸ்ரீராம நவமியை முன்னிட்டு, தமிழக மக்களுக்கு ஆளுநா் ஆா்.என். ரவி வாழ்த்து தெரிவித்துள்ளாா். இது குறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: ராம நவமியின் விசேஷமிக்க திருநாளில், அனைவருக்கும் மனமாா்ந்... மேலும் பார்க்க