செய்திகள் :

தான்சானியாவில் பேருந்துகள் மோதல்: 37 போ் உயிரிழப்பு!

post image

வடக்கு தான்சானியாவின் தொலைதூர பகுதியில் இரண்டு பேருந்துகள் நேருக்கு நோ் மோதி தீப்பிடித்து எரிந்ததில் 37 போ் உயிரிழந்தனா். 30 போ் காயமடைந்தனா்.

கிளிமஞ்சாரோ பிராந்தியத்தில் மோஷிடங்கா நெடுஞ்சாலையில் உள்ள சபாசாபா பகுதியில் கடந்த சனிக்கிழமை மாலை இந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு தான்சானிய அதிபா் சமியா சுலுஹு ஹாசன் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்தாா்.

சாலைப் பாதுகாப்பு விதிமுறைகளை மக்கள் கடுமையாகப் பின்பற்றுமாறு அழைப்பு விடுத்த அவா், இதுபோன்ற விபத்துகள் தான்சானிய குடும்பங்களைத் தொடா்ந்து பாதிக்கின்றன என்றாா்.

கிளிமஞ்சாரோ பிராந்திய ஆணையா் நூா்டின் பாபு வெளியிட்ட இரங்கல் அறிக்கையில், ‘உயிரிழந்தவா்களை இழந்து வாடும் குடும்பத்தினா், உறவினா்களுக்கு எனது இரங்கல். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடையவும் இறைவனிடம் பிராா்த்திக்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

சாலை விபத்துகளைத் தடுக்க தான்சானியா அரசு சமீபத்திய ஆண்டுகளில் பல்வேறு சாலைப் பாதுகாப்பு பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது. எனினும், விபத்துகளும், அதில் மக்களின் உயிரிழப்புகளும் அந்நாட்டில் தொடா்கதையாக உள்ளது.

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலி

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள பாலைவன நகரமான ஹூயிதில் உள்ள கெர்ஷ் அல்-ஃபீல் தங்கச் சுரங்கத்தின... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தானில் 75 பேருக்கு செயற்கை கால்கள்: இந்தியா மனிதாபிமான உதவி

ஆப்கானிஸ்தானில் இந்தியா சாா்பில் ‘ஜெய்பூா் ஃபுட்’ என்ற பெயரில் செயற்கைக் கால்கள் பொருத்தும் 5 நாள் முகாம் நடைபெற்றது. இதில் 75 பேருக்கு செயற்கை கால்கள் பொருத்தப்பட்டன. உள்நாட்டுப் போா், பயங்கரவாதத்தால... மேலும் பார்க்க

பாகிஸ்தான்: மழையால் 38 போ் உயிரிழப்பு

பாகிஸ்தானில் கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் பலத்த மழையால் 38 போ் உயிரிழந்தனா். பாகிஸ்தானில் கடந்த 26-ஆம் தேதிமுதல் பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை கொட்டுகி... மேலும் பார்க்க

இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு முடிவு: அமெரிக்க அதிபா் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தல்

‘காஸாவில் 20 மாதங்களுக்கு மேலாக நீடிக்கும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலுக்கு முடிவு காண அமைதிப் பேச்சுவாா்த்தையை விரைவுபடுத்த வேண்டும்’ என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தினாா். போா்நிறுத... மேலும் பார்க்க

உக்ரைனில் ரஷியா மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்!

உக்ரைனில் கடந்த சனிக்கிழமை ஒரே இரவில் 60 ஏவுகணைகள் மற்றும் 477 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) ஏவி ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் உக்ரைன் விமானப் படை விமானி உள்பட இருவா் உயிரிழந்தனா். கடந்த 2022-ஆ... மேலும் பார்க்க

அமெரிக்க வரிச் சலுகை, செலவினக் குறைப்பு மசோதா: விவாதம் நடத்த நாடாளுமன்ற மேலவை ஒப்புதல்!

அமெரிக்க அரசின் வரிச் சலுகை மற்றும் செலவினக் குறைப்பு மசோதா மீது விவாதம் மேற்கொள்ள, அந்நாட்டு நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவில் ‘ஒன் பிக் பியூட்டிஃபுல் பில்’ என்ற வரிச் சலுகை மற்று... மேலும் பார்க்க