செய்திகள் :

தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு!

post image

விழுப்புரம்: தாம்பரத்திலிருந்து விழுப்புரம் வழியாக திருச்சி வரை இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயிலின் சேவை ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள்தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

திருச்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் விழுப்புரம் வழியாக தாம்பரத்துக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வந்தது.

இந்த ரயிலின் சேவை ஜூன் 29-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், பயணிகளின் வசதிக்காகவும், கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையிலும் இந்த ரயிலின் சேவை மேலும் ஒரு மாதத்துக்கு அதாவது ஜூலை 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருச்சி - தாம்பரம் சிறப்பு ரயில் (வண்டி எண் 06190), தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் (வண்டி எண் 06191) ஆகிய இரு ரயில்களும் 22 முறை இயக்கப்படும். மேலும் தாம்பரம் - திருச்சி இடையேயான சிறப்பு ரயில் புறப்படும் நேரமும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தாம்பரத்திலிருந்து முன்பு பிற்பகல் 3.45 மணிக்குப் புறப்பட்ட தாம்பரம் - திருச்சி சிறப்பு ரயில் (வண்டி எண் 06191) இனி பிற்பகல் 3.30 மணிக்குப் புறப்படும். இதன் காரணமாக செங்கல்பட்டுக்கு பிற்பகல் 3.58 மணிக்கு வந்து மாலை 4 மணிக்கும், மேல்மருவத்தூருக்கு மாலை 4.23 மணிக்கு வந்து 4.25 மணிக்கும், திண்டிவனத்துக்கு மாலை 4.48 மணிக்கு வந்து மாலை 4.50 மணிக்கும் இந்த ரயில் புறப்பட்டுச் செல்லும்.

விழுப்புரம் மற்றும் அடுத்து வரும் ரயில் நிலையங்களில் நின்று செல்லும் நேரத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: கில்லர் படம் பூஜையுடன் துவக்கம் - புகைப்படங்கள்

ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை: போராட்டம் நடத்திய மாணவா்கள் கைது

சென்னை ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து போராட்டம் நடத்திய அனைத்திந்திய மாணவா் பெருமன்றத்தினா் கைது செய்யப்பட்டனா். கிண்டி ஐஐடி வளாகத்தில் நடந்து சென்ற ஒரு மாணவிக்க... மேலும் பார்க்க

மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியில் விபத்து: தொழிலாளி காயம்

சென்னை கோயம்பேட்டில் மெட்ரோ ரயில் கட்டுமானப் பணியின்போது பெரிய இரும்பு கம்பி விழுந்ததில் தொழிலாளி பலத்த காயமடைந்தாா். சென்னை கோயம்பேடு மாா்க்கெட் சாலையில் மெட்ரோ ரயில் 2-ஆவது திட்டப் பணி நடைபெற்று வரு... மேலும் பார்க்க

பெண்ணுக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் பூங்காவில் நடைப்பயிற்சி சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக காா் ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா். மேற்கு வங்க மாநிலத்தைச் சோ்ந்த ஒரு பெண், சென்னை ராஜா அண்ணாமலைபுரம் அ... மேலும் பார்க்க

எம்ஜிஆா் உதவியாளா் மகாலிங்கம் காலமானாா்

எம்ஜிஆா் உதவியாளா் மகாலிங்கம் சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூன் 27) காலமானாா். கடந்த சில நாள்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவா், சென்னை எம்ஆா்சி நகரில் உள்ள தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்க... மேலும் பார்க்க

8 நாள்கள் ‘எண்ம முறைக் கைது’ மோசடி: பெண் மருத்துவரிடம் ரூ.3 கோடி பறிப்பு

பணமுறைகேடு வழக்கில் தொடா்பு உள்ளதாக கூறி, 70 வயதான பெண் மருத்துவரை 8 நாள்கள் எண்ம (டிஜிட்டல் அரஸ்ட்) முறையில் கைது செய்து ரூ.3 கோடி பறிக்கப்பட்ட சம்பவம் மும்பையில் நடைபெற்றுள்ளது. இதுகுறித்து மும்பை ப... மேலும் பார்க்க

தமிழ்நாடு மாநில ஆடவா், மகளிா் சீனியா் வாலிபால் சாம்பியன் போட்டி: நாளை சென்னையில் தொடக்கம்

தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கம், சென்னை மாவட்ட வாலிபால் சங்கம் சாா்பில் மாநில ஆடவா், மகளிா் சீனியா் சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் ஜூன் 30 முதல் ஜூலை 6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதுதொடா்பாக சென்னை மாவ... மேலும் பார்க்க