செய்திகள் :

‘தாயுமானவர் திட்டம்’ மனசுக்கு ரெம்ப பிடிச்ச திட்டம்! - விடியோ வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்

post image

‘முதல்வரின் தாயுமானவர் திட்டம்’ மனசுக்கு ரெம்ப பிடிச்ச திட்டம் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து விடியோ வெளியிட்டுள்ளார்.

முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடு தேடி ரேஷன் பொருள்களை வழங்கக்கூடிய ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டத்தை சென்னை தண்டையாா்பேட்டையில் முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கவிருக்கிறார்.

தனியாக வசிக்கும் 70 வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருள்களை நேரடியாக அளிக்கும் இந்தத் திட்டத்தில், 20,42,657 முதியவர்கள், 1,27,797 மாற்றுத்திறனாளிகள் என மொத்தம் 21,70,454 பேருக்கு வீடு தேடி ரேஷன் பொருள்கள் வழங்கப்பட உள்ளன.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் விடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு ஒவ்வொரு திட்டத்தையும் பார்த்துப் பார்த்து செய்துவருகிறது. அந்த வரிசையில் எனது மனசுக்குப் பிடித்த திட்டமாக இந்த ‘முதல்வரின் தாயுமானவர்’ திட்டம் உருவாகியுள்ளது.

வயதுக்கு மேற்பட்ட முதியோர், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு ரேஷன் பொருள்களை நேரடியாக அளிக்கும் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அரசின் சேவைகளை வீடுகளுக்கேச் சென்று கொடுப்பது, இந்தியாவுக்கே முன்மாதிரி முயற்சி.

திட்டத்தை அறிவித்தவுடனே நமது கடமை முடிந்துவிட்டதாக நாம் நினைப்பது இல்லை. அந்தத் திட்டத்தின் பயன் கடைக்கோடி மனிதருக்கும் சென்று சேருகிறதா என்பதைக் கண்காணிப்பதையும் என்னுடைய கடமையாகக் கருதுகிறேன்” என விடியோவில் குறிப்பிட்டுள்ளார்.

'Thayumanavar Scheme' is a scheme that really appeals to me! - Chief Minister Stalin releases video

இதையும் படிக்க :வீடு தேடி ரேஷன் பொருள் திட்டம்: முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறாா்

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை!

பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து, திருவள்ளூர் போக்ஸோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.திருத்தணி அருகே பழங்குடியின சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், இ... மேலும் பார்க்க

டெட் தேர்வை வேறு தேதிக்கு மாற்ற வேண்டும்: இபிஎஸ் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். பள்ளி ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு(டெட்- TET) நடப்பாண்டு நவம்பர... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக செயல்படுவது போன்ற போலி பிம்பம்: தமிழக அரசு விளக்கம்!

சென்னை: தூய்மைப் பணியாளர்களுக்கு எதிராக அரசு செயல்படுவது போன்ற போலி பிம்பம் கட்டமைக்கப்படுவதாக தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.சென்னை மாநகராட்சியின் 5 மற்றும்... மேலும் பார்க்க

13 மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க கும்கி யானைகள் வரவழைப்பு!

நீலகிரி மாவட்டத்தில் 13 வளர்ப்பு மாடுகளை வேட்டையாடிய புலியைப் பிடிக்க 2 கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டுள்ளன.நீலகிரி மாவட்டத்தைச் சுற்றியுள்ளப் பகுதியில் புலி, காட்டெருமை, கரடிகளின் நடமாட்டம் நாளுக்குநா... மேலும் பார்க்க

இன்றைய தக்காளி விலை நிலவரம்! ஒரு கிலோ ரூ.100 ஆனது!!

தங்கத்துக்கு நிகராக தக்காளி விலையும் கடந்த ஒரு சில நாள்களாக அதிகரித்து, செவ்வாய்க்கிழமையன்று, 1 கிலோ தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகும் நிலை ஏற்பட்டுளள்து.சென்னை கோயம்பேடு காய்கறி மொத்தவிலை அங்காடிய... மேலும் பார்க்க

மாற்று சக்தியல்ல; முதன்மை சக்தி என மதுரை மாநாட்டில் உணர்த்துவோம்! - விஜய்

மாற்று சக்தியல்ல; முதன்மை சக்தி என உலகிற்கு உணர்த்துவோம் என தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் கூறியுள்ளார்.தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு ஆக. 21ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்... மேலும் பார்க்க