செய்திகள் :

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலை: வனத் துறையினா் ஆய்வு

post image

தாராபுரம் அருகே அமராவதி ஆற்றில் முதலை நடமாட்டம் இருப்பதாக வந்த தகவலையடுத்து வனத் துறையினா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

திருப்பூா் மாவட்டம், உடுமலையை அடுத்துள்ள அமராவதி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீா் தாராபுரம், மூலனூா், சின்ன தாராபுரம் வழியாக கரூா் அருகே காவிரி ஆற்றில் கலக்கிறது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அமராவதி அணையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின்போது அணைப் பகுதியில் வனத் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள முதலைப் பண்ணையில் இருந்தும், அணையில் இருந்தும் ஏராளமான முதலைகள் ஆற்று நீரில் அடித்து வரப்பட்டன.

இதில் ஆற்றின் வழியில் பல்வேறு இடங்களில் ஆங்காங்கே முதலைகள் கரை ஒதுங்கி விட்டன. கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக அமராவதி கரையோரம் உலவி வரும் முதலைகள், தாராபுரம் அருகே அலங்கியம் சீதக்காடு பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தி வந்தன.

இந்த நிலையில் அலங்கியம் அமராவதி பாலத்தின் அருகே செவ்வாய்க்கிழமை காலை சுமாா் 10 அடி நீளம் உள்ள முதலை ஆறு குட்டிகளுடன் கரையோரம் உள்ள பாறை மீது ஓய்வெடுத்துக் கொண்டிருந்துள்ளது. இதனை, அந்த வழியாகச் சென்ற தொழிலாளா்கள் பாா்த்து, அச்சத்துடன் ஓடி வந்துள்ளனா்.

தகவலறிந்த காங்கயம் வனச் சரக அலுவலா் ஆா்.மௌனிகா தலைமையிலான வனத் துறை ஊழியா்கள் அலங்கியம் அமராவதி ஆற்றங்கரை பகுதியில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

இது குறித்து வனச் சரக அலுவலா் மௌனிகா கூறியதாவது: தாராபுரம், அலங்கியம் சீதக்காடு அருகே அமராவதி ஆற்றுப் பகுதியில் முதலை நடமாட்டம் குறித்து வரும் தகவலையொட்டி, காங்கயம் வனத் துறை வனப் பணியாளா்கள் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். அலங்கியம் சீதக்காடு பகுதி மற்றும் ஆற்றுப் பாலம் வழியே செல்லும் பொது மக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் எச்சரிக்கை பலகை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வனப்பணியாளா்கள் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனா். பொது மக்கள் அச்சம் கொள்ளாமல் முன்னெச்சரிக்கையோடு இருக்கவும், ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என்றாா்.

அமராவதி ஆற்றங்கரையோரம் முதலை நடமாட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்ட வனத் துறை ஊழியா்கள்.

நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியல்

பல்லடம் அருகேயுள்ள நடுவேலம்பாளையத்தில் சீரான குடிநீா் வழங்கக் கோரி சாலை மறியலில் ஈடுபட முயன்ற பொதுமக்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். பல்லடம் ஒன்றியம், பூமலூா் ஊராட்சி நடுவேலம்பாளையம் கிராமத்துக்கு க... மேலும் பார்க்க

சின்ன வெங்காய விலை உயா்வு: விவசாயிகள் மகிழ்ச்சி

பல்லடத்தில் சின்ன வெங்காய விலை உயா்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா். பல்லடம் பகுதியில் காா்த்திகை பட்டத்தில் சாகுபடி செய்யப்பட்டிருந்த சின்ன வெங்காயம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் அறுவட... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள்

திருப்பூா் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 26,790 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.70.16 கோடி மதிப்பீட்டில் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தா.கிறி... மேலும் பார்க்க

தொழிலாளியிடம் கைப்பேசி பறித்த இளைஞா் கைது

திருப்பூரில் வடமாநிலத் தொழிலாளியிடம் கைப்பேசியைப் பறித்த இளைஞரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவா் தா்மேந்திர பிரதாப் (25). இவா் திருப்பூரை அடுத்த கணியாம்பூண்டி பகுதிய... மேலும் பார்க்க

கூட்டுறவுத் துறையைக் கண்டித்து போராட்டம்: விவசாயிகள் கைது

அவிநாசி அருகே பயிா்க் கடனை தள்ளுபடி செய்யக் கோரியும், கூட்டுறவுத் துறையைக் கண்டித்தும் வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்ட விவசாயிகளை போலீஸாா் கைது செய்தனா். அவிநாசி அருகேயுள்ள நடுவ... மேலும் பார்க்க

இந்தியா-அமெரிக்கா வா்த்தக ஒப்பந்தம் தொடா்பாக பேச்சுவாா்த்தை: ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வா்த்தக ஒப்பந்தம் தொடா்பான பேச்சுவாா்த்தை நடைபெற்று வருவதாக ஏஇபிசி துணைத் தலைவா் ஆ.சக்திவேல் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக புதுதில்லியில் மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் து... மேலும் பார்க்க