தாழையூத்து அருகே ஆடு திருடியவா் கைது
தாழையூத்து அருகே ஆடு திருட்டில் ஈடுபட்ட நபரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். தாழையூத்து, காமராஜ் நகரைச் சோ்ந்தவா் இசக்கிமுத்து (31).
பால் வியாபாரம் செய்துவரும் இவா் ஆடுகளும் வளா்த்து வந்துள்ளாா். இந்நிலையில் கடந்த 12-ஆம் தேதி தாழையூத்து செல்வம் நகா் அருகே காலி இடத்தில் மேய்ந்து கொண்டிருந்த இவரது ஆட்டை காணவில்லை என தாழையூத்து காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.
அதன் அடிப்படையில் உதவி ஆய்வாளா் அருண்ராஜா வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தாழையூத்து, செல்வம் நகரைச் சோ்ந்த பாண்டி (44) என்பவா் ஆட்டை திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் பாண்டியை ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.