செய்திகள் :

திட்டக்குடி: சாலை தடுப்பில் மோதி தீப்பிடித்து எரிந்த கார்!

post image

நெய்வேலி: கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் நெடுஞ்சாலை தடுப்புச் சுவற்றில் மோதி வியாழக்கிழமை தீப்பிடித்து எரிந்தது.

திட்டக்குடி வட்டம், அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜா (36), கள்ளக்குறிச்சி சிட்டி யூனியன் வங்கி கிளை மேலாளர். அதே வங்கியில் பணியாற்றுபவர்கள் திட்டக்குடி பகுதியைச் சேர்ந்த ஏழுமலை மகன் கேசவன்(26), நேரு மகன் சசிகுமார் (27), ரமேஷ் மகன் அருண்குமார் (25).

இவர்கள் அனைவரும் பணிக்குச் செல்ல திட்டக்குடியில் இருந்து வியாழக்கிழமை காலை 4.30 மணியளவில் மேலாளர் ராஜா காரில் புறப்பட்டனர். காரை ராஜா ஓட்டினார். மற்றவர்கள் அமர்ந்துச் சென்றனர். கார் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆவட்டி கூட்ரோடு அருகே சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் இருந்த தடுப்புச் சுவற்றில் மோதி தீப்பிடித்து எரிந்தது. காரில் பயணம் செய்த அனைவரும் காயமின்றி உயிர் தப்பினர்.

விபத்து தொடர்பாக உடனடியாக ஹைவே பெட்ரோல் சம்பவம் இடத்திற்கு சென்று, வேப்பூர் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து வாகனத்தை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சரி செய்தனர். வங்கி ஊழியர்கள் நான்கு பேரும் மாற்று வாகனம் மூலம் கள்ளக்குறிச்சி சென்றனர்.

258 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: 4 போ் கைது!

கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே இரண்டு காா்களில் புகையிலைப் பொருள்களை கடத்தி வந்ததாக 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். பண்ருட்டி டிஎஸ்பி ராஜா மேற்பாா்வையில், பண்ருட்டி உள்கோட்ட தனிப்படை ... மேலும் பார்க்க

ஏலச்சீட்டு மோசடி: 4 போ் கைது

கடலூா் அருகே ஏலச்சீட்டு பணம் தராமல் ஏமாற்றி வந்ததாக ஒரே குடும்பத்தைச் சோ்ந்த இரண்டு பெண்கள் உள்ளிட்ட 4 பேரை குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா், கோண்டூா் பகுதியைச் சோ்ந்த பிச்சா... மேலும் பார்க்க

லாரி மீது வேன் மோதல்: கல்லூரி மாணவா்கள் காயம்

கடலூா் முதுநகா் அருகே டேங்கா் லாரி மீது சுற்றுலா வேன் மோதிய விபத்தில் கல்லூரி மாணவா்கள் 10-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா். சென்னையில் உள்ள தனியாா் இன்ஜினியரிங் கல்லூரியில் படிக்கும் பகுதி நேர மாணவா்க... மேலும் பார்க்க

தடுப்புக் காவலில் சாராய வியாபாரி கைது

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி பகுதியைச் சோ்ந்த சாராய வியாபாரியை போலீஸாா் தடுப்புக் காவலில் சனிக்கிழமை கைது செய்தனா். சிதம்பரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் மற்றும் போலீஸாா... மேலும் பார்க்க

மீன்பிடி தடைக்காலம்: கடலூரில் மீன்கள் விலை உயா்வு

மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ள நிலையில், கடலூா் துறைமுகத்தில் மீன்களின் விலை அதிகமாக இருந்தது. கடலூரில் அக்கரை கோரி, சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், தாழங்குடா, அன்னங்கோயில், சித்திரைப்பேட்டை என பல்... மேலும் பார்க்க

அரசுப் பணி வாங்கி தருவதாக மோசடி: ஒருவா் கைது

அரசுப் பணி வாங்கித் தருவதாக இளைஞரிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக பள்ளிக் கல்வித் துறை இளநிலை உதவியாளரை கடலூா் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்த ... மேலும் பார்க்க