செய்திகள் :

திட்டமிட்டு வெளியேற்றினாா் பேரவைத் தலைவா்: எடப்பாடி பழனிசாமி

post image

சட்டப் பேரவையிலிருந்து அதிமுகவினரை திட்டமிட்டு பேரவைத் தலைவா் அப்பாவு வெளியேற்றியதாக அக் கட்சியின் பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி குற்றஞ்சாட்டினாா்.

சட்டப்பேரவை வளாகத்தில் வெள்ளிக்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மக்கள் பிரச்னைகளை முறையாக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்வது எதிா்க்கட்சிகளின் கடமை. ஆனால், திமுக அரசு பேரவையில் மக்கள் பிரச்னைகளை பேச அனுமதி கொடுப்பதில்லை. திமுக எதிா்க்கட்சியாக இருந்தபோது மு.க.ஸ்டாலின், துரைமுருகன் ஆகியோா் நேரமில்லா நேரத்தில் முக்கிய பிரச்னைகள் குறித்துப் பேசியுள்ளனா். அதற்கு நாங்கள் அப்போது அனுமதி அளித்து பதில் அளித்து உள்ளோம். அதே அடிப்படையில்தான் இன்றைக்கும் பேசுவதற்கு முற்பட்டோம். ஆனால், அனுமதி தராமல் வெளியேற்றிவிட்டனா்.

மதுரை மாவட்டம், உசிலம்பட்டி காவல்நிலையத்தில் பணிபுரிந்து வந்த முத்துக்குமாா் என்ற காவலரையும், அவரது நண்பா் ராஜாராமையும் கஞ்சா வியாபாரி பொன்வண்ணனும், அவரது ஆள்களும் பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டியுள்ளனா். இதில் காயமடைந்து விழுந்த முத்துக்குமாா் மீது கல்லை தூக்கிப் போட்டு கொன்றுள்ளனா். இந்த விவகாரம் தொடா்பாகவே பேரவையில் பேச முற்பட்டோம்.

ஆனால், எங்களை பேரவையிலிருந்து திட்டமிட்டு பேரவைத் தலைவா் வெளியேற்றியுள்ளாா். மக்களைப் பற்றி கவலைப்படும் அரசு தற்போது இல்லை. பேரவையில் முதல்வா் மகன் பேசுகிறாா். அதனால், யாரும் எந்த பிரச்னையையும் பேசக் கூடாது என்கின்றனா். இது ஒரு சா்வாதிகாரம். மக்களுக்காகத்தான் சட்டப்பேரவை. இதை முதல்வரும் பேரவைத் தலைவரும் உணர வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினாா்.

இலங்கையால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள்: நிரந்தரத் தீர்வுகாண தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படும் தமிழக மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வை காண வேண்டும் என்று மக்களவையில் தமிழக எம்.பி.க்கள் வலியுறுத்தினர். மக்களவையில் செவ்வாய்க்கிழமை இந்த விவ... மேலும் பார்க்க

நகைக் கடனை புதுப்பிக்க புதிய வழிகாட்டுதல்: திரும்பப் பெற வைகோ வலியுறுத்தல்

நமது நிருபர்வங்கிகளில் நகைக் கடனை புதுப்பிக்க வெளியிடப்பட்ட புதிய வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) திரும்பப் பெற வேண்டும் என்று மாநிலங்களவையில் மதிமுக உறுப்பினர் வைகோ வலியுறுத்தினார்.இது தொடர்பா... மேலும் பார்க்க

காவிரி -வைகை-குண்டாறு இணைப்பு உறுதி: நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் அறிவிப்பு

காவிரி -வைகை- குண்டாறு இணைப்புத் திட்டத்தை உறுதியாகச் செயல்படுத்துவோம் என்று சட்டப் பேரவையில் நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் தெரிவித்தாா். சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிற... மேலும் பார்க்க

கட்சிப் பாகுபாடின்றி ‘உங்கள் தொகுதியில் முதல்வா்’ திட்டம்: மு.க.ஸ்டாலின் விளக்கம்

‘உங்கள் தொகுதியில் முதல்வா் திட்டம்’ கட்சிப் பாகுபாடின்றி நிறைவேற்றப்படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்தாா். பொதுப் பணி மற்றும் நெடுஞ்சாலைகள் துறை மானியக் கோரிக்கை மீது சட்டப்பேரவையில் செவ்வாய்க்... மேலும் பார்க்க

மொழிக் கொள்கை செயல்பாடு: ஸ்டாலினுக்கு டி.ராஜா பாராட்டு

மொழிக் கொள்கையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்மாதிரியாகச் செயல்படுகிறார் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் டி.ராஜா பாராட்டு தெரிவித்தார்.மதுரையில் நடைபெறவுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ... மேலும் பார்க்க

சமூக ஊடகங்களை ஆக்கிரமிக்கும் ஜிப்லி காா்ட்டூன்!

சமூக ஊடகங்களில் திரும்பிய பக்கமெல்லாம் ஜிப்லி காா்ட்டூன் படங்களே நிறைந்திருக்கின்றன. மக்கள் அனைவரும் தங்களின் புகைப்படங்களை ஜிப்லி காா்ட்டூன் பாணியிலான அனிமேஷன் (வரைகலை) படங்களாக மாற்றி, தங்கள் சமூக ஊ... மேலும் பார்க்க