செய்திகள் :

திண்டுக்கல்: கிணற்று நீரால் கிராமத்தில் பரவும் தோல் நோய்; குடிநீருக்காக ஊர் விட்டு ஊர் போகும் அவலம்

post image

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பெருமாள்கோவில்பட்டியில் உள்ள மக்கள் குடிநீருக்காக அங்கு உள்ள கிணற்று நீரையே நம்பியிருந்தனர். தற்போது கிணற்று நீர் சுகாதாரமானதாக இல்லை. அந்த நீரைக் குடித்ததால் தோல் சார்ந்த பிரச்னைகள் மற்றும் 17 வயதிற்குட்பட்ட குழந்தைகள் மஞ்சள் காமலை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர் .

இந்நிலையில் குடிநீர்த் தேவைக்காக மேல்நிலை குடிநீர்த் தொட்டி ஒன்று கடந்த மார்ச் மாதத்தில் அங்குக் கட்டி முடிக்கப்பட்டது. மேல்நிலை தொட்டிக்கான வேலைகள் எல்லாம் முடிந்தாலும் இன்னமும் மக்களின் பயன்பாட்டிற்கு வராமல் இருப்பதால் குடிநீருக்காகப் பக்கத்து ஊர் வரை சென்று தண்ணீர் எடுத்துவருவதாக வருவதாகப் புகார் எழுந்துள்ளது. இது பற்றி ஊராட்சி அலுவலகத்தில் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது குறித்து அங்கு வசிக்கும் ராஜவேல் பேசும் போது, “கிணற்று நீர் மிகவும் உப்பு கரிக்கும். அதனைக் குடிப்பதால் நிறைய நோய்கள் வருகின்றன. இதுவரை 20 பேர் தோல் நோய்களாலும், 15 சிறுவர்களுக்கு மஞ்சள் காமாலை நோயாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ராஜவேல்
ராஜவேல்

இந்தப் பிரச்னைகளால் குடிப்பதற்கு மட்டும் பக்கத்து ஊருக்கு வண்டியில் சென்று ஒரு தடவைக்கு 2 குடங்கள் என இரண்டு முறை தடவை சென்று தண்ணீர் பிடித்து வருகிறோம். அந்த ஊர்க்காரர்கள் தண்ணீர் பிடித்த பின்புதான் நாங்கள் பிடிக்க வேண்டும். சில சமயங்களில் நாங்கள் தண்ணீர் பிடிக்கும் முன்பே நின்று விடுகிறது.  

சில நாள்களில் வெறும் குடங்களுடன்தான் திரும்பி வருகிறோம். வண்டி இல்லாதவர்கள் இந்தத் தண்ணீரையே குடிக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இந்த மேல்நிலை தொட்டி பயன்பாட்டிற்கு வந்தால் எங்களுடைய குடிநீர் பிரச்னை முடிவுக்கு வரும்” என்றார்.

மேல்நிலை தொட்டி செயல்பாட்டிற்கு வராததது குறித்து வட்டாட்சியர் செல்வராஜ் மாணிக்கத்திடம் விளக்கம் கேட்டோம். "இன்னும் ஒரு வாரத்திற்குள் மேல்நிலை தொட்டியில் குடிநீர் கொண்டு வருகிறேன்" என்று உறுதியளித்துள்ளார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்...https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/46c3KEk

பழங்குடி லாக்அப் மரணம்; வனத்துறை அதிகாரிகள் இருவர் பணியிடை நீக்கம் - பின்னணி என்ன?

திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள மேல்குருமலை பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (45). முதுவர் பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த மாரிமுத்த... மேலும் பார்க்க

"இந்தியாதான் அமெரிக்காவையே வழிநடத்துகிறது" - ட்ரம்ப் பேச்சு குறித்து அண்ணாமலை

சென்னை IIT- நிகழ்ச்சி ஒன்றில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குறித்து பேசியிருக்கும் பாஜக அண்ணாமலை, "கூகுள், மெட்டா, மைக்ரோசாஃப் உள்ளிட்ட முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கிய பொறுப்பில் இருப்பவர்கள் கலந... மேலும் பார்க்க

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்: "நோயாளிகளை மருத்துவப் பயனாளிகள் என அழையுங்கள்" - முதல்வர் கோரிக்கை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களிலும் 'நலம் காக்கும் ஸ்டாலின்' மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இன்று (ஆகஸ்ட் 2) இந்த மருத்துவ முகாம் திட்டத்தினை ... மேலும் பார்க்க

Vantara: கோவில் யானை அம்பானியின் வந்தாரா பூங்காவிற்கு மாற்றம்; மகாராஷ்டிராவில் வெடிக்கும் போராட்டம்!

மகாரஷ்டிரா, கோலாப்பூரின் நந்தினி மடத்தின் 36 வயது கோவில் யானையான 'மகாதேவி (மதுரி)', அம்பானியின் 'வந்தாரா' உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது பெரும் பேசுபொருளாகி வருகிறது. 1992ம் ஆண்டு முதல் அந்த மடத்... மேலும் பார்க்க

`சிபிசிஐடி விசாரிக்கக் கூடாது; போலீஸுக்கு அடிப்படை அறிவு இல்லையா?’ - கவின்குமார் விவகாரத்தில் திருமா

கவின்குமார் ஆணவப் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருநெல்வேலியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக காவல்துறை அதிகாரிகளை மிகக் கடுமையான விமர்சித்த அக்கட்சியின் தலைவர் ... மேலும் பார்க்க

பழைய குற்றால அருவி யாருக்கு சொந்தம்? - பொதுப்பணித்துறை, வனத்துறை குழப்பம்; வேல்முருகன் சொல்வதென்ன?

தென்காசி மாவட்டத்தில், வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து சட்டப்பேரவை உறுதிமொழி குழுவினர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.இந்த ஆய்வில் தென்காசி அரசு மருத்துவமனை, தென்காசி புதிய பேருந்து நிலையம், மேக்கரை அடவிநயி... மேலும் பார்க்க