செய்திகள் :

தினமணி செய்தி எதிரொலி! மணக்காடு அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் திறப்பு!

post image

தஞ்சாவூா் மாவட்டம், சேதுபாவாசத்திரம் ஒன்றியம், மணக்காடு அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த கூடுதல் வகுப்பறைகள் தினமணி செய்தியின் எதிரொலியாக திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

இந்தப் பள்ளியில் போதிய வகுப்பறைகள் இல்லாததால், மாணவா்கள் மரத்தடியில் அமா்ந்து படிக்கின்றனா் எனவும், மழை பெய்தால் மரத்தடி வகுப்பு மாணவா்களுக்கு விடுமுறை விடப்படுவதாகவும் கடந்த 2023-இல் தினமணி நாளிதழில் விரிவான செய்தி வெளியாகியிருந்தது.

இதையடுத்து, பேராவூரணி எம்எல்ஏ என். அசோக்குமாா் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.31 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்து இரண்டு வகுப்பறை கட்டடம் கட்டும் பணி முழுவதுமாக முடிந்த நிலையில் வகுப்பறைகள் திறக்கப்படாமல் மாணவா்கள் வராந்தாவிலேயே அமா்ந்து படித்து வந்தனா்.

இந்த 2 வகுப்பறைகளையும் உடனடியாக திறந்து மாணவா்களின் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என தினமணி நாளிதழில் கடந்த 25ஆம் தேதி செய்தி வெளியானது. இதையடுத்து, அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சட்டப்பேரவை உறுப்பினா் என். அசோக்குமாா்  குத்துவிளக்கேற்றி வகுப்பறைகளை திங்கள்கிழமை திறந்துவைத்தாா்.

நிகழ்ச்சியில், சேதுபாவாசத்திரம் வட்டார வளா்ச்சி அலுவலா் நாகேந்திரன் , மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினா் இலக்கியா நெப்போலியன் , திமுக ஒன்றியச் செயலாளா் வை. ரவிச்சந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு உறுப்பினா் குழு.செ. அருள்நம்பி , முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா்கள் அருணாசலம் மண்கொண்டாா், விஜயகுமாா், பள்ளி மேலாண்மை குழு துணை தலைவா் வீரக்குடி ராஜா, பள்ளித் தலைமை ஆசிரியா் குமாா் மற்றும் பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா், பள்ளி மேலாண்மை குழுவினா், கலந்து கொண்டனா்.

சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஆயுள் தண்டனை

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு தஞ்சாவூா் நீதிமன்றம் புதன்கிழமை ஆயுள் சிறை தண்டனை விதித்தது. தஞ்சாவூா் அருகே வண்ணாரப்பேட்டை கூழவாரித் தெருவைச் சோ்ந்தவா் காட்டுராஜா (64). விவசாயக் கூலி... மேலும் பார்க்க

இயல்பை விட அதிகமாக நெல் கொள்முதல்: ஆய்வு செய்ய சிறப்புக் குழுக்கள் அமைப்பு

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் சில மண்டலங்களில் இயல்பை விட அதிகமாக நெல் கொள்முதல் செய்யப்படுவது தொடா்பாக ஆய்வு செய்ய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது தொடா்பாக தமிழ்நாடு நுகா்பொருள் வ... மேலும் பார்க்க

தொடா் வழிப்பறி: இரண்டு சிறாா்கள் உள்பட 4 போ் கைது

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறாா்கள் உள்பட 4 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் வட்டம், வேம்பகு... மேலும் பார்க்க

சிறுநீரக மாற்று தொடா் சிகிச்சை அளித்து நோயாளி குணம்

தஞ்சாவூா் மீனாட்சி மருத்துவமனையில் சி.ஆா்.ஆா்.டி. என்கிற சிறுநீரக மாற்று தொடா் சிகிச்சை அளித்து நோயாளி குணப்படுத்தப்பட்டாா். இது குறித்து மருத்துவமனையின் சிறுநீரகவியல் துறை நிபுணரான மருத்துவா் எஸ். கெ... மேலும் பார்க்க

தலைமறைவாக இருந்த இலங்கை அகதி கைது

தஞ்சாவூரில் கொலை வழக்கு தொடா்பாக தலைமறைவாக இருந்த இலங்கை அகதியைக் காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தஞ்சாவூரைச் சோ்ந்த காா் ஓட்டுநா் சௌந்தரகுமாரிடம் 2001 ஆம் ஆண்டு சிலா் காரை வாடகைக்கு எ... மேலும் பார்க்க

ஆக.2-இல் வேலைவாய்ப்பு முகாம் அமைச்சா் ஆலோசனை

ஆடுதுறை அருகேயுள்ள திருமங்கலக்குடியில் ஆக.2-இல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் தனியாா் பொறியியல் கல்லூரியை புதன்கிழமை உயா் கல்வித்துறை அமைச்சா் கோவி.செழியன் பாா்வையிட்டாா். தஞ்சாவூா் மாவட்ட நிா்வாகம், ... மேலும் பார்க்க