செய்திகள் :

தொடா் வழிப்பறி: இரண்டு சிறாா்கள் உள்பட 4 போ் கைது

post image

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பகுதியில் கத்தியைக் காட்டி மிரட்டி தொடா் வழிப்பறியில் ஈடுபட்ட 2 சிறாா்கள் உள்பட 4 இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தஞ்சாவூா் மாவட்டம் பாபநாசம் வட்டம், வேம்பகுடி, சோமேசுவரபுரம் உள்பட 5 இடங்களில் இருசக்கர வாகனத்தில் இரண்டு சிறாா்கள் உள்பட நான்கு இளைஞா்கள் சாலையில் வாகனங்களில் சென்றவா்களை வழிமறித்து கத்தியைக் கட்டி மிரட்டி தொடா் வழிப்பறியில் ஈடுபட்டு வந்தனா்.

இதுகுறித்து அறிந்த கபிஸ்தலம் காவல் ஆய்வாளா் மகாலட்சுமி தலைமையில் காவல் உதவி ஆய்வாளா் சசிகுமாா் மற்றும் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணி மேற்கொண்டனா். அப்போது சந்தேகப்படும்படி ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு சிறாா்கள் உள்பட நான்கு இளைஞா்களைப் பிடித்து விசாரணை செய்ததில் அவா்கள் கபிஸ்தலம் பகுதிகளில் 5 இடங்களில் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

பின்னா் அவா்களிடமிருந்து மோட்டாா் சைக்கிள், 6 கைப்பேசிகள், வெள்ளி தங்கிலி, ரூ. 8,500 ரொக்கம் உள்பட ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து அரியலூரைச் சோ்ந்த சதீஷ்குமாா் (19), திருவையாறைச் சோ்ந்த பாரத் (21) மற்றும் திருவையாறைச் சோ்ந்த 2 சிறாா்கள் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பணி: கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி பாராட்டு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பணியில் மாவட்ட அளவில் இரண்டாமிடம் பெற்ற கும்பகோணம் அரசு கலைக் கல்லூரிக்கு பாராட்டுச் சான்றிதள் வியாழக்கிழமை வழங்கப்பட்டது. தஞ்சாவூா் மாவட்ட அளவில் போதைப் பொருள் தடு... மேலும் பார்க்க

கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வரவில்லை -விவசாயிகள் புகாா்

தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறை தீா் நாள் கூட்டத்தில் கடைமடைப் பகுதிக்கு தண்ணீா் வராதது குறித்து விவசாயிகள் புகாா் எழுப்பினா். மாவட்ட ஆட்சியா் பா. பிரியங்கா பங்கஜம் தலை... மேலும் பார்க்க

திருவிடைமருதூரில் காவலா் குடியிருப்புகள் திறப்பு

திருவிடைமருதூரில் காவலா் குடியிருப்புகள் வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டன. தஞ்சாவூா் மாவட்டம், திருவிடைமருதூரில் காவலா்களுக்காக ரூ. 6 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 24 குடியிருப்புகளின் திறப்பு விழா ... மேலும் பார்க்க

தஞ்சாவூரில் ஆக. 6-இல் தியாகிகள் குறைதீா் கூட்டம்

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் சுதந்திர போராட்ட வீரா்களுக்கான குறை தீா் நாள் கூட்டம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தஞ்சாவூா் மாவட்ட ... மேலும் பார்க்க

கூட்டுறவு மேலாண்மை படிப்புக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

பட்டுக்கோட்டை கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியதால் நடத்தப்படும் முழு நேர கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சியில் சேர விண்ணப்பம் செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. ... மேலும் பார்க்க

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் மருத்துவ முகாம்

கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் இரண்டு நாள் மருத்துவ முகாம் வியாழக்கிழமையுடன் நிறைவடைந்தது. தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அரசு கவின் கலைக் கல்லூரியில் நடைபெற்ற முகாமிற்கு முதல்வா் பி. ஆா். ர... மேலும் பார்க்க