செய்திகள் :

தினமும் கணவரை பொய் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தும் மனைவி - என்ன காரணம் கூறுகிறார் தெரியுமா?

post image

இங்கிலாந்தைச் சேர்ந்த டெபி என்ற பெண் தினமும் தனது கணவர் ஸ்டீவ் என்பவரை பொய் கண்டறியும் சோதனைக்கு உட்படுத்தும் சம்பவம் பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

ஸ்டீவ் எதர்ச்சையாக ஒருமுறை, தான் உண்மையாக இருப்பதை நிரூபிக்க பொய் கண்டறியும் சோதனைக்கு தயார் என்று கூறியிருக்கிறார். ஸ்டீவ் சாதாரணமாக சொன்னதை, டெபி நகைச்சுவையாக எடுத்துக்கொள்ளவில்லை. அவர் உடனடியாக ஒரு பொய் கண்டறியும் இயந்திரத்தை வாங்கி அதனை செயல்படுத்த முயற்சி செய்துள்ளார்.

Picture: Ken McKay

இதற்கு காரணம் என்ன?

தொலைதூர உறவு குறித்த பதற்றமும், கடந்த காலத்தில் அனுபவித்த வேதனையான அனுபவங்களும் இணைந்து டெபியை இவ்வாறு செய்ய தூண்டுவதாக அவர் கூறுகிறார். டெபியும் ஸ்டீவும் டேட்டிங் செய்ய தொடங்கியபோது, வெவ்வேறு நகரங்களில் வசித்திருக்கின்றனர்.

ஸ்டீவ் அவர்கள் உறவு உறுதியாவதற்கு முன், வேறு ஒரு பெண்ணுடன் சிறிது காலம் உறவில் இருந்ததாக டெபிக்கு தெரியவந்ததையடுத்து அவர் மீது சந்தேகம் கொள்ள தொடங்கியிருக்கிறார்.

அவர் ஸ்டீவின் வங்கி ஸ்டேட்மெண்ட், தொலைபேசி பதிவுகள் என அனைத்தையும் கண்காணிக்கத் தொடங்கியிருக்கிறார். ஒரு உள்ளாடை விளம்பரத்திற்கு ஸ்டீவ் கண் சிமிட்டினால் கூட, டெபி அவரை விசாரணை செய்வாராம்.

ஸ்டீவின் பொறுமையான மற்றும் அமைதியான அணுகுமுறை, இவர்களின் உறவை ஒன்றாக வைத்திருப்பதில் பெரும் பங்கு வகுத்திருக்கிறது. இருவரும் ஒருவரையொருவர் இயல்பாகவே நேசிக்க தொடங்கியுள்ளனர். டெபியும் மாற தொடங்கியிருக்கிறார்.

பொய் கண்டறியும் இயந்திரம், தினசரி பயன்பாட்டில் இருந்து, அரிதாக பயன்படுத்தப்படும் ஒரு கருவியாக மாறியது.

இது குறித்து டெபி கூறுகையில் ”பொறாமை எங்கள் உறவை கிட்டத்தட்ட அழித்துவிட்டது. ஆனால் எங்களது திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக உள்ளது. பொய் கண்டறியும் இயந்திரம் கடந்த காலத்தில் இருந்திருக்கலாம், ஆனால் இனி அது எங்களின் எதிர்காலத்தை கட்டுப்படுத்தாது” என்று கூறியிருக்கிறார்.

வெறும் 1,592 ரூபாய்க்கு திருமணம் செய்த மணமக்கள்; கவனம் பெற்ற ராஜஸ்தான் தம்பதி - எப்படி தெரியுமா?

ராஜஸ்தானைச் சேர்ந்த கமல் அகர்வால் மற்றும் அவரது நீண்டநாள் காதலி ரூச்சி, பிரமாண்டமான திருமண விழாக்களைத் தவிர்த்து, எளிமையான நீதிமன்றத் திருமணத்தை மேற்கொண்டு இணையவாசிகளிடம் கவனம் பெற்றுள்ளனர். பல லட்சங்... மேலும் பார்க்க

MrBeast: 40 கோடி சந்தாதாரர்கள்; நேரில் வாழ்த்திய யூடியூப் CEO; யார் இந்த 'மிஸ்டர் பீஸ்ட்' ஜிம்மி?

யூடியூபில் 40 கோடி சந்தாதாரர்களைப் பெற்ற முதல் யூடியூபர் என்ற வரலாற்றைப் படைத்திருக்கிறார் மிஸ்டர் பீஸ்ட் (Mr.Beast) சேனலை நடத்தி வரும் பிரபல யூடியூபர் ஜிம்மி டொனால்ட்சன். இதனைக் கௌரவிக்கும் விதமாக யூ... மேலும் பார்க்க

மகாராஷ்டிரா: ``அரசு திட்டங்களை சமூக ஊடகங்களில் விமர்சிக்கக்கூடாது'' - அரசு ஊழியர்களுக்கு உத்தரவு

மகாராஷ்டிரா பள்ளிகளில் ஒன்று முதல் 5-வது வகுப்பு வரை மூன்றாவது மொழியாக இந்தி அறிமுகம் செய்யப்படும் என்று மாநில அரசு அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு ... மேலும் பார்க்க

சத்தீஷ்கர்: `விரும்பித்தான் சென்றோம்’ - பெண்கள் ; மதமாற்றம் செய்ய முயன்றதாக கன்னியாஸ்திரிகள் கைது

சத்தீஷ்கர் மாநிலம் துர்க் ரயில் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இரு கன்னியாஸ்திரிகள் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர். கன்னியாஸ்திரிகள் பிரீத்தி மற்றும் வந்தனா பிரான்சிஸ் மற்... மேலும் பார்க்க

கூகுள் மேப் போட்டு பயணம்; பாலத்தில் வேகமாக சென்ற கார், கடலுக்குள் விழுந்த சோகம்..

பொதுவாக வாகன ஓட்டிகள் தெரியாத ஒரு இடத்திற்கு செல்லும்போது கூகுள் மேப்பை பார்த்துக்கொண்டு செல்வது வழக்கம். ஆனால் சில நேரங்களில் இந்த கூகுள் மேப் தவறான வழியை காட்டிவிடுகிறது. இதனால் பல வாகனங்கள் குழி, ஆ... மேலும் பார்க்க

சஞ்சய் கபூரின் ரூ.30000 கோடி சொத்தில் கரிஷ்மா கபூர் குழந்தைகளுக்கு பங்கு கிடைக்குமா?

பாலிவுட் நடிகை கரிஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூர் கடந்த மாதம் 12-ம் தேதி அகால மரணம் அடைந்தார். அவர் லண்டனில் போலோ விளையாட்டு விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக அவரது வாயிக்குள் ஒரு த... மேலும் பார்க்க