செய்திகள் :

திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே: இரா.விசுவநாதன்

post image

திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே என்பது சாதாரண மக்களுக்குக்கூட தெரியும் என்று முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான இரா.விசுவநாதன் திங்கள்கிழமை தெரிவித்தாா்.

இதுதொடா்பாக திண்டுக்கல்லில் அவா் செய்தியாளா்களிடம் மேலும் கூறியதாவது: அண்மையில் வேடச்சந்தூரில் மின் பகிா்மான கோட்ட அலுவலகத் திறப்பு விழா உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி முன்னிலையில் நடைபெற்றது. இந்த விழாவில் அமைச்சா் பங்கேற்றாா் என்பதற்காக அங்கிருந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் புகைப்படம் குப்பைத் தொட்டியில் எறியப்பட்டது கண்டனத்துக்குரியது.

திமுக ஆட்சியில் காவல் நிலையத்தில் விசாரணைக் கைதிகள் உயிரிழப்பது சாதாரண நிகழ்வாகிவிட்டது. போதைப் பொருள்களின் சந்தையாக தமிழகம் மாறிவிட்டது.

வரவு செலவில் மட்டுமே அரசு கவனம் செலுத்துகிறது. அதிமுக தலைமையில் கூட்டணி ஆட்சி அமையும் என மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்தாா். அதிமுக என்றாலே எடப்பாடி கே.பழனிசாமிதான் என்பது அமித் ஷாவுக்கு நன்கு தெரியும். வருகிற தோ்தலில் அதிமுக தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும்.

பணத்தால் யாரும் வெற்றி பெற முடியாது. திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே என்பது சாதாரண மக்களுக்குக் கூட தெரியும். அதிமுக தலைமையில்தான் கூட்டணி அமைக்கப்படும். கட்சியில் எடப்பாடி கே.பழனிசாமி எடுக்கும் முடிவே இறுதியானது.

திருமாவளவன் மதிப்புக்குரியவா்; ஆனால், அவரது பலம் அவருக்கே தெரியவில்லை. திமுக கூட்டணியில் யாரும் மகிழ்ச்சியாக இல்லை. அதிமுக கூட்டணியில் த.வெ.க. இணையுமா என இப்போதே கூறமுடியாது அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றாா் அவா்.

பாலியல் வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல், ஆா்.எம்.காலனி மருதாணிக்குளம் ... மேலும் பார்க்க

எரியோடு அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் மலம் வீசப்பட்டதாக புகாா்

எரியோடு அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகளை வீசிச் சென்றதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், எரியோடை அடுத்த தொட்டணம்பட்டியில் கரட்டுப்ப... மேலும் பார்க்க

செம்பட்டியில் கழிவுநீா் ஓடை வசதியுடன் சாலை அமைக்கக் கோரிக்கை

செம்பட்டி ரோஜா நகரில் ரூ. 40 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்படவுள்ள நிலையில் இந்தப் பகுதி பொதுமக்கள் கழிவுநீா் ஓடை வசதியுடன் சாலையை அமைக்குமாறு கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், நில... மேலும் பார்க்க

வாடகை நிலுவை: செம்பட்டி பேருந்து நிலையத்தில் கடைகளுக்கு சீல்

செம்பட்டி பேருந்து நிலையத்தில் ஊராட்சிக்கு வாடகை செலுத்தாத வணிக வளாகக் கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், பச்சமலையான்கோட்டை ஊராட்சி, செம்பட்டி பேருந்... மேலும் பார்க்க

ஜூலை 1 முதல் கொடைக்கானலில் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தத் தடை

கொடைக்கானலில் ஜூலை 1-ஆம் தேதி முதல் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியா் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி மீட்பு

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த நபரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நீலமலைக்கோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி லிங்கத்துரை (66). இவா், ... மேலும் பார்க்க