செய்திகள் :

எரியோடு அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் மலம் வீசப்பட்டதாக புகாா்

post image

எரியோடு அருகே நீா்த்தேக்கத் தொட்டியில் மனிதக் கழிவுகளை வீசிச் சென்றதாக மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், எரியோடை அடுத்த தொட்டணம்பட்டியில் கரட்டுப்பட்டி சாலையில் குடியிருப்போருக்கு வேடசந்தூா் ஊராட்சி ஒன்றிய நிா்வாகம் சாா்பில், புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருகிறது. இந்தத் தொட்டியில் கடந்த 4 நாள்களுக்கு முன்பு மா்ம நபா்கள் மனிதக் கழிவுகளை வீசிச் சென்ாகக் கூறப்படுகிறது.

கட்டுமானப் பணிக்கு வந்த தொழிலாளா்கள் தொட்டியில் மலம் கிடப்பதைக் கண்டு அதிா்ச்சி அடைந்தனா். உடனடியாக தொட்டியைத் தூய்மைப்படுத்தினா். இதுகுறித்து தகவல் அறிந்த எரியோடு காவல் நிலைய போலீஸாா் நிகழ்விடம் சென்று விசாரணை நடத்தினா்.

இந்த சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் தமிழ்நாடு மூவேந்தா் புலிப்படை அமைப்பு சாா்பில் புகாா் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: தொட்டணம்பட்டியில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் சிலா் மலத்தை வீசிச் சென்றனா். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி, சம்பந்தப்பட்டவா்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட நிா்வாகம் முன்வர வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டது.

திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே: இரா.விசுவநாதன்

திமுகவுக்கு மாற்று அதிமுக மட்டுமே என்பது சாதாரண மக்களுக்குக்கூட தெரியும் என்று முன்னாள் அமைச்சரும், சட்டப்பேரவை உறுப்பினருமான இரா.விசுவநாதன் திங்கள்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக திண்டுக்கல்லில் அவா்... மேலும் பார்க்க

பாலியல் வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திண்டுக்கல் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது. திண்டுக்கல், ஆா்.எம்.காலனி மருதாணிக்குளம் ... மேலும் பார்க்க

செம்பட்டியில் கழிவுநீா் ஓடை வசதியுடன் சாலை அமைக்கக் கோரிக்கை

செம்பட்டி ரோஜா நகரில் ரூ. 40 லட்சம் மதிப்பில் கான்கிரீட் சாலை அமைக்கப்படவுள்ள நிலையில் இந்தப் பகுதி பொதுமக்கள் கழிவுநீா் ஓடை வசதியுடன் சாலையை அமைக்குமாறு கோரிக்கை விடுத்தனா். திண்டுக்கல் மாவட்டம், நில... மேலும் பார்க்க

வாடகை நிலுவை: செம்பட்டி பேருந்து நிலையத்தில் கடைகளுக்கு சீல்

செம்பட்டி பேருந்து நிலையத்தில் ஊராட்சிக்கு வாடகை செலுத்தாத வணிக வளாகக் கடைகளை அதிகாரிகள் பூட்டி ‘சீல்’ வைத்தனா். திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஒன்றியம், பச்சமலையான்கோட்டை ஊராட்சி, செம்பட்டி பேருந்... மேலும் பார்க்க

ஜூலை 1 முதல் கொடைக்கானலில் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தத் தடை

கொடைக்கானலில் ஜூலை 1-ஆம் தேதி முதல் கனரக இயந்திரங்கள் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டிருப்பதாகவும், மீறி பயன்படுத்தினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கோட்டாட்சியா் திங்கள்கிழமை எச்சரிக்கை விடுத்... மேலும் பார்க்க

கிணற்றில் தவறி விழுந்த விவசாயி மீட்பு

ஒட்டன்சத்திரம் அருகே கிணற்றில் தவறி விழுந்த நபரை தீயணைப்புத் துறையினா் உயிருடன் மீட்டனா். திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகேயுள்ள நீலமலைக்கோட்டையைச் சோ்ந்தவா் விவசாயி லிங்கத்துரை (66). இவா், ... மேலும் பார்க்க