செய்திகள் :

``திமுகவை வீட்டுக்கு அனுப்புவதே எங்கள் நோக்கம்; அதனால் விஜய்யும் எங்களோடு..'' - கடம்பூர் ராஜூ

post image

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில்  சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து புதிதாக கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் மற்றும் கலையரங்கத்தை திறந்து வைத்தார் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தி.மு.க ஆட்சி, மக்களுக்கான ஆட்சி இல்லை. அவர்களின்  ஒரு குடும்பத்திற்கான ஆட்சி. மக்கள் விரோத ஆட்சி, மக்கள் நலன் பயக்காத ஆட்சி.

சொன்ன வாக்குகளை நிறைவாற்றாமல் ஏமாற்றிய திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற கருத்தோடு அதிமுக வரும் சட்டமன்றத்  தேர்தலை அணுக இருக்கிறது.

கடம்பூர் ராஜூ

அதே கருத்தோடுதான் அன்பு சகோதரர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யும் திமுக ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்.

வரும்  சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் கால அவகாசம் இருக்கிறது. அடுத்த ஆண்டு ஜனவரியில்தான் கூட்டணி இறுதி வடிவம் பெறும். அதே நேரத்தில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றாக சேர்ந்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

சாதாரணமாக பார்த்தாலே இந்த ஆட்சியின் குற்றங்கள் மக்களுக்கு தெரிகிறது. பூதக்கண்ணாடி வைத்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை.அதனால், அந்த வகையில் பயாஸ்கோப் போட்டுக் காட்டுவதாக ஆர்.எஸ்.பாரதி கூறிய கருத்து ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான்.

கடம்பூர் ராஜூ

`அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வு திட்டம் வழங்கப்படும்' என்று கூறி ஏமாற்றினார்கள். நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத் தொடரில் அவர்களை சமாதானப்படுத்த சில அறிவிப்புகளை அறிவித்தார்கள். அதனை ஏற்றுக்கொள்ள அரசு ஊழியர்கள் தயாராக இல்லை. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது அரசு ஊழியர்களுக்கும் பொருந்தும். அவர்கள் முந்தைய தேர்தலில் தவறு செய்துவிட்டு தற்போது விழித்துக் கொண்டார்கள்.” என்றார்.

`கீழடி ஆய்வறிக்கையை திருப்பி அனுப்பிய இந்திய தொல்லியல் துறை' - கிளம்பிய சர்ச்சையும், விளக்கமும்!

அமர்நாத் ராமகிருஷ்ணன் கீழடி குறித்த தனது ஆய்வறிக்கையை இந்திய தொல்லியல் துறைக்கு 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் சமர்ப்பித்திருந்தார். இந்த அறிக்கையில் சில மாற்றங்களைச் செய்யுமாறு கடந்த வாரம் திருப்பி அனுப்ப... மேலும் பார்க்க

US Tariffs: `இறக்குமதி வரி ரத்து-க்கு தற்காலிக தடை!' - நீதிமன்ற தீர்ப்பு ட்ரம்ப்-க்கு வெற்றியா?

கடந்த ஏப்ரல் 2-ம் தேதி, பெரும்பாலான உலக நாடுகளுக்கு 'பரஸ்பர வரி'யை விதித்து உத்தரவிட்டார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். அந்த நாளுக்கு 'விடுதலை நாள்' என்றும் பெயர் வைத்தார். 'பிற உலக நாடுகள் அமெரிக்காவின் ம... மேலும் பார்க்க

USA: `சீன மாணவர்களுக்கு ஸ்பெஷல் கண்டிஷன்' - வெளிநாட்டு மாணவர்களுக்கு ட்ரம்ப் வைக்கும் செக்!

அமெரிக்காவில் படிப்பு... அமெரிக்காவில் வேலை என்பது இந்தியா உள்ளிட்ட பெரும்பாலான உலக நாடுகளில் உள்ள இளைஞர்களின் கனவு. ஆனால், இனி அது அவ்வளவு எளிதாக இருக்காது. இதற்கு காரணம், 'அமெரிக்க அதிபர் ட்ரம்ப்'.அ... மேலும் பார்க்க

`தெலுங்கானா ராஷ்டிரியா சமிதி பாஜக உடன் இணைப்பா?' - சந்திரசேகர் ராவின் மகள் கவிதா பரபரப்பு புகார்!

தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் பாரதிய ராஷ்டிரிய சமிதி கட்சிக்குள் சமீபத்திய ஆண்டுகளில் தொடர்ந்து சலசலப்பு எழுந்து கொண்டே இருக்கிறது. கடந்த வாரம், 'நான் என்னுடைய தந்தைக்கு எழுதிய கடிதம... மேலும் பார்க்க

Doctor Vikatan: நடிகர் ராஜேஷ் மரணம்; low BP தான் காரணமா, உயிரைப் பறிக்கும் அளவுக்கு ஆபத்தானதா?

Doctor Vikatan: நடிகர் ராஜேஷ் குறைந்த ரத்த அழுத்தம் காரணமாக உயிரிழந்ததாக செய்திகளில் கேள்விப்படுகிறோம். குறைந்த ரத்த அழுத்தம் என்பது உயிரைப் பறிக்கும் அளவு ஆபத்தான பிரச்னையா... எந்த அளவு வரை குறைந்தால... மேலும் பார்க்க

`தாக்குதல் நடத்தியவர்கள் சுதந்திரமாக சுற்ற, நமது எம்.பிகள் விளக்கமளிக்க..' - ஜெய்ராம் ரமேஷ் காட்டம்

பஹல்காம் தாக்குதலில் ஈடுபட்ட நான்கு தீவிரவாதிகள் இன்னும் சுதந்திரமாக சுற்றித் திரிகிறார்கள் என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக நேற்று செய்தியாளர்களை சந்... மேலும் பார்க்க