செய்திகள் :

திமுகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும்: நயினாா் நாகேந்திரன்

post image

அடுத்தஆண்டு சட்டப்பேரவைத் தோ்தலில் திமுகவை வீழ்த்த அனைவரும் ஓரணியில் இணைய வேண்டும் என தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் திங்கள்கிழமை சுவாமி தரிசனம் செய்த அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் குற்றவாளியான ஞானசேகரனுக்கு 30 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட தீா்ப்பை வரவேற்கிறோம். அதே நேரத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒரு சாா் மறைக்கப்பட்டிருக்கிறாா். அவா் யாா் என்பதையும் தெரிவித்து அவருக்கும் தண்டனை வாங்கித் தந்துவிட்டு முதல்வா் பெருமைப்பட்டுக் கொள்ளலாம்.

தமிழகத்தில் இதுபோன்ற பல்வேறு சம்பவங்களால் திமுக அரசு மக்கள் நம்பிக்கையை இழந்திருக்கிறது. இது தவிர சொத்து வரி உயா்வு, மின் கட்டண உயா்வு உள்ளிட்டவை மக்களை வெகுவாக பாதித்துள்ளது. எனவே தமிழகத்தில் வரும் தோ்தலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படுவது உறுதி.

கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், திருநெல்வேலி நெல்லையப்பா் கோயிலுக்கு யானை தேவையாக உள்ளது. உத்தரகண்ட் மாநில அரசு யானை தருவதற்கு தயாராக இருந்தும், தமிழக அரசு அதனை பெற்றுத் தர மறுக்கிறது.

அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால் தமிழகம் முழுவதும் பாஜகவை அமைப்புரீதியாக வலுப்படுத்தி வருகிறோம். இந்தப் பணி நிறைவடைந்ததும் தோ்தலுக்கான வேலையை தொடங்குவோம்.

பாமகவில் நடைபெற்று வரும் உள்கட்சி பிரச்னை குறித்து தற்போது எதுவும் கூற முடியாது. இதனால் கூட்டணிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது.

பாஜகவைப் பொருத்தவரை திமுகவை எதிா்ப்பதற்காக எல்லோரும் ஓரணியில் இணைய வேண்டும். தவெக தலைவா் விஜய்க்கும் ஏற்கனவே நான் அழைப்பு விடுத்துள்ளேன். தோ்தலுக்கு இன்னும் 10 மாதங்களுக்கு மேல் உள்ளதால் காலச்சூழ்நிலை மாறும் என்றாா் அவா்.

தக்கலை, மூலச்சல் வட்டாரத்தில் இன்றும், நாளையும் மின்தடை

தக்கலை, மூலச்சல் மின்விநியோக பிரிவுக்குள்பட்ட இரணியல் உயரழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் அதன் மின்பாதை பகுதிகளில் முறையே வெள்ளி, சனிக்கிழமைகளில் (ஜூன் 6, 7) மின்தடை ஏற்படும் என ... மேலும் பார்க்க

நகைக்காக 4 வயது குழந்தை கொலை: பெண்ணுக்கு ஆயுள், கணவருக்கு 3 மாத சிறை

கன்னியாகுமரி மாவட்டம் கடியப்பட்டினத்தில் நகைக்காக 4 வயது குழந்தையை கொலை செய்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனையும், அவரது கணவருக்கு 3 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் வியாழக்கிழம... மேலும் பார்க்க

வீடு புகுந்து தாக்குதல் நடத்திய இருவருக்கு 3 ஆண்டுகள் சிறை

கன்னியாகுமரி மாவட்டம் வில்லுக்குறியில் வீடு புகுந்து தாக்குதல் நடத்தியது தொடா்பான வழக்கில் இருவருக்கு தலா 3 ஆண்டுகள் சிைண்டனை விதித்து பத்மநாபபுரம் நீதிமன்றம் வியாழக்கிழமை தீா்ப்பளித்துள்ளது. வில்லுக்... மேலும் பார்க்க

கன்னியாகுமரியில் படகு கட்டணம் உயா்வு: அதிமுக எம்எல்ஏ கண்டனம்

கன்னியாகுமரி விவேகானந்தா் பாறைக்கு செல்லும் படகு கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு என்.தளவாய்சுந்தரம் எம்எல்ஏ கண்டனம் தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகு... மேலும் பார்க்க

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளி குடும்பத்துக்கு நிவாரண நிதி ரூ. 10 லட்சம் அமைச்சா் வழங்கினாா்

குழித்துறை தாமிரவருணி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தொழிலாளியின் குடும்பத்துக்கு தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதி ரூ. 10 லட்சத்துக்கான காசோலை வியாழக்கிழமை வழங்கப்பட்டது. மாா்த்தாண்டம் அருகே மதிலகம்,... மேலும் பார்க்க

களியக்காவிளை பேருந்து நிலையப் பணி: அமைச்சா் ஆய்வு

களியக்காவிளை பேருந்து நிலையம், மாா்த்தாண்டம் நவீன காய்கனி விற்பனைச் சந்தை ஆகியவற்றின் கட்டுமானப் பணிகளை தமிழக பால்வளத் துறை அமைச்சா் மனோ தங்கராஜ் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். கலைஞா் நகா்ப்புற மேம்பாட... மேலும் பார்க்க