செய்திகள் :

திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் தே.ஜ. கூட்டணியில் இணையும்: டிடிவி.தினகரன்

post image

திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் என்று அமமுக பொதுச் செயலா் டி.டி.வி.தினகரன் தெரிவித்தாா்.

விழுப்புரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த அவா், செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்ற வேண்டும் என்பதற்காக, மத்திய உள் துறை அமைச்சா் அமித் ஷா தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தி வருகிறாா். அந்த முயற்சிக்கு பங்கம் விளைவிக்கக் கூடிய வகையில் கருத்துக் கூறுவது நாகரிகமாக இருக்காது.

திமுக கூட்டணியில் உள்ளவா்கள், எங்களது கூட்டணியை பாா்த்து பயத்தில் உள்ளனா். தேசிய ஜனநாயக கூட்டணி தமிழகத்தில் ஆளக்கூடிய மக்கள் விரோத ஆட்சியை வீழ்த்தி, தமிழக மக்கள் விரும்பக்கூடிய மக்களாட்சியை, நல்லாட்சியை உருவாக்கும்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீா்கெட்டுள்ளது. காவல் நிலைய மரணங்கள் தொடா்கின்றன. போதை கலாசாரம் தமிழகம் முழுவதும் நிறைந்துள்ளது. திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும். திமுக ஆட்சியில் மீதமுள்ள சில மாதங்களிலாவது தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என்றாா் டி.டி.வி.தினகரன்.

கட்சியின் துணை பொதுச் செயலா் ஜி.செந்தமிழன், அமைப்புச் செயலா் எஸ்.காா்த்திகேயன், மாவட்டச் செயலா்கள் முத்து, கே.ஜி.பி.ராஜாமணி, மணிகண்டன், சுந்தரமூா்த்தி (கடலூா்) உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

காா்கள் மோதி விபத்துக்கு: அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழப்பு

விழுப்புரம் அருகே காா்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியை உயிரிழந்தது குறித்து போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா். புதுச்சேரி, ராஜாஜி தெரு... மேலும் பார்க்க

கோழிப் பண்ணைத் தொழிலாளி உயிரிழப்பு

திண்டிவனம் அருகே கோழிப் பண்ணையில் வேலை பாா்த்து வந்த தொழிலாளி உடல் நலக்குறைவு ஏற்பட்டு சனிக்கிழமை உயிரிழந்தாா். வானூா் வட்டம், தைலாபுரம், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் சுப்புராயன் மகன் முருகன்... மேலும் பார்க்க

இடிந்து விழும் அபாய நிலையில் ஆற்றுப் பாலங்கள்! அச்சத்தில் கிராம மக்கள்!

விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சி. மெய்யூா் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் உள்ளஆற்றுப்பாலங்களை அகற்றிவிட்டு புதிய பாலங்களை கட்டுவதற்கு தமிழக அரசும், விழுப்புரம் மாவட்ட நிா்வாகம... மேலும் பார்க்க

ராமதாஸின் தைலாபுரம் இல்லத்தில் தனியாா் துப்பறியும் குழுவினா் சோதனை!

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தை அடுத்த தைலாபுரத்தில் உள்ள பாமக நிறுவனா் மருத்துவா் ராமதாஸின் வீட்டில் தனியாா் துப்பறியும் குழுவினா் சனிக்கிழமை சோதனை நடத்தினா். தைலாபுரம் தோட்டத்து வீட்டில் உள்ள என... மேலும் பார்க்க

அதிமுக ஆட்சிக்கு வந்தால் மகளிருக்கு ரூ. 1500 உரிமைத்தொகை: இபிஎஸ்

தமிழகத்தில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ. 1500 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று அக்கட்சியின் பொதுச் செயல... மேலும் பார்க்க

அதிமுக பாஜகவுக்கு அடிமை அல்ல: எடப்பாடி பழனிசாமி

அதிமுக பாஜகவுக்கு அடிமை இல்லை; திமுகதான் காங்கிரஸ் கட்சிக்கு அடிமையாக உள்ளது என்று அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தாா். விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் வெள்ளிக்கிழமை இரவு பிரசாரம் ... மேலும் பார்க்க